திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் – அதிகாரம் 2 / குறள் - 12
திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக வகைக்
கொண்டு பலரையும் வாழ்வியல் நெறிகளை பேசுவதற்கு வழி செய்திருக்கிறது. பேசச் சொல்லி இருக்கிறது.
எழுதி வைத்திருக்கிறது.
திருக்குறள் எனும் அற நூலை நெறி பிறழாமல் எழுதிய
விளக்கங்களும் தனி இலக்கியமாக தொகுக்கிற அளவிற்கு நிறைந்திருக்கின்றன. அத்தகைய வலிமையும்
பெருமையும் திருக்குறளுக்கு சாலப் பொருத்தமானதுதான் என்றும் நாம் பெருமிதம் கொள்ள முடியும்.
திருக்குறளை, திருவள்ளுவரை நாம் பார்ப்பதற்கும்
புரிந்து கொள்வதற்கும் திருக்குறள் குறித்த அறிவோடு சமூக வாழ்வியல் எதார்த்தங்களை ஒப்பிட்டுப்
பார்ப்பது என்பதும் இணைந்து கொள்ளும் என்றால் நம்மை நாம் தொடர்ந்து செம்மைப்படுத்திக்
கொள்வதற்கு, நெறி பிறழாமல் நம் வாழ்வை வடிவமைத்துக் கொள்வதற்கு, நெறி பிறழா வாழ்வு
நெறியில் நம்மை இணைத்துக் கொள்வதற்கு சாத்தியம் இருக்கிறது.
பாயிரத்தில் கடவுள் வாழ்த்து உள்ளிட்ட அதிகாரங்களில் கடவுளை இயற்கையாக, முழுப் பொருளாக பேசுகிற இந்திய தத்துவ மரபோடு திருக்குறள் முழுவதும் பொருந்தி நிற்கிறது. கடவுள் என்னவாக இருக்கிறார் என்று ‘கடவுள் வாழ்த்து’ பகுதியில் அதிகாரத்தை வள்ளுவர் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார். தொடர்ந்து ‘வான் சிறப்பு’ பகுதியில் கடவுள், இயற்கை, முழுப் பொருள், இருத்தல், முழுமை, மெய் என்று எவ்வாறெல்லாம் மனித சமூகம் தனக்கு மேல் இருக்கிற, நாம் வெல்ல முடியாத ஒன்றாக ஏற்றுக் கொண்டிருக்கிற கருத்தாக்கம் பற்றி வரையறுத்து வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் அது தன் இருப்பை என்னவாக வெளிப்படுத்துகிறது என்பதை வள்ளுவரின் வகையில் வள்ளுவரின் வகைப்பாட்டில் நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
இந்திய புராணக் கதைகள், இதிகாசங்கள், பெரும்
புதினங்கள் கூட உள்ளடக்கத்தின் சாராம்சத்தில் பேசுகிறபோது திருவிளையாடல்கள் நிகழ்கின்ற
காட்சிகளை விளக்குகிற போது கடவுள் வந்து திருவிளையாடல்களை செய்தார். கடவுள் காட்சியாக வெளிப்பட்டார். கடவுள் உதவினார்.
கடவுள் தண்டித்தார். கடவுளே தோன்றி சுமந்தார் என்றெல்லாம் பதிவுகள் பார்க்க முடிகிறது.
இவற்றை சமூகம் தொடர்ந்து மதிப்புடனும் கண்ணியத்துடனும் பாதுகாத்தும் வைத்திருக்கிறது.
கடவுளை, முழு இருப்பை பேசுகிற இந்திய மரபு, சைவ மரபு, வைணவ மரபு எல்லாமும் கடவுள் குறித்து
மறைவான, பகுதி மறைவான, தோற்றமான என்ற வகைகளையும் வைத்திருக்கிறது. அவை முறையே கடவுள்
மறைவானவர் என்பதை அருவமானவர் என்றும் பகுதி மறைவானவர் என்பதை அருவுருவம் என்றும் தோற்றமானவர்
என்பதை உருவம் என்றும் கூட விளக்கிச் சொல்கிற செய்யுள்களும் பாடல்களும் ஆவணமாக இருக்கின்றன.
கடவுளோ இருப்போ முழுமையோ இருத்தலோ மனித சமூகத்திற்கு,
மனிதனின் நம்பிக்கைக்கு, மனிதன் ஏற்றுக் கொள்கிற, மனிதன் தடுமாறுகிற அவனை மீறிய அவனுக்கு
புரியாத புதிராய் இருக்கிற ஒன்றின் மீது உரையாடுதல் என்பது நிகழ்கிற போது கடவுள் கருத்தாக்கங்களும்
இயற்கையின் செயல்பாடுகளும் தனி மனிதனுக்கு ஏற்படுத்துகிற மலர்ச்சியை, நம்பிக்கையை மறை
நூல்களாக நாம் பார்க்க முடிகிறது.
மறை நூல்கள் வழியாக மனிதன் நம்பிக்கை கொள்கிறான்,
மலர்கிறான் என்பது ஒரு புறம். மலர்கிற, நம்பிக்கை கொள்கிற அம்சத்தோடு இருக்கிற மனிதன்
மறை நூலுக்கு பொருத்தமானவனாகவும் இருக்கிறான் என்பது நான் பார்க்கிற மனிதனினுடைய நற்குணம்.
இந்த வகையில் கடவுள் அருவமாக அசைவற்று அருவுருவமாக இருக்கிற நிலையில் இருந்த தன்மைக்குள்
இருக்கும் விவாதப் பொருள் மட்டுமின்றி கடவுள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிற செயல்களில்
எவ்வாறு இருக்கிறான் என்பதை வள்ளுவர் வகையில், வள்ளுவரின் வகைப்பாட்டில் நாம் பார்ப்பதற்கு
மகிழ்வாகவும் கடவுள் இருத்தலாக, இருப்பாக மெய்ப்பொருளாக மனிதனின் சிந்தனை வீரியத்திற்கு
அப்பாற்பட்ட ஒன்றாக இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கிறது என்பதை
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த குறளுக்குள் செல்வதற்கு முன் ஒரு உவமை
கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறது.
திருவிவிலியம் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம்
முழுவதும் ஒரு தனி நபரின் மாண்பைப் பற்றிய வசனங்கள் நிரம்பி இருக்கும். ஒரு தனி மனிதன்
எத்தகைய மென்மையான, மேன்மையான உணர்வோடு, தன்மையோடு இருக்கிறான் என்பதை ஆதியாகமம் குறிப்பிட்டு
இருக்கும். ஆதியாகமம் 6-9 ல் நோவாவை பற்றிய குறிப்பு வசனம், நோவா தன் காலத்தில் இருந்தவர்களுள்
நீதிமானாகவும் உத்தமனாகவும் இருந்தான். நோவா
தேவனுடனே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்று ஆதியாகமம் பழைய ஏற்பாட்டில் 6-9 வசனத்தில்
குறிப்பிடுகிறது. ஆதியாகமம் குறிப்பிடுவது போல கடவுளுக்குள் சஞ்சரிப்பவர்கள் உத்தமர்கள்.
தன்காலத்தில் இருக்கும் அனைவரையும் விடவும் சிறப்பு குணம் கொண்டவர்கள், பேரன்பு கொண்டவர்கள்
எப்போதும் நோவாவாகவே இருக்கிறார்கள். நோவாக்கள்
அப்படித்தான் இருக்கவும் முடியும். சமூகத்தில் மனித சிந்தனை முறைக்கு அப்பாற்பட்டவர்களாக
நோவாக்கள் இருப்பதுண்டு. அப்படியான நோவா பற்றி ஆதியாகமம் பழைய ஏற்பாட்டில் 6-9 ல் குறிப்பிடுகிறது நோவா தன் காலத்தில் இருந்தவர்களிலேயே நீதிமானாகவும்
உத்தமனாகவும் இருந்தார் என்று.
நோவாவை பற்றிய உவமை கதை இது. நோவா என்பவர் யாராக இருந்தார் என்று ஒரு அறிமுகம் இருக்கிறது.
பூமியிலேயே அதிக காலம் வாழ்ந்த மனிதர்கள் கிறிஸ்தவ மரபின்படி, யூத மரபின்படி ஆதாம்
ஏவாள் தோன்றிய காலம் தொட்டு 969 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ்ந்ததாக நோவாவை அறிமுகப்படுத்திய
வரலாற்றுக்குள் காண முடிகிறது. 969 ஆண்டுகள் மித்துசேலா என்ற ஒரு மனிதன் வாழ்ந்திருக்கிறான்.
