இன்றைய மருத்துவம் பற்றி மக்களின் மனநிலை என்ன?
மக்கள் எந்த வகையான மருத்துவத்தை
விரும்புகிறார்கள்? எந்த வகையான மருத்துவத்தை தேடிச் செல்கிறார்கள்? மருத்துவம் என்பது
மக்களுக்கு இசைவானதாக இணக்கமானதாக எவ்வாறு அமைந்திருக்கிறது? என்று கேட்கப்படுகிற கேள்விகளின்
தொகுப்பாக இந்தக் கேள்வி இருக்கிறது.
மக்கள் எந்த வகையான மருத்துவத்தை
விரும்புகிறார்கள் அல்லது மருத்துவம் பற்றி மக்களினுடைய மனநிலை என்ன என்பது மிக முக்கியமான
பகுதி. ஒவ்வொரு மருத்துவம் குறித்தும் ஒவ்வொரு மருத்துவ ஆய்வுகள் குறித்தும் ஆய்வாளர்கள்,
அறிவியல் அறிஞர்கள், ஆவணம் சேகரிக்கும் ஆவணப்படுத்துகிற நபர்கள் என்று ஒவ்வொருவரும்
மருத்துவம் குறித்து ஆக்கபூர்வமான, விமர்சனப்பூர்வமான கருத்துக்களைத் தொகுத்து வைத்திருந்தாலும்
எல்லா மருத்துவமும் பயன்பாடு என்கிற அளவில் வேறுபட்ட நிலையை நடைமுறையில் வைத்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட வகையான மருத்துவ
பார்வை என்பது குறிப்பிட்ட வகையான அணுகுமுறை என்பது பொதுவாக சொல்லப்பட்டாலும் மருத்துவம்
இதற்காகத் தான் பயன்படுகிறது. மருத்துவத்தின் ஆழமான நோக்கம் மனித உயிரின், மனித உடலின்,
மனித மனநிலையின் நலத்தை மேம்படுத்துவதற்காக இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் நிரூபிக்கப்பட்டாலும்
பயன்பாட்டில் இருந்தாலும் கூட ஒரு மருத்துவத்தை தேர்வு செய்கிற மனம் எத்தகைய தன்மையோடு
இருக்கிறது என்பது நாம் காண வேண்டிய மிக முக்கியமான பகுதி. எந்த வகையான மருத்துவத்தை
மனம் விரும்புகிறது. ஏன் அவ்வாறு விரும்புகிறது என்பது மிக முக்கியமான பதிலாக மருத்துவம்
குறித்த பதிலாக அமையும்.
வாழ்வில் மருத்துவம் வாழ்வியல் தேவைக்காக உடல் நலம் சார்ந்த அறிவிலிருந்து, உடல் நலம் சார்ந்த தேடலில் இருந்து உருவாகியிருக்கக் கூடும். மருத்துவம் என்ற செயல்முறை கூட இல்லாமலேயே மருத்துவ ஆய்வுகளின் துவக்கம் ஆதிமனிதர்களிடையே இருந்திருக்கக் கூடும். இவையெல்லாம் யூகங்கள் தான் என்றாலும் பின்னால் மனித உடல் நலத் தேடலின் ஆய்வு, உடல் நலத் தேடலின் விளைவு இவை மருத்துவமாக மாறி இருக்கும் என்ற வரலாற்று செயல்பாடு நிகழ்ந்தாலும் மருத்துவம் என்பது ஒரு மனிதன் தன் உடலுக்குள் இருக்கிற உடலுக்கு தேவையான ஒன்றைப் பெற்றுக்கொள்கிற, நலம் கொண்டு இயங்குவதற்கு தேவையான ஒன்றை பெற்றுக்கொள்கிற ஒரு முயற்சி என்று மருத்துவம் துவங்கி இருக்கும். இந்த முயற்சியில் எனக்கு நலம் தேவைப்படுகிறது. எனக்கு நலக்கேடு நீங்க வேண்டும். எனக்கு வளமை பெற வேண்டுமென்று நான் விரும்புகிற என் சுயமான நியாயத்திலிருந்து சுயமான தேவையிலிருந்து ஒன்றை பூர்த்தி செய்வது என்கிற அளவிலேயே மருத்துவம் இருந்திருக்கும்.
இந்த மனம் எனக்கான ஒன்றை நான் தேர்வு செய்து கொள்ள
வேண்டும்; எனக்கான ஒன்றை நான் ஆக்கிக் கொள்ள வேண்டும்; எனக்கான ஒன்றை நான் பூர்த்தி
செய்ய வேண்டும் என்கிற ஒரு இயந்திர இறங்கு முறையில் ஒரு மனிதனினுடைய அடிப்படை மருத்துவ
துவக்கம் என்பது இப்படித்தான் துவங்கி இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ஒரு மனிதன் என் தேவைக்கு
நான் உணவு உட்கொள்கிறேன். என் உணவு அதிகமாக வேண்டுமென்றால் அதனை அதிகரித்துக் கொள்ளவும்
குறைவாக வேண்டும் என்றால் அவற்றை குறைத்துக் கொள்ளவுமான கவனத்தை நான் பெற்று வைத்திருக்கிறேன்.
அந்த வகையில் என் உடலை, என் உணவை, இன்னும் பிற உடல் நலம் சார்ந்த என் வாழ்வியல் இயங்கும்
முறை சார்ந்த எல்லா அம்சங்களையும் கூட்டவும் குறைக்கவும் சேர்த்துக் கொள்ளவும் தவிர்த்துக்
கொள்ளவுமான செயல்பாட்டு முறைகளை நான் செய்ய முடியும் என்கிற அடிப்படை புரிதலிலிருந்தே
மருத்துவம், மருத்துவம் தேடுகிற மனம் இயங்கி இருக்கும். துவங்கி இருக்கும்.
மனித வளர்ச்சியின் பாற்பட்டு
நீண்ட காலம் விஞ்ஞான நவீன முன்னேற்றங்களுக்குப் பிறகு மருத்துவத்துறை இன்று தன் உடலுக்கு
தேவையான ஒன்றை தானே தேர்வு செய்து கொள்ளக்கூடிய மனித இயல்பை, மனித இயங்கு முறையை அவிழ்த்து
ஒரு மனிதனை தனி உயிராக, தனி உடலாக, தனி மனமாக ஆய்வுகள் உருவான பிறகு ஒரு மனிதனுக்கு
ஒரு சமூகம் ஒரு துறை இயங்குகிற, தேடுகிற வேலையை செய்யத் துவங்கிய மருத்துவ வரலாறு இருக்கிறது.
மருத்துவம் என்பது ஒரு மனிதனுக்கு நலம் தருவதற்காக ஒரு குழு கண்டுபிடிக்கிற கண்டுபிடிப்புகளாக
இன்று மாறி இருக்கிறது.
ஒரு தனி மனிதனின் காய்ச்சலும்
தலைவலியும் இன்னும் பிற உடல் அசவுகரியங்களும் சீராகிக் கொள்வதற்கு அந்த மனிதன் அல்லாத
அவனைச் சார்ந்து இருக்கிற, அவன் சார்ந்திருக்கிற ஒரு குழு, ஒரு சமூகம் அறிவார்ந்த துறை
வேலை செய்கிற தன்மைக்கு வேலை செய்கிற தன்மைக்கு மருத்துவத்துறை வந்திருக்கிறது அல்லது
மனிதனின் மன ஓட்டம் எனக்காக இன்னொருவர் வேலை செய்தால் நன்மை பயக்கும் என்கிற மனிதனின்
கருத்தோட்டம் உருவாகிற சூழலில் இப்படியான குழுமம் உருவாகி இருக்கும். மனிதன் எனக்கு
உடல்நலமில்லை. எனக்கு சௌகரியம் இல்லை, எனக்கு களைப்பு இருக்கிறது. எனக்கு பசி இருக்கிறது.
எனக்கு தேவை இருக்கிறது என்று தன்னைத்தானே பார்த்துக் கொள்ளவும் அதன் பாற்பட்ட தீர்வை
தானே தேடிக் கொள்ளவுமான மனநிலையில் இருக்கிறபோது அவனுக்கு உதவுவதற்கு வெளியில் ஒரு
குழுவை உருவாக்குகிற தேவையில்லாதவனாக இருந்திருக்கிறான். வெளியில் ஒரு குழுவை உருவாக்குகிற
முனைப்பு இல்லாதவனாக இருந்திருக்கிறான். வெளியில்
ஒரு குழுவை உருவாக்குகிற முயற்சிகளும் தேவையும் இல்லாத மனிதன் இருந்தபோது தன் தேவையை
தானே பூர்த்தி செய்து கொள்கிற, தன் உணவை தானே உண்டு கொள்கிற, தன் உணவின் அதிகத்தை தானே
குறைத்துக் கொள்கிற, தன் உணவின் குறைவை தானே நிவர்த்தி செய்து கொள்கிற ஒரு மனிதன் அவனுடைய
வாழ்விற்காக, அவனுடைய நலத்திற்காக வேறு ஒருவரை வேறொரு குழுவை சார்ந்திராத வாழ்க்கை
முறையை மனிதன் துவக்க காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நான் பார்க்கிறேன்.
மனிதனுக்கு அறிவியல் வளர்ச்சியின்
காரணமாக, சமூக மாற்றத்தின் காரணமாக ஒரு குறுக்கு வழியாக, எளிய வழியாக உனக்காக இன்னொருவர் வேலை செய்ய முடியும்,
உனக்காக இன்னொருவர் உதவி செய்ய முடியும், உனக்காக இன்னொருவர் பங்களிப்பு செய்ய முடியும்,
உனக்காக உனது பாரத்தை இன்னொருவர் சுமக்க முடியும் என்று ஒரு கருத்தாக்கம் உருவாகி வலுப்பெறுகிறது.
இந்த கருத்தாக்கத்தின் வலுவான உருவாக்கத்தில் மனிதனின் மருத்துவம் என்பது எனக்காக இன்னொருவர்
வேலை செய்தால் எளிமையானது. தனக்காக இன்னொருவர் உழைத்தால் எளிமையானது என்கிற ஒரு பெரும்
சமூக கருத்தாக்கமாக மாறி இருப்பதை நாம் இன்று பார்க்கிறோம். மனித மனதிற்குள் எல்லா
வகையான மனித மனதிற்குள்ளும் ஒவ்வொரு மருத்துவமும் சிலவகைப்பட்ட மனித மனங்களை வரையறுக்கிறது.
குறிப்பாக மனித மனம் குறித்து வேலை செய்கிற இரு வேறு
மருத்துவங்கள் இருக்கின்றன. ஹோமியோபதி மருத்துவ மனித மனம் குறித்து வேலை செய்கிறது.
உளவியல் மருத்துவங்கள் மனித மனம் குறித்து வேலை செய்கின்றன. இந்த மனித மனம் குறித்து
வேலை செய்கிற எல்லா வகையான மருத்துவங்களும் வைத்திருக்கிற எல்லா வகையான மனித மனமும்
தமக்காக இன்னொருவர் வேலை செய்வது தமது நலத்தை தமது குறையை இன்னொருவர் சுமந்து கொள்வது
என்கிற மனநிலையில் ஒவ்வொன்றையும் பார்க்கின்றனர்.
எனக்காக ஒருவர் உணவு கொண்டு
வர வேண்டும். எனக்காக ஒருவர் பாரம் சுமக்க
வேண்டும் என்ற கருத்தாக்கங்கள் ஆன்மீகத் தளத்திலும் அறிவியல் தளத்திலும் உழைப்பு தளத்திலும்
சமூக அமைப்பு முறையிலும் இந்த நடவடிக்கைகளும் இந்த பாவனைகளும் அதிகரித்து வருகிற நிலையை இன்று பார்க்கிறோம். ஒரு மனிதன் தன் நலம்
குறித்து தாம் செய்து கொள்வதற்கு ஏதுமில்லை. தனக்காக இன்னொருவர் செய்து கொண்டால் செய்து
கொடுத்தால் நலமானது. அதற்கு நாம் பணம் செலுத்திக் கொள்ளலாம். வணிக ரீதியில் ஒரு பங்களிப்பு
செய்து கொள்ளலாம். ஒரு பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று உணர்வோடு இயங்குகிற காலச்
சூழலில் தமக்காக யார் ஒருவர், யாராவது ஒருவர் இன்னொருவர் உழைப்பார். என் நலத்திற்காக
இன்னொருவர் பங்களிப்பார். என் நலம் குறித்து இன்னொருவர் அக்கறை காட்டுவார். என் நலம்
குறித்து இன்னொருவர் வேலை செய்வார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிற கருத்தாக்கத்திலேயே
மருத்துவத்தை நாடுகின்றனர்.
நவீன் மருத்துவம் என்பது
அதற்கு இணக்கமானதாக, இசைவானதாக இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. மற்ற மருத்துவங்களில்
நவீன மருத்துவம் சாராத மற்ற மருத்துவங்களில் தன் உடல் நலம் குறித்து அந்தத் துயரர்
ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும். எல்லா வகை மருத்துவங்களிலும். நீங்கள் ஹோமியோபதி
மருத்துவம் மேற்கொள்ளும் ஆர்வமுள்ளவராக இருப்பீர்கள் என்றால் நீங்கள் உங்கள் உடல் நலம்
குறித்து, உங்கள் உள உணர்வு குறித்து, உங்கள் மன வேகம் குறித்து உங்கள் ஆற்றாமை குறித்து
ஏதாவது ஒன்றை கவனித்துப் பேசுகிற வேலையை செய்தே ஆக வேண்டும்.
நீங்கள் இயற்கை மருத்துவத்தை
பின்பற்றும் நபராக இருந்தால் உங்களுக்கு பசி, தாகம், தூக்கம், வலி, வேதனை இவற்றைப்
பற்றிய விழிப்புணர்வும் கண்காணிப்பும் இருந்தே ஆக வேண்டும். உங்களுக்குத் தரப்படுகிற
கஷாயங்களையும் உங்களுக்குத் தரப்படுகிற மருத்துவ சூரணங்களையும் நீங்கள் வீட்டில் காய்ச்சிக்
கொள்ளவும் குடித்துக் கொள்ளவுமான வேலையை மரபார்ந்த மருத்துவங்களில் நாட்டு மருத்துவங்களில்
செய்தே ஆக வேண்டும்.
ஒரு மனிதன் குறைந்தபட்சமேனும்
ஏதாவது ஒன்றை தன் நலம் குறித்து செய்தே ஆக வேண்டும் என்கிற எச்சத்தை தன் நலம் குறித்து
தானே செய்கிற நீட்சியின் விளைவாக இன்றும் நவீன மருத்துவம் தவிர்த்த எல்லா மரபார்ந்த
மருத்துவங்களும் ஒரு மனிதனின் நலத்திற்கு அந்த மனிதன் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற
தன்மையோடு இருக்கின்றன. இந்தத் தன்மை மனித மனதின் அதிகாரத்திற்கு, மனித மனதின் வேகத்திற்கு,
மனிதனுடைய அக்கறை இல்லா போக்கிற்கு ஒன்றை செய்கிறது. நான் எனக்காக வேலை செய்ய வேண்டியதில்லை.
அதற்குக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். எனக்காக உழைக்க வேண்டியது இல்லை அதற்கு கட்டணம்
செலுத்திக் கொள்ளலாம். நான் எதற்காக சாப்பிட வேண்டும். எதற்காக தூங்க வேண்டும். எல்லாவற்றிற்கும்
பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே அளவுகோல் வைத்திருக்கிற ஒரு சூழலில் எல்லா மாற்று மருத்துவங்களும்
நவீன மருத்துவம் அல்லாத எல்லா மருத்துவ அறிவியலும் மனிதன் தன் நலம் குறித்து ஏதாவது
செய்ய வேண்டும் என்றும் நவீன மருத்துவம் தன் நலம் குறித்து ஒரு தனி மனிதன் எதுவும்
செய்ய வேண்டியதில்லை. அதற்காக இன்னொருவர், இன்னொரு குழு, இன்னொரு மருத்துவமனை, இன்னொரு
மருத்துவத்துறை எப்போதும் தயாராகவே இருக்கிறது என்கிற நடைமுறையை வைத்திருக்கிறது.
தனி மனிதனின் மனவேகத்தில்
தனக்காக யாராவது செய்தால் நலம் என்று நம்புகிற, விரும்புகிற மனவேகத்தில் இருக்கிற ஒருவருக்கு
நவீன மருத்துவம் ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது. நவீன மருத்துவம் அப்படித்தான் தன்னை
நிலை நிறுத்திக் கொள்கிறது. தன் உடல் நலம் குறித்து ஒருவர் தாங்கிக் கொள்ளவும் காத்திருக்கவும்
செய்வார் என்றால் அவருக்கு நவீன மருத்துவம் அவசியம் இல்லாமல் போகக்கூடும். ஆனால் தனது
சிறிய தலைவலிக்கும் தனது பசியின்மைக்கும் தனது தூக்கமின்மைக்கும் இன்னொருவர் தீர்வு
தருவார் என்று நம்புகிற மனதிற்கு காத்திருப்பதும் பொறுமையாக இருப்பதும் தேவைக்காக தம்மை
உட்படுத்திக் கொள்வதும் இல்லாத நடைமுறையில் இத்தகைய மனம் கொண்டவர்களுக்கு நவீன மருத்துவம்
இன்னொருவரை செய்ய சொல்கிறது அதற்கு கட்டணம் செலுத்தச் சொல்கிறது. இப்படியான ஒரு மருத்துவ
நடைமுறை மனிதனின் மன வேகத்திற்கு, மனிதனின் மருத்துவ ஈர்ப்பிற்கு உரியதாக, உகந்ததாக
இருக்கிற அம்சத்தில் இன்று மனிதர்கள் மருத்துவத்தை தேர்வு செய்கிறார்கள்.
மனிதனின் மருத்துவ தேவை என்பது
எனக்காக யாராவது ஒருவர் உழைக்க வேண்டும் என்று அதிகாரத் தன்மையில் இருந்து, எனக்காக
யாராவது ஒருவர் அக்கறைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற மன வடிவத்தில் இருந்து
மருத்துவத்தையும் பார்க்கிறது. அந்த வகையிலேயே மருத்துவத்தை தேர்வு செய்கிறது. இன்னும்
பிற மருத்துவத்தை உன் உடல் நலத்திற்கு நீயே பொறுப்பு என்று சுட்டி காட்டுகிற மருத்துவத்தை
விரோதமான மருத்துவமாக, பயன்படாத மருத்துவமாக, காலம் தாழ்த்தி குணமளிக்கிற மருத்துவமாக
திரும்பத் திரும்ப சொல்கிற கருத்தாக்கத்தை மனித மனம் சுமந்து கொண்டே இருக்கிறது. இது
மருத்துவத்தின் மீது இருக்கிற குற்றச்சாட்டு அல்ல. மனித மனதில் உருவாகி வளர்ந்து நடைமுறையில்
இருக்கிற வடிவமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித மனம் அதன் அவசரத்தில்
இருந்து, அதன் அதிகாரத்திலிருந்து ஒரு மருத்துவத்திற்கு உள்ளாகிறது. தான் நலமாக இருப்பதற்கு
தானே பொறுப்பு என்கிற நிலை வருகிற போது மட்டுமே ஒரு சிறந்த மருத்துவத்தை தேர்வு செய்கிற
மனிதனாக இந்த நவீன மனிதன் உருவாக முடியும். அதுவே அவனுக்கு உகந்த மருத்துவத்தையும்
குணத்தையும் கொடுக்கிற மருத்துவத்தை கண்டுபிடிக்கிற வாய்ப்பாகவும் அமையும்.
No comments:
Post a Comment