கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து..
கன்னி
மரியாளின் கர்ப்பப்பையில் பிறந்ததாலேயே இயேசு கிறிஸ்துவின் மீது கன்னி மரியாள் எந்தவிதமான
ஆளுமையும் செய்ய முடியாது என்பதற்கான வரலாற்று சாட்சி இயேசுவின் வாழ்க்கை. எதுவும்
தெரியாத மிக கிராமத்திய அறிவியல் வளர்ச்சி இல்லாத
பின்னணியில் பிறந்த கன்னி மரியாள் ஒரு
உயிரை, ஒரு உடலை தன் கர்ப்பப்பையில் குடியிருப்பதற்கு வாய்ப்பு அளிக்கிறாள். அந்த உடலும் உயிரும் அந்த கர்ப்பப்பையில் குடி இருக்கிறது;
வளர்கிறது; வெளி வருகிறது. அந்த உடலை கர்ப்பப்பையில் வளர்த்துக் கொண்ட அந்த உடல், அந்த
உயிர் தன் ஆன்ம ஒளியால் இந்த உலகின் வரலாற்றை இரண்டாகப் பிரிக்கிறது கிறிஸ்து பிறப்பதற்கு
முன், கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்று.
இந்த
உலக வரலாற்றின் பெரும் பகுதியை தன் பிறப்பிற்கு முன் தன் பிறப்பிற்கு பின் என்று சொல்லும் அளவிற்கு பிரித்துப் பார்க்கிற,
பிரிக்க வைக்கிற ஒரு பேரொளி இயேசு கிறிஸ்துவின் பேரொளி. இயேசு கிறிஸ்துவின் வருகையை
வைத்தே இந்த உலகம் பிரிக்கப்படுகிறது. இயேசு
கிறிஸ்துவிற்கு முன்பு இயேசு கிறிஸ்துவிற்கு பின்பு என்று பிரிக்கும் வல்லமையை பெற்ற
ஒரு தாயின் கருவறை மிக எளிமையானது. அந்தக் கருவறையில் வளர்ந்ததற்காக வேண்டுமென்றே இயேசு
கிறிஸ்துவை அந்த கருவறையை வைத்திருந்தவள் கொண்டாட முடியாது என்கிற பேருண்மையை கலீல்
ஜிப்ரான் உடைக்கிறார். வெளிப்படுத்துகிறார்.
நீ ஒரு வேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். கன்னி மரியாளாக இருந்து இயேசு கிறிஸ்துவிற்கு வீடாகலாம். ஆனாலும் கூட கன்னி மரியாளால் இயேசு கிறிஸ்துவின் உள் ஒளியை ஒன்றும் செய்ய முடியாது என்கிற பேருண்மையை நீ ஒருவேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். அது அவர்களின் உள் ஒளிக்கு பொருந்தாது என்று பேருண்மையை மறை ஞானி கூறுகிறார். அவர்களின் உள் ஒளி குடியிருப்பது நாளைக்கான வீட்டில். நாளைக்கான வீடு என்பது இயேசு கிறிஸ்து சொல்கிற பரலோக ராஜ்ஜியம். புத்தரின் நிர்வாண நிலை. பரலோக ராஜ்ஜியம், நிர்வான நிலை என்கிற ஒரு பெரும் பேரான நிலத்தை கவிஞர் குறிப்பிடுகிறார். மறை ஞானி குறிப்பிடுகிறார்.
குழந்தைகளின் உள்ளொளி குடியிருப்பது நாளைக்கான நாளை
என்பது மனம் வைத்திருக்கிற நேற்று இன்று நாளை என்கிற பகிர்வு அல்ல. தம் நினைவுகளை நேற்றாகவும்
இன்றாகவும் நாளையாகவும் பகிர்ந்து வைத்திருக்கிற பகிர்மானம் முழுவதும் மனம் சார்ந்தது.
குழந்தைகளின் மனம் அப்படியானது அல்ல. குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்று இந்திய வழக்கம்
இருக்கிறது. குழந்தைகளுக்கும் தெய்வத்திற்கும் மிக நெருக்கமான உறவு இருக்கிறது. தொடர்பு
இருக்கிறது என்ற ஒரு இந்திய வழக்கம் இருக்கிறது. சொல்லாடல் இருக்கிறது. அந்த சொல்லாடலின்
வகைப்பட்டு பார்க்கிறபோது குழந்தைகள் குடியிருப்பது தெய்வம் என்று கருதப்படுகிற ஒன்றின்
மீது. பரலோக ராஜ்யத்தின் மீது. தெய்வம் என்கிற நிலையின் மீது.
நிர்வாணா
என்கிற ஞானத்தின் மீது குழந்தைகள் குடியிருக்கிறார்கள் என்கிற தன்மையில் குழந்தைகளுடைய
வீடு என்பது நாளைக்கான வீடு. அந்த நாளைக்கான வீட்டில் சொந்தம் கொண்டாடுகிற ஒரு
தாயால், சொந்தம் கொண்டாடுகிற ஒரு தகப்பனால், சொந்தம் கொண்டாடுகிற ஒரு சமூகத்தால் வருவதற்கு
உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை. நாங்கள் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைவதற்கு என்ன செய்ய
வேண்டும் என்று தம் சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தை நீங்கள்
குழந்தைகள் போல மாற வேண்டும் என்றார். நீங்கள் குழந்தைகள் போல மாற வேண்டும் என்று இயேசு
கிறிஸ்து சொன்ன வார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கவனத்திற்குரியது.
குழந்தைகள்
போல் மாறியவர்கள், குழந்தைகள் போல் மனம் கொண்டவர்கள்தான் பரலோக ராஜ்யத்திற்குள், சொர்க்கத்திற்குள்
நுழைய வாய்ப்புள்ளவர்கள் என்று இயேசு கிறிஸ்துவின் கூற்று இயற்கையின் கூற்று. இருத்தலின் கூற்று. யார் ஒருவர் குழந்தைகள் போல்
தம் மனதை வைத்திருக்கிறார்களோ, யார் ஒருவர் குழந்தைகளாகவே தன் மனதை வைத்திருக்கிறார்களோ
அவர்கள் தான் பரலோக ராஜ்யத்திற்குள், சொர்க்கத்திற்குள், கடவுளின் பூமிக்குள் நுழைவதற்கு
வாய்ப்பு உள்ளவர்கள் என்கிற பேருண்மையிலிருந்து
நாம் குழந்தைகள் வீடை பார்க்கிற போது குழந்தைகள் வீட்டிற்குள் மனம் கொண்ட தாயால், மனம்
கொண்ட தந்தையால், மனம் கொண்ட உறவுகளால், படபடப்பும் பதற்றமும் பயமும் இருக்கிற சமூகத்தால்
குழந்தைகள் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. அவர்களது கனவிலும் அது நடக்காது. ஏனென்றால் இப்போதும் அவர்கள்
கனவிலே இருக்கிறார்கள். கனவிலும் கனவிற்குள்ளும்.
எல்லா மனிதர்களும் எல்லா குழந்தைகளும் எல்லா பெற்றோர்களும் கனவிற்குள்ளே இருக்கிறார்கள்.
அவர்களது கனவிலும் குழந்தைகளின் ராஜ்யத்திற்குள், கடவுளின் ராஜ்யத்திற்குள், குழந்தையின்
வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பில்லை.
ஆக, குழந்தைகளின் உள்ளொளி குடியிருப்பது
நாளைக்கான வீட்டில். அது பரலோக ராஜ்ஜியம். அது நிர்வாண நிலை. அது கடவுளின் குடியிருப்பு.
அங்கு உங்களால் உங்கள் கனவுகளைக் கொண்டு கனவுகளிலும்
கூட வருவதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் அவர்கள் போல ஆவதற்கு பாடுபடுங்கள் என்று மறைஞானி
மேலும் சொல்கிறார். இது இயேசு கிறிஸ்து சொன்னது தான். நீங்கள் குழந்தைகள் போல் மாற
வேண்டும். நீங்கள் அவர்களைப் போல் மாறுவதற்கு பாடுபடுங்கள். நீங்கள் அவர்களைப் போல்
மாறுவதற்கு பாடுபடுகிற போது அவர்களது வீட்டை புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கனவுகள் ஏதும் இன்றி அவர்கள் வீட்டில் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே நீங்கள்
அவர்களைப் போல் பாடுபடுங்கள் என்று அந்த மறை ஞானி விளக்குகிறார்.
மேலும் அவர் சொல்வது நீ அவர்கள் போல்
ஆவதற்கு பாடுபடு. உன்னை போல் அவர்களை மாற்ற ஆர்வம் காட்டாதே. எளியவர்கள் மீது அதிகாரம்
செலுத்துகிற மனப்பாங்கு எப்போதும் சமூகத்திற்கு உண்டு. யார் ஒருவர் எளிமையாக இருக்கிறார்களோ,
யார் ஒருவர் வலிமை குறைந்து இருக்கிறார்களோ, யார் ஒருவர் பலம் குன்றி இருக்கிறார்களோ
அவர்கள் மீது அதிகாரம் செய்வதும் அவர்கள் மீது வன்முறை செலுத்துவதும் பார்ப்பதற்கு,
கேட்பதற்கு, கண் முன்னால் நிறைந்த சாட்சிகளாக இருக்கின்றன.
பள்ளிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படுகிற
வன்முறைகள். அலுவலகங்களில் பெண்கள் மீது, குழந்தைகள் மீது, பெற்றோர் மீது என்று எல்லா
தளங்களிலும் அதிகாரம் மிக்கவர்கள் பலம் குறைந்தவர்கள்
மீது நடத்துகிற தாக்குதல்களை சமூகம் பார்த்துக் கொண்டே இருக்கிறது. இது திணிப்பாகவும்
வலியுறுத்தலாகவும் ஒற்றை வாய்ப்பாகவும் தொடர்ந்து
சமூகத்தில் நிகழ்கிற நிகழ்வாக இருக்கிறது. அப்படி சமூகத்தில் மிக உடலியல் வளமும் பலமும்
குன்றியவர்களாக குழந்தைகள் பார்க்கப்படுகிற போது அந்த குழந்தைகளை இந்த சமூகத்திற்குரிய
ஆளாக மாற்றுவதில் ஆர்வம் காட்டுகிற சமூக மனநிலை உனக்குள் இருக்கிறது என்று அந்த மறை
ஞானி தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.
அவர்கள் போல் ஆவதற்கு நீ பாடுபடு,
உங்களைப்போல் அவர்களை மாற்ற ஆர்வம் காட்டாதே. உங்களைப் போல் அவர்களை மாற்ற ஆர்வம் காட்டாதே
என்பது ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை குழந்தைகள் மீது பயன்படுத்தாதே என்கிற பொருளில்
நாம் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் பற்றி விரிவாக சொல்கிறார். நேற்றைய தொடர்ச்சி
பற்றிக் கொள்ளாமலும் பின்னால் செல்லாமல் இருப்பதற்காக வாழ்வு நகர்கிறது. வாழ்வின் நோக்கத்தை
முன்பே சொன்னது போல் வாழ்வின் நோக்கம் என்பது என்ன? வாழ்வு எப்போதும் புதிரானது. வாழ்வு
எப்போதும் புனிதமானது. மிக முக்கியமாக விரிவாக சொல்ல வேண்டும் என்றால் வாழ்வு எப்போதும்
புதியது. புதியது என்றால் நேற்று கிடையாது. உடனடியாக நாளை என்று ஒரு கேள்வி வந்தால்
நாளையும் கிடையாது. எப்போது நேற்றும் எப்போது நாளையும் இல்லாமல் போகிறதோ அப்போது நிகழ்
காலம் பிறக்கிறது.அப்போது நிகழ்காலம் புதியது. புதியது என்பதில் முழுமையான நிகழ்காலம்.
வாழ்வின் நோக்கம், வாழ்வின் நகர்வு எதிர்காலம் ஏதும் இல்லாமல், கற்பனைகள் ஏதுமில்லாமல்,
எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாமல், இலக்குகள் ஏதும் இல்லாமல் இருக்கிற நகர்வாக இருக்கிறது.
மேலும் கடந்த காலம் ஏதும் இல்லாமல், துக்கங்கள் ஏதும் இல்லாமல், அனுபவங்கள் ஏதும் இல்லாமல்,
பதற்றம் ஏதுமில்லாமல் இறந்த காலம் இல்லாத ஒன்றாகவும் இருக்கிறது.
வாழ்வு சார்பு இல்லாமல், வாழ்வு நடுநிலைமையாக
வாழ்வு ஒற்றை புள்ளியில் வாழ்வு அந்தந்த நிமிடத்தில் நகர்கிற நகர்வாக நேற்றைய தொடர்ச்சியை
பற்றிக் கொள்ளாமலும் பின்னால் செல்லாமலும் இருப்பதற்காக வாழ்வு நகர்கிறது. வாழ்வு அப்படித்தான்
நகரும். வாழ்வின் நோக்கம் அப்படித்தான் இருக்கிறது.
இந்த வாழ்வு மனிதனை என்ன செய்கிறது என்று இந்த கவிதையில் மறை ஞானி விளக்குகிறார். இந்த
வாழ்வு மனிதனை செய்வதற்காக, வாழ்வதற்கான வாழ்வாக மாற்றுவதற்காக வாழ்வு ஒன்றை தேர்வு
செய்கிறது. அதுதான் குழந்தைகள். நீங்கள் குழந்தைகளின் வழியாக இந்த வாழ்வை ஆராதிக்க வேண்டுமென்று மறை ஞானி கூறுகிறார். மறைஞானியின்
கூற்று வாழ்வதற்கான அம்புகளாக உங்கள் குழந்தைகள். அவர்களுக்கான விற்கலாக நீங்கள். அவர்களின்
வில் என்பது அம்பை பூட்டி இலக்கை நோக்கி எய்யப்படுகிற ஒரு இயங்கு முறை. இயங்கு முறையில்
மிக முக்கியமான பொருள் வில். வில்லில் அம்பை ஏற்றி குறிப்பிட்ட இலக்கை நோக்கி குறி
வைத்து நாணை தளர்த்தினால் அம்பின் வேகம் இலக்கை நோக்கி பாயும். இது அம்பின் இயங்கும்
முறைக்கான வரையறை. இந்த அம்பின் இயங்கு முறைக்கான வரையறையில் பயணிக்கிற போது வாழ்வின்
அம்புகளாக குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பூட்டிக் கொள்வதற்கு அவர்களை வைத்து
இயங்கிக் கொள்வதற்கு வில் என்கிற தளத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று மறை ஞானி கூறுகிறார்.
ஆக, குழந்தையின் வாழ்வும் குழந்தையின்
வளர்ச்சியும் உங்களின் வில்லிலேயே பூட்டப்படுகிறது. யார் பூட்டுகிறார்? இயற்கையே பூட்டுகிறது. வாழ்வே பூட்டுகிறது. விசாலத்தின் மீது வலசையினால்
வில்லாளி இலக்கு குறிக்கிறார். வில்லாளி இயற்கை. வில்லாளி இறைவன். வில்லாளி முழுமை.
வில்லாளி இருப்பு. எந்த பெயரிலும் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம். ஆனால் வில்லாளி தான் வாழ்வும் வாழ்வின் நோக்கமும். வாழ்வு விசாலத்தின் மீது, பிரம்மாண்டத்தின் மீது,
பிரபஞ்சத்தின் மீது, முடிவின்மையின் மீது இலக்கு குறிக்கிறது. அதன் மீது பாதை வகுக்கிறது. வில்லாளியின் இலக்கு பேராற்றல் கொண்டு ஒன்றைக் குறிக்கிறது.
ஒன்றை நோக்கி பாய்வதற்கு தயாராகிறது. அம்பை வில்லில் ஏற்றிக்கொண்டு இலக்கு குறிக்கப்படுகிறது.
விசாலத்தின் மீது வலசையினால் வில்லாளி இலக்கு குறிக்கிறார். பேராற்றல் கொண்டு உங்களை
வளைக்கிறார். அம்பின் பாய்ச்சலுக்கும் தூரத்திற்கும் அதுவே காரணம். வில்லாக நீங்கள்
இருக்கிறபோது பேராற்றல் உங்களை வளைக்கிறபோது பேராற்றலுக்கு இசைவாக நீங்கள் வளைவீர்கள்
என்று சொன்னால் அம்பு எவ்வளவு வேகமாக எவ்வளவு பாய்ச்சலோடு எவ்வளவு தூரம் பாய்வதற்கு
இசைவாக இருக்கும் என்பதை பேராற்றல் முடிவு செய்யும். பேராற்றலே முடிவு செய்கிறது என்று மறை ஞானி கூறுகிறார்.
விசாலத்தின் மீது வலசையினால் வில்லாளி இலக்கு குறிக்கிறார்.
பேராற்றல் கொண்டு உங்களை வளைக்கிறார் அம்பின் பாய்ச்சலுக்கும் தூரத்திற்கும். பேராற்றல்
கொண்டு உங்களை வளைப்பதற்கு காரணம் வேகமாக பாய்வதற்கும் தூரமாக பாய்வதற்கும் பேராற்றல்
உங்களை வளைக்கிறது. உங்களை வில்லாக வளைக்கிறது. வில்லாளியின் கைகளில் நீங்கள் வளைவிற்கு
உட்படும்போது உங்களுக்கு மகிழ்ச்சி தான். வில்லாளியின் கைகள் வில்லை வளைப்பது உங்களின்
மகிழ்ச்சிக்காக என்று இந்த கவிதை இருக்கிறது. வில்லாளி உங்களை வளைக்கிற போது வளைப்பதின்
வழியாக நீங்கள் துயரப்படவில்லை. வளைப்பதின் வழியாக நீங்கள் மகிழ்விற்கு உள்ளாகிறீர்கள்.
ஏனென்றால் வில்லாளி பேரன்போடு உங்களை வளைக்கிறார். உங்களின் வளைவின் காரணமாக அம்பினுடைய
வேகமும் பாய்ச்சலும் துல்லியமாகவும் தூரமாகவும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தப்
பேரன்போடு வில்லாளி உங்களின் மகிழ்வின் பொருட்டே உங்களை வளைக்கிறார். அவர் அம்பை நேசிக்கிறார். அவர் குழந்தைகளை
நேசிக்கிறார். உங்கள் வழி பிறந்த குழந்தைகளை நேசிக்கிறார். அது பாய்கிறது. அவர் நேசிப்பதால்
அது பாய்கிறது. அம்பை நேசிப்பதால் அம்பு பாய்கிறது. மேலும் வில்லை நேசிப்பதால் வில்
நிலைத்திருக்கிறது. அவர் அம்பை நேசிக்கிறார் பாய்கிறது. வில்லை நேசிக்கிறார் நிலைக்கிறது என்றவாறு கவிதை நிறைவடைகிறது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment