கற்றல் நலம் – உரையாடல் 2
இரண்டு வேறு நபர்களுக்கு வெப்பத்தை தாங்குகிற,
குளிரை தாங்குகிற உடல் தகவமைப்பு எல்லை வேறுபட்டு
இருக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டு வேறு நபர்களும் இரவெல்லாம் உறங்குகிற போது, இரண்டு
வேறு நபர்களும் தன்னுடைய வெப்பநிலையை கவனத்தில் வைத்துக்கொண்டு தம் அனுபவ அறிவில் இருந்து
ஒருவர் தமக்கு போர்த்திக் கொள்வார். ஒருவர் தம் போர்வையை விலக்கிக் கொள்வார். இரண்டிற்கும்
வாய்ப்பு இருக்கிறது. இரண்டு விதமான கற்றலும் நியாயமானது. இரண்டு விதமான செயல்பாடும்
அவரது முந்தைய உடல் ரீதியான பாதுகாப்பு அனுபவங்களிலிருந்து, பாதுகாப்பு செயல்முறைகளில்
இருந்து, தகவமைப்பு முயற்சியிலிருந்து, வெப்ப பராமரிப்பு முயற்சியில் இருந்து நிகழ்வது.
இந்த இரண்டு வேறு செயல்முறையும் இரண்டு வேறு வகையான கற்றல். இந்த இரண்டு வேறு வகையான
கற்றலை நாம் புரிந்து கொள்வதும் நாம் ஏற்றுக் கொள்வதும் சீர்தூக்கி பார்ப்பதும் மதிப்பிற்குரியது.
இது கற்றலில் இருக்கிற மிக நுட்பமான பகுதிகளில் ஒன்று.
கற்றல் என்றவுடன் நாம் பொதுவாக வைத்திருக்கிற
மன வடிவத்தில் இருக்கிற, சமூக வடிவத்தில் இருக்கிற வரையறுக்கப்பட்ட கற்றலாக நாம் இதைச் சுருக்கக் கூடாது.
அந்த சுருக்கத்தின் பாற்பட்டு இருக்கிற சிக்கல்களை நாம் பேச வேண்டும் என்பதனாலேயே இந்த
உரையாடல்.
கற்றல் இரு வேறு நபர்களுக்கு ஒரே சூழலில் இரு
வேறு விதமான செயலாக நிகழ வாய்ப்பு இருக்கிறது. நிகழ்கிறது. உங்கள் வீட்டு அறையில் இருக்கிற
வெப்பத்திற்கு இரண்டு வேறு நபர்கள் உள்ளாகிறார்கள் என்றால் ஒருவருக்கு அந்த வெப்பம்
போதுமான வெப்பமாகவும் மற்றவருக்கு அந்த வெப்பம் கூடுதல் வெப்பமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதுக்குரிய பராமரிப்பு நடவடிக்கையை இருவரும் வேறுவேறு விதமாக செய்து கொள்வார்கள் என்பதையும்
நீங்கள் பார்க்க முடியும். இந்த இரண்டு வேறு நபர்களுடைய செயல்பாடும் கற்றல் வகைப்பட்டதே.
என் உடலுக்கு குளிர்கிறது. என் உடலின் வெப்பத்தை, என் உடலில் கதகதப்பை நான் பேணிக்கொள்ள வேண்டும் என்று போர்த்துகிற நிகழ்வும் இந்த குளிர் எனக்கு போதுமானது. எனக்கு போர்த்திக்கொள்வதற்கு எதுவும் வேண்டியதில்லை. ஒருவேளை நான் போர்த்தினால் இந்த தட்பவெப்பம் எனக்கு அசௌகரியமானதாக தொந்தரவானதாக மாறிக்கொள்ளும் என்கிற கவனத்திலிருந்து போர்த்தாமல் இருப்பதும் அவரவர் கற்றலின் வகைப்பட்டதே. அவரவர் அனுபவத்தின் வகைப்பட்டதே. இந்த இரண்டு வேறு அனுபவத்தையும் கற்றலாக பார்க்கிற பார்வை கற்றல் குறித்து பார்க்கிறபோது நமக்கு வேண்டும். இந்த வகைப்பட்ட கற்றலை பார்ப்பதன் வழியாக மட்டுமே வரையறுக்கப்பட்ட கற்றலில் நிகழ்கிற சிக்கல்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு மனிதனுக்கு குளிர் ஏற்படுகிற போது, குளிர்
அதிகமாகிற போது அவர் தன் உடல் வெப்பத்தை பராமரித்து கொள்வதற்காக போர்வையைப் போர்த்திக்
கொள்ளலாம் என்பதை பாடத்திட்டமாக வகுத்தோம் என்றால் அவருக்கு அதை கற்றுக்கொடுக்க வேண்டும்
என்று முடிவு செய்தோம் என்றால் ஒரு குழந்தைக்கு பாடத்திட்டம் வகுத்துக்கொண்டு நாம்
இதை செய்தோம் என்றால் சிக்கல்களை பார்க்க முடியும். வகுப்பிற்கு வருகிறது ஒரு குழந்தை.
