சிறார் நலம்
குழந்தைகள் குறித்து ஒரு தொடர் உரையாடலில் மாபெரும்
தத்துவ கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்களின் குழந்தை பற்றிய கவிதையை நாம் உரையாடல் பொருளாக
எடுத்துக் கொள்கிறோம்.
கலீல் ஜிப்ரான் போன்றதொரு
மகாகவியினுடைய கவிதையை நாம் வாசிப்பதற்கு முன்பு அந்த கவிஞன் தன்னை என்னவாக வைத்திருக்கிறான்.
நமக்கு என்னவெல்லாம் சொல்லவிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்வதற்கு சில முன் தயாரிப்புகளை
நாம் செய்து கொள்வது நல்லதென்று கருதுவதுண்டு.
ஒரு பொதுவான தகவல் தெரிந்து
கொள்வது போல செய்திக் குறிப்பை படித்து கடந்து விடுவது போல ஒரு மகாகவியின் கவிதையை
நாம் கடந்து விடுவதாகாது. கடந்து விடுவதற்கும் வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு எளிய வடிவத்தில்
எல்லா எழுத்துக்களையும் கடந்து செல்வது போல ஒரு மகாகவியின் கவிதைகளையும் கடந்து செல்வோம்
என்றால் அந்தக் கவிதை முன்வைக்கிற, கவிதைக்குள் இருக்கிற ஒன்றை நாம் தவறவிட்டவராவோம்.
அந்தவகையில் ஒரு மகாகவியின் கவிதையை நாம் படிப்பதற்கு முன்பு அந்தக் கவிதைக்கு முன்
தயாரிப்பாக நாம் ஒன்றை செய்து கொள்வது நல்லதென்று நான் நினைக்கிறேன்.
எல்லா கவிதைகளுக்குள்ளும் இப்படியான முன் தயாரிப்பு அவசியமில்லை என்றாலும் சில கவிதைகளில் உள்ளமைப்பை புரிந்து கொள்வதற்,கு சில கவிஞர்களின் வெளிப்பாட்டை புரிந்து கொள்வதற்கு நாம் ஒரு முன் தயாரிப்போடு செல்வது பொருத்தமானதாக இருக்கும்.
குழந்தைகள் என்ற தலைப்பில்
குழந்தைகள் குறித்து ஒரு மகாகவியின் கவிதை உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல
என்று துவங்குகிறது. உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்பதன் பொருள், உங்கள்
குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்பதன் உட்கருத்து - குழந்தைகள் யார் என்பதை ஒவ்வொருவரும்
ஒரு சரியான இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்பதை வைத்து துவங்குவதிலிருந்து பொருத்தமானதாக
இருக்கும்.
மேலும் குழந்தைகள் பற்றி
நமக்கு இருக்கிற தனித்தனியான, பொதுவான அனுபவங்களிலிருந்து இந்தக் கவிதையை அணுகுகிற
போது இந்த கவிதையின் உட்கரு நமக்கு புலப்படாமல் போவதற்கு அநேக வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகளை நாம் முழுமையாக புரிந்து கொண்ட சமூகமாக இன்னும் இல்லை. குழந்தைகளை முழுமையாக
புரிந்து கொள்வதற்கு என்று நாம் பேசிப் பார்க்கிற போது நாம் எவ்வாறு குழந்தைகளை பார்க்கிறோம்
என்று குழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன கருத்துக்கள் முன்முடிவுகள் இருக்கிறதோ அதுவே
குழந்தைகளுடைய இயல்பாக நாம் கருதிக் கொள்கிறோம்.
குழந்தைகள் காலை நேரத்து
பட்டாம்பூச்சிகள் போல் காலை நேரத்தில் தெரிகிற போது, நாம் நினைக்கிற போது குழந்தைகள்
அவ்வாறே தெரிகிறார்கள். ஒரு திருமண வீட்டில் ஒரு கொடுமையான எதைப்பற்றியும் கவலைப்படாத
சாகசக்காரனைப் போல் குழந்தைகளை நாம் நினைக்கிற போது அந்தக் கூட்டத்தின் மத்தியில் அவர்கள்
அவ்வாறே தெரிகிறார்கள். நாம் எவ்வாறு நினைக்கிறோமோ குழந்தைகள் அவ்வாறே தெரிகிறார்கள்
என்பதை நாம் பார்க்க முடியும்.