மித்துசேலாவின் பேரன் தான் இந்த உத்தமனாய் இருந்த நோவா. நோவாவை தேர்வு செய்து நோவாவிற்கு உரிய வரலாற்றுக்
கடமையை பரமபிதா பணித்திருப்பது பற்றிய கதை இது.
இந்தக் கதையை நாம் உள்வாங்கிக் கொள்வதன் வழியாக புரிந்து கொள்வதன் வழியாக இறைவன்,
இருத்தல், மெய்ப்பொருள் இந்த பூமியில் எவ்வாறு வெளிப்படுகிறது? எவ்வாறு தன்னை நிரூபித்துக்
கொள்கிறது? எவ்வாறு தன்னை பிரதிபலித்துக் கொள்கிறது? என்பதை பார்க்க முடியும். நோவாவின்
காலத்தில் உலகம் கெட்டுப் போயிருந்தது. ஏறத்தாழ முழுவதும் சீரழிந்து போன காலமாக நோவாவின்
காலம் இருந்தது. அந்த சீர்கெட்ட மனித குலத்தை, உலகத்தை அழித்து புதியதோர் உலகை படைக்க
வேண்டும் என்று இறைவன் விரும்பினான். புதிய உலகத்தை படைப்பதற்கு யாரை தலைமையாக கொள்வது,
யாரிடமிருந்து துவங்குவது, யார் குறித்து இந்த வேலையை செய்விப்பது என்றெல்லாம் இறைவன் சிந்திக்கத் துவங்குகிற போது
இறைவனுக்கு நோவா பற்றி தோன்றுகிறது.
இறைவன் உலகை மாற்றி அமைப்பதற்கு சிந்தித்த
வேளையில் நோவாவை தேர்வு செய்கிறார். அந்த தேர்வைத்தான் குறிப்பிடுகிற போது திருவிவிலிய
குறிப்பு தம் காலத்தவர்களுள் நோவா நேர்மையானவராக, குற்றமற்றவராக இருந்தார் என்று இறைவனின்
பார்வையில் திருவிவிலியக் குறிப்பு ஆதியாகமத்தில் குறிப்பிடுவது போல குறிப்பிடுகிறது.
குற்றமற்ற, நாணயமான, மேன்மையான நோவாவை இறைவன்
அழைத்து தன் விருப்பத்தை சொல்கிறார். அந்த விருப்பம் என்னவென்றால், ஒரு பெரிய மரப்பெட்டியை
கப்பல் போன்ற ஒரு பெட்டியை கட்ட சொல்கிறார் இறைவன். கோபர் மரத்தால் செய்யப்பட்ட அந்த
பெட்டி மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். 300 முழ நீளமும் 50 முழ அகலமும்
30 முழ உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெட்டியை குறித்து இறைவனும் நோவாவும்
உரையாடுகின்றனர். இறைவன் மேலும் வழி காட்டுகிறார். உலகிற்கு தேவையான பறவைகள், விலங்குகள்
என எல்லாவற்றிலும் இருந்து ஆணும் பெண்ணுமாக 15 ஜோடிகள் ஒரு அடுக்கில் தனித்தனி அறையில்
விடப்பட வேண்டும் என்று இறைவன் பரிந்துரைக்கிறார்.
இன்னொரு அடுக்கில் விலங்கும் பறவைகளும் வாழ்வதற்கு
தேவையான உணவுப் பொருட்கள், நோவாவின் குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருள்கள், உடைகள்
போன்ற பொருட்களை நிரப்பி கொள்வதற்கு அந்த உரையாடல் தீர்மானிக்கிறது. மற்றொரு அடுக்கில்
நோவாவும் அவர் மனைவியும் அவரது மக்கள் சேம், காம், எப்பேத் என மூவரும் அவர்களது மனைவியரும்
தங்கிக் கொள்வதாக தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் எட்டு பேரும் பறவைகள், விலங்குகள்
முப்பதும் சேர்ந்து அந்த பேழையில் 38 உயிர்கள் இருந்தன என்று இந்த உரையாடலை படிக்கிற
போது நாம் புரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment