குழந்தைகள் விரைந்து குணமடைகின்றனர்
பிறந்த
குழந்தைக்கு கடந்த காலம் என்பதே கிடையாது. அந்தக் குழந்தை முதல் முதலாக இந்த உலகை பார்க்கிறது.
அந்த குழந்தை முதன்முதலாக தன் சுற்றுச் சூழலை நுகர்கிறது. அந்த குழந்தை முதன்முதலாக
இந்த உலகத்தோடு இணைவதற்கு கைநீட்டுகிறது. இவை எல்லாமும் அந்தக் குழந்தைக்கு முன்னால்
இருக்கிற, அந்த குழந்தை கடந்து வந்திருக்கிற எந்த நினைவு குறிப்பில் இருந்தும் அந்த
குழந்தை இயங்கவில்லை என்பதால் மட்டுமே சாத்தியமாகிறது.
இது
குழந்தையினுடைய உயிரியல் இயக்கத்தின் எதார்த்தம் என்றாலும் கூட இத்தகைய வெகுளித்தனம்
ஆரோக்கியத்தின் திறவுகோல். இந்த வெகுளிதனமே அந்த குழந்தைக்கான இயல்பை மகிழ்வை கொண்டு
வந்து சேர்க்கிறது. இந்த வெகுளித்தனம் முன்முடிவு இல்லாத தன்மைதான் ஒவ்வொரு மனிதனுக்கும்
அவசியமாக இருக்கிறது. சில 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நாடு இன்னொரு நாட்டின் மீது
போர் தொடுத்து விட்டது என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இன்று இரண்டு நாடுகள் சண்டையிடுவதை
நாம் பார்க்கிறோம். இந்த மனிதன் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டில் இருக்கிற
ஒருவரை தாக்கி விட்டார் என்று கருதிக்கொண்டு அந்த நினைவுகளை சுமந்து கொண்டு இன்று இரண்டு
மனிதர்கள் சண்டையிடுவதை, மோதிக் கொள்வதை நாம் பார்க்க முடிகிறது.
இவை எல்லாமும் சமூக நோய்களாக, நாம் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்கள் நீங்குவதற்கு என்ன செய்வது. இந்த நோய்களை கடந்து போவதற்கு என்ன செய்வது என்று ஆய்வுகள் செய்தோம் என்றால் இவையாவும் அமைதியின் பெயரால், மௌனத்தின் பெயரால், ஆன்மீகத்தின் பெயரால், நல்லிணக்கத்தின் பெயரால் தற்காலிகமாக தள்ளி போடப்படுகின்றன. ஆனால் நிரந்தரமாக இவை ஒரு முடிவுக்கு வருவதற்கான வழியில் செல்வதில்லை. காலங்களும் காட்சிகளும் மாறுகிறபோது நினைவு குறிப்புகள் அப்படியே இருக்கின்றன. ஒரு குழந்தையின் நினைவு குறிப்பிலிருந்து பார்க்கிறபோது இத்தகைய தன்மையோடு குழந்தைகள் இயங்குவதில்லை, இருப்பதில்லை.
ஒவ்வொரு
மனிதனும் தன்னளவில் மகிழ்வாக இருப்பதற்கு அவன் நோயில்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் உற்சாகமாக இருப்பதற்கு
அவன் நோயில்லாமல் இருக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று இன்று சமூகத்தில்
நாம் தீர்மானித்தாலும் கூட எளிய வாழ்க்கை வாழ வேண்டும் என்று இன்று நம் சமூகத்தில்
முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்றாலும் கூட நமக்கு தேவைப்படுவது மன அமைதி. மன
அமைதிக்கு முதன்மையாக இருப்பது உடல்நலம். உடல் நலத்தை செம்மையாக வைத்திருக்கிற போதுதான்
நீங்கள் உங்களது காலை உணவை ஒழுங்காக உட்கொள்ள முடியும். உங்களுக்கு சிறப்பாக சிறுநீர் கழிக்கவும் மலம் கழிக்கவும்
உடல் ஒத்துழைக்க உங்கள் உடல் நலம் உங்களுக்கு முக்கியம். மிக எளிய வாழ்க்கை வாழ்பவராகக்
கூட இருக்கலாம். மிக அரிதான வாழ்க்கை வாழ வாய்ப்பு பெற்றவராகக் கூட நீங்கள் இருக்கலாம்.
எவ்வாறு இருந்தாலும் மிக அடிப்படையில் நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்பது முதன்மையானது.
நீங்கள் நலமாக இருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு நோய்கள் ஏற்படாமல் இருக்குமாறு
நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இயற்கையாகவே
மனிதர்களுக்கு மருத்துவங்கள் உதவி செய்கின்றன என்கிற ஒரு படி நிலையிலிருந்து பார்ப்பதை விடுத்து ஒவ்வொரு
மனிதனும் தன்னளவில் தன்னை நலப்படுத்திக் கொள்வதற்கு வல்லமை கொண்டவனாக இருக்கிறான் என்று
மரபுசார்ந்த மருத்துவங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன.
1940களில்
ஒரு ஆங்கில புத்தகம் வெளிவந்தது. ஹென்றி மின்லர் என்கிற அமெரிக்க மருத்துவ நிபுணர்
இயற்கை வாழ்வியல் பற்றி இயற்கை மருத்துவம் பற்றி ஒரு புத்தகத்தை வடிவமைத்திருந்தார்.
இந்த புத்தகத்தில் அவர் முதன்மையாக பதிவு செய்த கருத்து உடலுக்கு தன்னைத்தானே நலப்படுத்திக்
கொள்ளும் ஆற்றல் பெருவல்லமையோடு இருக்கிறது என்பதை அந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார்.
இன்றுவரை உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் என்கிற செய்தியை இயற்கை வழிப்பட்ட
மருத்துவங்களும் நிபுணர்களும் ஆய்வாளர்களும் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே
இருக்கின்றனர். இது பதிவின் அடிப்படையில் அல்ல, உண்மையிலேயே இயல்பிலேயே நிஜமாக பார்க்கிறபோது
எல்லா உயிர்களுக்கும் எல்லா உடல்களுக்கும் தன்னைத்தானே சரி செய்து கொள்கிற வல்லமை இருக்கிறது
என்கிற பதிவை ஆவணப்படுத்துகின்றனர் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு
எல்லா உடலுக்கும் இருக்கிறது.
நீங்கள்
ஒரு பேருந்தில் செல்கிறபோது நீங்கள் காலை நீட்டி உட்கார வேண்டும் என்று உங்கள் கால்களை
நீட்டுகிற போது பேருந்து நாற்காலியின் கீழ் இருக்கிற ஒரு இரும்புத் துண்டு உங்கள் காலை
கீறிவிட்டது என்றால் உடனடியாக அதில் இரத்தம் வழிவதை நீங்கள் பார்க்க முடியும். ரத்தம்
வழிந்திருக்கும். அப்போது அதை சுத்தம் செய்வீர்கள். சிறிது நேரம் உங்கள் பயணம் தொடர்கிற
போது உங்கள் கவனம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கும். நீங்கள் மீண்டும் அடுத்தடுத்த
வேலைகளில் உங்களை இணைத்துக் கொள்கிறபோது நீங்கள் வீட்டிற்கு வந்து சேருகிற போது கிட்டத்தட்ட
உங்கள் காலில் இரும்புத்துண்டு, இரும்புத்துகள் கீறிய நியாபகம் உங்களுக்கு இல்லாமல்
போயிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு
நீங்கள் கால்களை பார்ப்பீர்கள் என்றால் உங்கள் கால்களில் இரும்புத்துண்டு கீறி இருக்கிற
சுவடு கூட இல்லாமல் போயிருக்கும். இந்தக் கீறலை குணப்படுத்தியது யார் என்று நீங்கள்
உங்கள் உடலைக் கேட்டு பார்க்க வேண்டும். இந்தக் கீறல் எவ்வாறு நலம் அடைந்தது?
இன்றும்கூட
வீட்டில் பெண்கள் சமையல் செய்கிற போது, காய்கறி நறுக்குகிற போது, ஒரு பாத்திரத்தை எடுத்து
வைக்கிற போது, வீட்டு வேலை செய்கிறபோது அவர்களது கைகளில், உடல் பாகங்களில் சூடுபட்டுக்
கொள்வதையும் அறுத்துக் கொள்வதையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூடுபட்ட
இடமும் அறுத்துக் கொண்ட இடமும் அந்த நேரத்தில் அவர்களுக்கு வழியையும் அசவுகரித்தையும்
ஏற்படுத்தினாலும் கூட அவர்கள் சமைக்கிற, வீட்டு வேலை செய்கிற மும்பரத்தில் அவற்றை கடந்து
போகின்றனர். பின்பு சில நாட்களுக்குப் பிறகு உடலில் ஏற்பட்டிருக்கிற அசவுகரியம் அதுவாக
சீராகி காயம்பட்ட இடங்களும் சூடுபட்ட இடங்களும் புதிய தன்மையோடு, புதிய தோளோடு, புதிய
உயிர்ப்போடு மலர்ந்து இருப்பதை மாறி இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அனுபவித்து
இருக்கிறார்கள். இது யார் ஒருவருக்கும் நடந்திருக்கும். ஒரு ஆண்மகன் முகச்சவரம் செய்கிறபோது
கன்னத்தில் காயம் ஏற்பட்டிருக்கும். ஒரு இளம்பெண்
தனது ஆடைகளை மடித்து வைப்பதற்கு சூடு பெட்டியை வைத்து மடித்துக் கொண்டிருக்கிற போது
ஏற்பட்டிருக்கிற சூட்டின் காரணமாக ஏற்பட்ட காயம் ஆறியிருக்கும். சமைக்கிற போது, நடக்கிறபோது,
கல் ஏற்படுத்திய காயங்கள் அதுவாகத் தோன்றி, அதுவாக மாறி இருக்கிற அனுபவம் ஒவ்வொருவர்
வாழ்விலும் வேறுவேறு நேரங்களில், வேறு வேறு பொருள்களில் நடந்து இருப்பதை நீங்கள் கடந்து
வந்திருப்பீர்கள். இத்தகைய காயங்கள் எவ்வாறு ஆறின என்று நீங்கள் ஆய்வு செய்தால் அந்த
காயங்கள் பற்றிய கவனத்தை, அந்த காயங்கள் பற்றிய சிந்தனையை சற்று ஒதுக்கி வைத்து விட்டு
மிக இலகுவாக முடிவுகள் இல்லாமல் கடந்து போகிற வேலைத் தன்மையை நீங்கள் பெற்றபொழுதில்
அது ஆறத் துவங்குகிறது.
உங்கள்
உடலில் ஏற்பட்டிருக்கிற எளிய விபத்து, அசவுகரியம், காயங்கள், தழும்புகள் உங்கள் கவனம்
உங்கள் சிந்தனையின் பாற்பட்டு வேறு திசையில் பயணிக்கத் துவங்கியவுடன் காயங்கள் குறித்து
உங்கள் முன்முடிவுகளும் அறியாமைகளும் மாறத் துவங்குகின்றன. இயல்பாகவே உடல் தன்னை சீராக்கிக்
கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. இந்த இயக்கத்தில் உடல் செய்கிற இந்த முயற்சியில்
உங்கள் மனதின் தலையீடு எதுவும் இல்லாமல் உங்கள் நினைவுகளில் குறிப்புகள் ஏதும் வழிகாட்டாமல்
இருக்கிறபோது மிக இலகுவாக உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது என்பதை நீங்கள் பார்க்க
முடியும். உணர முடியும். இத்தகைய உடலின் அசாத்தியமான குணப்படுத்தும் ஆற்றலை வெகுளித்தனங்களோடு
இருக்கிற குழந்தைகள் வழியாக நீங்கள் பார்க்க முடியும். குழந்தைகள் கீழே விழுகிற போது,
தன் எச்சிலை வைத்து துடைத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கீழே நடக்கிறபோது ஏற்பட்டிருக்கிற
வழியை வெறுமனே உள்ளங்கையையும் உள்ளங்காலையும் உரசித் தட்டி சரி செய்து கொள்கிறார்கள்.
குழந்தைகள் குதித்து விளையாடுகிற போது ஏற்படுகிற கால் மடங்கலை கால்களை உதறி சரி செய்து
கொள்கிறார்கள். இவை வெறுமனே அவர்கள் இயக்கத்தின் பாற்பட்டு விளைகிற நலமல்ல. அவர்கள்
வெகுளித்தனத்தின் பாற்பட்டு விளைகிற நலம். அவர்கள் உடலைப் பற்றி பொருட்படுத்துவதில்லை.
அவர்கள் உடலைப் பற்றி பெரிய கவனம் எடுத்துக் கொள்வதில்லை. உடலைப் பற்றி கவனம் எடுத்துக்
கொள்வதில்லை என்பதை நீங்கள் பொறுப்பற்றத் தனமாக பார்க்கக்கூடாது. உடலைப்பற்றி பெருகவனம்
எடுத்துக் கொள்வதில்லை என்பதற்கான பொருள் அவர்கள் உடலினுடைய நலம் பற்றி பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
அவர்கள் காயம் குணமாவதை பற்றி பொருட்படுத்துவதில்லை. அவர்கள் வெறுமனே காத்திருக்கிறார்கள்.
வெறுமனே இயல்பாக இருக்கிறார்கள். வெறுமனே முன்முடிவுகள் இல்லாமல் இருக்கிறார்கள். வெறுமனே
உடலோடு பயணிக்கிறார்கள். வெறுமனே இயற்கையாகவே இருக்கிறார்கள்.
தொடர்ந்து
குழந்தைகளின் நலமாக்கும் முயற்சியில், நலமாக்கும் கவனத்தில் என்னவெல்லாம் செய்கிறார்களோ
அவற்றை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகிற ஒவ்வொருவரும் செய்வது குழந்தைகளிடமிருந்து
நலம் அறிவதற்கான ஏதாவது ஒன்றை நாம் பெற்றுக்கொள்வதற்கான எளிய வழி.
தொடர்ந்து
பேசுவோம்...
No comments:
Post a Comment