ஆனால் குழந்தைகள் அவ்வாறு
தான் இருக்கிறார்களா என்ற சரியான நிலையிலிருந்து குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள்
என்கிற புரிதலில் இருந்து நாம் இந்த இடத்தை, குழந்தை பற்றிய புரிதலை கலீல் ஜிப்ரான்
போன்றதொரு கவிஞரின் கவிதையை துல்லியமாக வாசிக்கவும் உணரவும் குழந்தைகள் குறித்து நாம்
புதிய ஒன்றைத் தேடிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் என்ன சொல்ல
வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆகும் முயற்சியை குழந்தைகள் என்னவாக இருக்கிறார்கள்
என்பதை குழந்தைகள் நிலையிலிருந்து உணர்வதற்கு ஆகும் முயற்சியை நான் இந்த கவிதைக்குறிய
முன் தயாரிப்பாக கூறுகிறேன்.
குழந்தைகள் எப்போதும் பார்ப்பவர்க்குரிய
எல்லாவற்றையும் பார்ப்பவர்க்குரிய கருத்தோடு பார்ப்பவர்க்குரிய சிந்தனை ஓட்டத்தோடு
நிகழ்கிற எல்லாவற்றையும் பிரதிபலிப்பவர்களாவே
இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடியும். நீங்கள் பூவைப்போல் குழந்தையை பார்த்தால்
பூ போல் தெரிவார்கள். நீங்கள் தோட்டத்தைப் போல், மின்மினிப் பூச்சிகளைப் போ,ல் மீன்கள்
போல் பட்டாம்பூச்சிகள் போல், வேகமான மனிதனைப் போல், அரக்கன் போல், சாகசக்காரன் போல்,
புத்திசாலி போல் எப்படி ஒரு குழந்தையை நீங்கள் பார்க்க விரும்பினாலும் அந்தப் பிரதிபலிப்பு
குழந்தைகளுக்குள் தெரியத்தான் செய்யும்.
ஆனால் உண்மையில் குழந்தைகள்
எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை நம் கண்டுபிடிப்பதற்கான உரையாடல் அவசியமாகிறது. ஒரு இரண்டு வயது குழந்தை ஒரு இளம் தாய் இவர்களுக்கு
இடையே நடக்கிற உரையாடல் உதாரணமாக நாம் பேசவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இரண்டு வயது குழந்தை எப்போதும்
தண்ணீரில் விளையாடும் ஆர்வம் உள்ள பெண் குழந்தை. எப்போதும் தண்ணீரில் விளையாடும் ஆர்வமுள்ள
குழந்தைக்கு தாயுடன் ஒரு உரையாடல் ஏற்படுகிறது. அந்தக் குழந்தை சொல்கிறது - நான் தண்ணீரில்
விளையாட வேண்டும் என்று மழலை மொழியில் தாயிடம். தாய் மறுக்கிறாள். குழந்தை மறுபடியும்
வலியுறுத்துகிறது. மீண்டும் தாய் மறுக்கிறாள். இது ஒரு விளையாட்டு போல தொடர்ந்து நிகழ்கிறது.
தாய் மறுப்பதும் குழந்தை கேட்பதும் ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு தாய் கோபமாகிறாள்.
குழந்தை அழுகிறது. நான் விளையாட வேண்டும் என்று
குழந்தை அழுத்தம் கொடுக்க அந்த வேகத்தில் குழந்தையினுடைய சத்தமும் அழுகையும் கோபமும்
வெளிப்படுகிறது. ஒரு 20 நிமிடம், அரை மணி நேரத்திற்குப் பிறகு அந்தத் தாய் எனக்கு அழைக்கிறாள்.
அரைமணி நேரமாக குழந்தை இப்படி ஒரு அழுகையோடு ஒரு போராட்டத்தை என்னோடு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
என்று எனக்கு அழைக்கிறாள். நான் குழந்தையை தண்ணீரில் விளையாட அனுமதிக்குமாறு தாயிடம்
கேட்டுக் கொண்டேன். என் வார்த்தையின் பொருட்டு அந்தத் தாய் குழந்தையை தண்ணீரில் விளையாட
அனுமதிக்கிறாள். இப்போது என்ன நடக்கிறது என்று
அந்த தாயிடம் கேட்ட போது அந்த தாய் கூறியது குழந்தை எவ்வாறு இருக்கிறார்கள் என்பதற்கான
பெரும் சாட்சி .
பெரும் அழுகையோடு, பெரும்
போராட்டத்தோடு, பெரும் சண்டையோடு குழந்தை இறங்கி அந்த தண்ணீர் பாத்திரத்திற்குள் குதித்து
விளையாடி அழுகையும் சிரிப்புமாக அந்த தண்ணீரின் ஆனந்தத்தை ஆராதித்து கொண்டிருக்கிற
போது தாயை பார்த்து சொல்கிறது அம்மா நீயும் விளையாடவா என்று.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment