Thursday, November 10, 2022

திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் - 2 - பகுதி 2

 திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல்

www.swasthammadurai.com


மருந்து வேண்டாம். எனவே நோய் கிடையாது. நீங்கள் தேவையின் அடிப்படையில் எடுத்துக் கொள்கிற போது அதுவே மிகச் சரியானது என்று ஒரு இடத்தில் ஒரு பாடலை பதிவு செய்கிறார். இதற்கு மாற்று வாதமாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உணவை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு எப்போதும் நரகம் தான். அது என்ன உணவு? புலால் உணவு. நீங்கள் பசியின் அடிப்படையில், தேவையின் அடிப்படையில் எதை வேண்டுமென்றாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வரையறுத்து வாதம் வைக்கிற வள்ளுவர், இன்னொரு செய்யுளில் நீங்கள் புலால் உண்பீர்கள் என்றால் இந்த உலகில் மேல் உலகில், ஏழு உலகில் நீங்கள் விரும்புகிற எந்த உலகிலும் உங்களுக்கு அருளும் பொருளும் வந்து சேராது என்று சபிப்பது போல் செய்யுளை முன் வைக்கிறார். நேர் எதிரான இரு வேறு வாதங்கள். இப்படி குறள் முழுவதும் நிறைய நேர் எதிரான கனத்த இரு வேறு வாதங்களை வைத்திருக்கிற வள்ளுவரினுடைய அழகு மிகுந்த மரியாதைக்குரியது. மிகுந்த போற்றுதலுக்குரியது.

வள்ளுவரை மரியாதை செய்வதற்கும் போற்றுவதற்கும் உரிய விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அதை பகிர்ந்து கொள்கிறேன். பெரும் அறிவோடு இருக்கிற ஞானிகளும் அறிவாளிகளும் திருக்குறளை விரிவாகப் பேசி இருக்கிறார்கள். ஆனால் வள்ளுவர் மீது இருக்கிற, திருக்குறள் மீது இருக்கிற அன்பை மட்டுமே விருப்பத்தை மட்டுமே உரைகல்லாக வைத்து இந்த உரையாடலை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இப்படி இந்த குரளுக்குள் இரு வேறு எதிர் வாதங்களை கனம் குறையாமல் வைத்திருக்கிற திருவள்ளுவரை எப்படி நாம் புரிந்து கொள்வது என்று தேடுகிற போது, அதற்கும் அவர் உள்ளே விடை வைத்திருக்கிறார். என்ன விடை, இதுதான் ஞானத்தின் குறியீடாக ஞானத்தின் செல்வாக்கு மிகுந்த செம்மையான பகுதியாக நான் மகிழ்வதற்கும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் காரணம்.

இரு வேறு எதிரெதிர் வாதங்கள் கனத்த வாதங்கள் மறுக்க முடியாத வாதங்கள் ஒவ்வொரு குரளுக்குள்ளும் இப்படி செய்திகள் இருக்கிறது. முரண்பட்ட, நேர் எதிரான, எதிரெதிர் கருத்துள்ள, கனமுள்ள பொருள் கொள்ளலை ஒவ்வொரு பாடலுக்குள்ளும் கூட பார்க்கிறபடி நாம் இந்த குரலில் பயணிக்க முடியும்.

“நன்றி மறப்பது நன்றன்று” பாடல் முடிந்தது. ஒரு நபரை நீங்கள்   விமர்சிக்கிறபோது இந்த பாடலை முழுமையாக சொன்னீர்கள் என்றால் “நன்றி மறப்பது நன்றன்று” என்று நன்று இல்லாத, நன்றி இல்லாத ஒருவரை பார்த்து நீங்கள் இந்த பாடலைச் சொல்லி விமர்சித்தீர்கள் என்றால் சொல்லிப் பார்க்கிறபோது நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.  நன்றி மறப்பது நன்றன்று என்று சொல்லி முடித்தவுடன் அவர் “நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்று அவர் உங்களை பார்த்துச் சொல்ல முடியும். நான் நன்றி அல்லாத செயலை செய்வது சிக்கல் இல்லை. நான் செய்கிறேன் என்று நீ சொல்வதற்கு அவசியமில்லை என்று அந்த குறள் இருவரையும் சமன் செய்துவிடும். அப்படியான அழகும் திருக்குறள் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நாம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது, முடியும். இத்தகைய முரண்களில் இருந்து ஒரு தெளிந்த, தேர்வான ஒன்றை எப்படி பிடித்துக் கொள்வது என்று திருவள்ளுவர் அதற்கான சூத்திரத்தையும் உள்ளே வைத்திருக்கிறார்.

ஒரு இடத்தில் கடவுள் சரி என்பது, ஒரு இடத்தில் முயற்சி சரி என்பது, ஓரிடத்தில் பசி எடுத்து உண்ணுங்கள் என்பது, இன்னொரு இடத்தில் நீங்கள் உண்பதில் புலால் இருக்கக் கூடாது என்பது, நீங்கள் நன்றியை போற்றியே ஆக வேண்டும். அதுவே நல்லது என்று வலியுறுத்துவது, தொட்டு அடுத்து நன்றி அல்லாததை விமர்சிக்க வேண்டாம் என்று சுட்டிக் காட்டுவது என்று விதவிதமான நேர் எதிரான வாதங்களை வைத்திருக்கிற இத்தகைய கலவைக்குள் தேர்ந்த ஒன்றை எவ்வாறு பிடித்துக் கொள்வது  என்பதற்கான விடையை வள்ளுவர் பின்வருமாரு சொல்கிறார்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு" 

யாரு என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்க வேண்டியது இல்ல, வள்ளுவர் உட்பட யார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்க வேண்டியது இல்ல அப்படின்னு வள்ளுவரே சொல்கிறார். இதுதான் ஒரு ஞானியினுடைய, ஞானத்தின் உடைய ஒரு பெரும் விசாலமான பார்வையாக, விரிவான பார்வையாக, அழகுள்ள முரணாக, முரணுக்கே இருக்கிற, ஞானம் சுமந்திருக்கிற அழகாக இருக்கிறது. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தறிவு” என்று ஒற்றை குறளை உங்களுக்குள் ஏற்றுக் கொண்டால் எப்பொருள் எத்தன்மை உடையதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்கிற ஒற்றைக் குறளை ஏற்றுக் கொண்டால் இந்த இரண்டு குறளுக்குள் இருக்கிற அருஞ்சொற்பொருளும் நெருக்கமான தொடர்புடையது என்றாலும் கூட அடர்ந்த பகுதிகளில் பேச முடியும். நெருக்கமான தொடர்புடையது. அடர்ந்த பகுதிகளில் வேறுபட்டது. இந்த இரண்டு குறளுக்குள் இருக்கிற மெய்யான சரடு எந்த ஒன்றை யார் சொன்னாலும் அதன் மெய்ப்பொருளைக் காண வேண்டிய அறிவு, மெய்ப்பொருளை காண வேண்டிய பொறுப்பு அதை வாசிப்பவருக்கு இருக்கிறது என்கிற சூத்திரத்தை வள்ளுவர் மையத்தில் வைத்திருக்கிறார். திருக்குறளுக்குள் வைத்திருக்கிறார். இதுதான் திருக்குறள் ஞானமான குறியீடாக இருப்பதற்கு, இதுதான் திருக்குறள் ஒரு ஞான ஒளியாக மின்னுவதற்கு ஆதாரமாக இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.

ஒரு மலைமுகடில் ஒரு ஞானியை பற்றிய கதை ஒன்று இருக்கிறது. இயேசு கிறிஸ்துவை பற்றிய கதை அது. ஒரு பெரிய மலைச்சரிவில் இயேசு கிறிஸ்து ஒரு குச்சியை வைத்து தரையில் படம் வரைந்து கொண்டிருக்கிறார். அந்த ஊரைச் சார்ந்தவர்கள் இயேசு கிறிஸ்துவை எப்படியாவது வாதத்தில் வீழ்த்த வேண்டும் என்று எண்ணம் உடையவர்களாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து அன்பை வலியுறுத்துகிறார். இயேசு கிறிஸ்து அன்பாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பரிந்துரைக்கிறார். அவர் அன்பாகவே இருக்கிறார். அவர் மோசஸ்சின் வழிவந்த இறை தூதர் என்று, பிதாமகன் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். அந்த மக்களுக்கு இவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது அன்பு குறித்தான உரையாடலை தவிர்க்க முடியவில்லை. வாதத்தின் வழியாக இயேசு கிறிஸ்துவை வீழ்த்த திட்டமிடுகிறார்கள். இப்படியான நேரத்தில் இயேசு கிறிஸ்து ஒரு மலைச்சரிவின்  ஓரத்தில்  குச்சிகளை வைத்து தரையில் ஏதோ ஒன்றை தளர்வாக கிறுக்கி கொண்டிருக்கிறார். வரைந்து கொண்டிருக்கிறார்.  அந்த நேரத்தில் ஊர் மக்கள் ஓடி வந்து அவர் முன் ஒரு விபச்சார பெண்ணை நிறுத்துகிறார்கள். இவள் ஒரு பெரிய விபச்சாரி என்று அந்த பெண்ணின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். மோசஸ் வழிவந்த இயேசு கிறிஸ்துவிற்கு இது ஒரு சிக்கலாக மாறுகிறது. ஏனென்றால் மோசஸ் பெண்களினுடைய ஒழுங்குமுறை குறித்து நிறைய பேசி இருக்கிறார். குறிப்பாக விபச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை, இறை கருத்துக்களாக பதிவு செய்திருக்கிறார். எனவே மோசஸினுடைய கருத்தின் அடிப்படையில் இந்த விபச்சாரியை மோசஸ் வழிவந்த இயேசு கிறிஸ்து என்ன செய்யப் போகிறார் என்கிற சிக்கலை மக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து தனது சொந்த கருத்தாக எவரையும் மன்னிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலை பரிந்துரைக்கிறார்.  எவரையும் மன்னிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் பிரசங்கம் செய்கிறார். விபச்சாரப் பெண்ணை இயேசு கிறிஸ்து அன்பின் பாற்பட்டு மன்னிப்பதா அல்லது மோசஸின் கட்டளைப்படி மோசஸ் வழிவந்தவர் என்ற அடிப்படையில் தண்டிப்பதா என்ற சிக்கலை அவருக்கு ஏற்படுத்துகிறார்கள். இதுதான் ஒரு தத்துவஞானிக்கு முன் இருக்கிற பெரிய சிக்கல். இப்போது தத்துவஞானி முடிவெடுக்க வேண்டும். அவன் வழி வந்த மோசஸ் கட்டளையின்படி விபச்சாரிக்கு தண்டனை தர வேண்டும் என்று வழிவந்த இயேசு கிறிஸ்துவின் நிலை தன் முன்னோர் சொன்னதை தனக்கு மூத்த தத்துவ அறிஞர் சொன்னதை மனதில் வைத்து அந்த பெண்ணை தண்டிப்பதா அல்லது தான் வலியுறுத்துகிற அன்பை கொண்டு அந்த பெண்ணை மன்னிப்பதா என்று ஒரு பெரும் உரையாடலை நிகழ்த்த வேண்டிய நெருக்கடியை அவர் முன்னால் அந்த சூழல் உருவாக்குகிறது. அந்த ஊர் உருவாக்குகிறது. இயேசு கிறிஸ்து எந்த சலனமும் இல்லாமல் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு இது பெருத்த ஞானிக்கு இருக்கிற பார்வை. அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு மிக நிதானமாக இயேசு கிறிஸ்து சொல்கிறார், யார் ஒருவர் பிழை செய்யாதவரோ யார் ஒருவர் தவறு இழைக்காதவரோ அவரே இந்த பெண் மீது கல்லெறிவதற்கு நியாயம் உள்ளவர் என்று தன் வாதத்தை ஒரு வரியில் சொல்கிறார். இதில் மோசஸின் வழிவந்த தான் போற்றுகிற அன்பின் வழி எந்த பேதமும் இல்லை. எவர் ஒருவர் தன்னை கவனிக்கிற தான் முடிவெடுப்பதற்கு முன்பு நான் என்ன செய்யப் போகிறோம் என்று கவனிக்கிற ஒருவருக்கான செயல்பாட்டு அணுகுமுறையாக இயேசு கிறிஸ்து இதை சொல்கிறார். இது ஞானிகளுக்கு இருக்கிற, ஞானத்திற்கு இருக்கிற ஒரு விழிப்புணர்வு நிலை. இதே விழிப்புணர்வு நிலையை இம்மாதிரியான அடர்ந்த விழிப்புணர்வு நிலையை திருக்குறளுக்குள் இருக்கிற ஏராளமான முரண்களின் மையத்தில் திருவள்ளுவர் வைத்திருக்கிறார்.

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், எப்பொருள் எத்தன்மையாயினும் அதன் மெய்ப்பொருளை காண்பது கற்பவரின் அறிவு.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...