அந்த குழந்தைக்கு நாம் உன் உடலை பாதுகாக்க வேண்டும். உன் உடலில் ஒரு குறிப்பிட்ட வகையான
தட்பவெப்பம் பராமரிக்கப்பட வேண்டும். அது உன் உடலை, உன் உடலுக்கும் உயிருக்குமாக இருக்கிற
இயக்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கை என்றெல்லாம் பாடம் நடத்திவிட்டு உடலைப் பாதுகாப்பதற்காக
நீ இத்தனை ஃப்பாரன்ஹீட், இத்தனை செல்சியஸ் வெப்ப நிலை மாறும் போது நீ போர்த்திக் கொள்ள
வேண்டும் என்று பாடதிட்டத்தில் பரிந்துரையாக, அறிவாக கற்கும் முறையாக, கற்றலாக புகுத்தினோம்
என்றால் அந்தக் குழந்தை வீட்டுக்கு சென்றவுடன் அந்த வீட்டில் இருக்கிற வெப்பமானியின்
அளவின்படி அவர் அந்த வெப்ப நிலையை எட்டிய உடனே அவர் ஒரு போர்வையை எடுத்து போர்த்தி
கொள்வார், கற்றதை செய்து பார்ப்பார் என்றால் அவர் போர்த்திக்கொண்டவுடன் அவர் உடலுக்குள்
இருக்கிற தட்பவெப்பமானது முழுக்க மாறுபட்டு வியர்வையாக, மூச்சுத்திணறலாக, உயிர் அவஸ்தையாக
மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிற பாடத்திட்ட முரணை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
கற்றல் என்பது பாடத் திட்டத்தின் வழியாக செய்வதாக
முடியாது. பாடத்திட்டத்தின் வழியாக செய்யப்படுகிறது
செய்யப்படுவது கற்றலாக முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில், தன் முந்தைய அனுபவத்திலிருந்து
பெற்றுக் கொள்கிற ஒன்றை பெற்றுக்கொண்ட அனுபவத்தின் வாயிலாக மறுசீரமைப்பு செய்து கொள்வதின்
வழியாகவே கற்றல் நிகழ்கிறது. பாடத்திட்டத்தில் செய்வது முறையாகாது. இன்றும் கூட உடல் அறிவியலை பொதுமைபடுத்துகிற போது
கற்றல் குறித்தான சிக்கல் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இத்தனை உயரம் உள்ள ஒருவர்
இத்தனை நீளம் உள்ள கை பெற்றவராக இருக்க வேண்டும் என்று ஒரு அறிவியல் கோட்பாடை, சராசரி
குறியீடை நாம் முன் வைத்தோம் என்றால் அவர் உயரத்திற்கும் அவர் கைக்கும் அவர் உயரத்திற்கும் அவரது கால் அளவிற்கும் அவர் உயரத்திற்கும் நிறத்திற்கும் பொருத்தம்
இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இத்தனை உயரமுள்ள, இத்தனை எடை கொண்ட ஒருவர்
இவ்வளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு பாடத்திட்ட வரையறையை செய்தோம் என்றால்
தர்க்கபூர்வமாக அவற்றை செயல்படுத்தினோம் என்றால் பொருந்தாது.
குறிப்பாக கனத்த உடல் நிலை உள்ள ஒருவருக்கு,
பருமனான உடல் நிலை உள்ள ஒருவருக்கு தினமும் ஒரு 200, 300 கிராம் உணவு கொடுக்க வேண்டும்
என்று நீங்கள் தீர்மானித்தால் எல்லா பருமனான உடல் உடையவர்களும் 300 கிராம் உணவை எடுத்துக்கொள்ளும்
உடல்வாகு பெற்றவர்களாக இருப்பதில்லை. பருமனான நபருக்கு அதிக உணவு, மெலிந்த நபருக்கு
குறைந்த உணவு என்று ஒரு தர்க்கத்தை வைத்துக்கொண்டு மெலிந்த உடல் எடை உள்ளவர் 100 கிராம்
எடுத்துக்கொண்டாலே போதும் என்று பாடத்திட்டத்தில் அறிவை, கற்றலை செயல்படுத்தத் தொடங்கினோம்
என்றால் மெலிந்த உடல் நிலை உள்ளவர்கள் கூடுதல் உணவு தேவைப்பட்டால் என்ன செய்வது? ஆக, ஒரு சராசரி வரையறைக்குள் இருந்து உடலை,
உடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேசுகிறபோது பாடத்திட்டத்திலிருந்து பேசுகிறபோது அது
கற்றலாக மாறுவதில், கற்றலாக செயலி உருவாக்கம் பெறுவதில் பெரிய சிக்கலை சந்திக்கிறது
என்பதை நாம் பார்க்க முடியும்.
அந்த வகையில் கற்றல் தொடங்குகிற இடத்தில்,
உடல் அறிவியலும் உடல் இயங்கு முறையும் அதை சார்ந்து இருக்கிற அறிவும் அதை சார்ந்து
இருக்கிற நிதானமும் மிக முக்கியமான கற்றலுக்கான குறியீடாக நாம் பார்ப்பதில்லை. நவீன
சமூகம் அவற்றை இழந்து வருகிறது.
மருத்துவத்தை, உடல்நலத்தை கற்றல் பாற்பட்டு
செயல்படுத்துவதற்கு, முன்வைப்பதற்கு இந்த சமூகம் அவசரத்தை பேணுகிறது. இந்த சமூகத்தில்
உடலை உயிரை பார்ப்பது சொந்தக் கற்றலாக இருப்பது என்கிற நிதானத்தில் இருந்து விலகிச்
செல்கிற ஒரு கவலையான நிலை என்பது வளர்ந்து வருகிறது.
நவீன மருத்துவத்தின் ஆய்வுகளுக்குப் பிறகு,
நவீன மருத்துவத்தின் ஆய்வுகள் தலைகீழாக புரிந்து கொள்ளப்பட்டு உடலை சராசரி பொருளாக
மாற்றிக் கொண்டு குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட வகையான உணவை எடுத்துக்கொள்ள
வேண்டும் என்று பொதுமைப்படுத்துவது உடலின் சொந்த அறிவிற்கு உடலின் சொந்த கற்றல் நிதானத்திற்கு
எதிரானது. ஆக, ஒரு மனிதனின் சொந்த அறிவும் சொந்த உடல் நிதானமும் உடல் இயங்கும் முறையும்
அதற்கே உரிய அறிவு நுட்பமும் இருக்கிறது. அதுவே கற்றலாக நகர்கிறது என்கிற பார்வையோடு
பார்க்கிறபோது மட்டுமே உடல் குறித்தான கற்றல், உடலை சுற்றி இயங்குகிற கற்றல், உடல்நலம்
குறித்தான கற்றல் எல்லாமும் ஒன்றை ஒன்று இணைந்ததாக, பிணைந்தாக இருக்கிறது என்பதை நாம்
ஏற்றுக் கொள்ள முடியும். புரிந்து கொள்ள முடியும்.
நவீன கல்வி முறை, நவீன பாடத்திட்டங்கள் என்பதை
நாம் ஆராதிக்கிற போது அங்கீகரிக்கிற போது அவை வரையறுத்து வைத்திருக்கிற செயல்பாடுகளும்
அனுபவங்களுமே போதுமான கற்றலாக இருக்கிறது என்று நாம் முடிவு செய்தோம் என்றால் அவற்றை
நம்முள் பொருத்திப் பார்த்தோமென்றால் அவை நம் உடல் வைத்திருக்கிற மருத்துவ அறிவிற்கும்
இயங்குமுறை அறிவிற்கும் செரிமான அறிவிற்கும் நேர் எதிரான ஒன்றை செய்துவிடுகிறது. முரணான
ஒன்றை செய்து விடுகிறது. ஆபத்தான ஒன்றை செய்து விடுகிறது என்பதை பார்ப்பதில் நமது கற்றல்
நலம் ஒளிந்திருக்கிறது.
கற்றல் என்பது உடலுக்குள் நம் கவனத்திற்கும்
கவனமின்மைக்கும் கவனத்தின் அப்பாற்பட்ட நிலைக்குமான ஒரு உணர்வாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதை
நாம் பார்க்கத்தான் வேண்டும். அது மருத்துவமாக, உடல் இயங்கு முறையாக, உடலின் இயங்கு
நுட்பமாக, உடலின் செயல்பாட்டு வடிவமாக, உடலிற்கும் மனதிற்கும் இருக்கிற அனுபவ சேகரிப்பாக
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இது பாடத்திட்டத்திற்குள் சராசரி வரையரைக்குள் பொருந்தாது
என்பதெல்லாம் கூட மிக முக்கியமான கற்றல் தளமாக இருக்கிறது. இந்த கற்றல் தளத்திலிருந்து நாம் பார்க்கிற போது
மட்டுமே மெய்யான கற்றல் என்பது தனித்தனி அனுபவமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும்
மெய்யான கற்றல் என்பது தனித்தனியான அனுபவத்தின், செயல்பாடுகளின் விளைவாக நிகழ்கிறது
என்பதையும் நம்மால் பார்க்க முடியும். அதை செய்து பார்க்க முடியும். அதற்குள் ஏற்படுகிற
முரணை மீண்டும் சீர்தூக்கிப் பார்க்கவும் செம்மை செய்துகொள்ளவும் முடியும் என்கிற ஒரு
விரிந்த தளம் கற்றலுக்குள் உடல் சார்ந்து இருக்கிறது. உடல் சார்ந்து இருக்கிறது என்பதை
ஏற்றுக் கொள்வதன் வழியாகவே இன்றைய மருத்துவங்கள் பாடத்திட்டங்கள் வழியாக மனிதனைப் படிப்பது போதுமானது இல்லை என்கிற உடல்சார்ந்த கற்றலுக்கு
புரிதலாக ஒரு முடிவக்கு வர முடியும் நம்மால்.
No comments:
Post a Comment