ஜான் ஹோல்ட் எனும் மதிப்பிற்குரிய குழந்தை
குழந்தைகள்
குறித்த உரையாடலில் ஜான் ஹோல்ட் எனும் மதிப்பிற்குரிய குழந்தை என்கிற தலைப்பின் கீழ்
நாம் எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் என்கிற புத்தகத்தை மையமாக வைத்து குழந்தைகள் தளத்தில்
உரையாடி பார்க்கிறோம்.
எனக்கு
தெரிந்த ஒரு குழந்தை பற்றிய கதையை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவர்
தந்தை ஒரு உணவகம் நடத்துகிறார். அந்த குழந்தையின் தந்தை ஒரு உணவகம் நடத்துகிறார். மதுரையில்
இருக்கிற ஒரு பிரபல்யமான ஆங்கில வழிப் பள்ளியில் அந்தக் குழந்தை இரண்டாம், மூன்றாம்
வகுப்பு படிக்கிற வயது. ஆங்கில வழி கல்வியில் படிக்கிறார். மிகுந்த கட்டணம் கட்டி படிக்க
வேண்டிய பள்ளி அது. கடுமையான முயற்சியின் பாற்பட்டு அந்த குழந்தையின் தந்தை அந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறார். தாயும் தந்தையும்
ஒரு எளிய உணவகம் வைத்திருக்கிற உழைப்பாளர்கள்.
ஒரு முறை அந்த உணவகத்தில் நான் உணவு வாங்குவதற்காக சென்றபோது அந்த குழந்தை என்னோடு அறிமுகம் ஆகிக்கொண்டார். நீங்கள் ஸ்கூலுக்கு வருவீங்க தானே என்று கேட்டுக் கொண்டார். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். உங்களோடு பேச முடியுமா என்றார். நான் ‘பேசுங்கள்’ என்றேன். ‘இல்ல, தனியா தான் பேசணும் என்று சொன்னார். நான் ‘பேசலாமே’ என்று சொன்னேன். உடனடியாக அந்த குழந்தை என்னிடம் என்னுடைய தொலைபேசி எண்ணை கேட்டார். நான் ஏதாவது உங்களுக்கு எண் இருந்தால் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இல்லை என்னிடம் எதுவும் இல்லை என்று வீட்டிற்குள் சென்று ஒரு கிழிந்த காகிதத்தை எடுத்து வந்த அவர் அவரது தந்தையிடமிருந்து பேனாவை வாங்கிக் கொண்டு எனது தொலைபேசி எண்ணை எழுதிக் கொண்டது. சிறு பையன். நான் அந்த குழந்தையினுடைய அதே முனைப்போடு என் தொலைபேசி எண்ணை அந்த குழந்தைக்கு பகிர்ந்து கொண்டேன். ‘சரி நான் உங்களுக்கு கூப்பிடுறேன். எந்த நம்பர்ல இருந்து கூப்பிடுவீங்கன்னு’ நான் கேட்டேன். என் அம்மா நம்பர்ல இருந்து கூப்பிடுவேன். அப்பா நம்பரிலிருந்து கூப்பிடுவேன் அந்த குழந்தை சொன்னாங்க என்கிட்ட தனியா பேசணும்னா அம்மா நம்பர்ல இருந்து அப்பா நம்பர்ல இருந்து கூப்பிட்டீங்கன்னா அது தனியா பேசுறது ஆகாதே. அது அவங்களுக்கு தெரிஞ்சிடுமேன்னு சொன்னேன். இல்ல நான் போன் வாங்கிட்டு தனியா வந்துருவே. அப்படின்னு சொன்னாங்க’. உடனே நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
ஒரு நாள், இரண்டு நாள் கழித்து ஒரு அறிமுகம் இல்லாத
தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்த உடனே அந்த குழந்தை
தன் பெயரைச் சொல்லி என்னை ஞாபகம் இருக்கா அப்படின்னு கேட்டாரு. நான் ஞாபகம் இருக்கு
அப்படினு சொன்னே. ஆனால் அவருக்கு நம்ப முடியல. என்ன யாருன்னு சொல்லுங்க பாப்பம்’. அப்படின்னு
சொன்னாரு. உடனே நான் கொஞ்சம் விளையாடி பார்க்கலான்னு நான் வேறு பள்ளிக்கூடத்தினுடைய
பெயரை சொன்னேன். இல்ல, அது இல்ல. இன்னும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க, அப்படின்னு சொன்னாரு.
அப்படி சொல்லும்போது நான் வேறு ஒரு விடை சொல்றேன். அந்த விடையை அந்த குழந்தை ஏற்றுக்
கொள்றதா இல்ல. இப்படி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் அந்த குழந்தைக்கு ஒரு விளையாட்டு
இருந்தது. இந்த மாஸ்டருக்கு நான் யாருன்னு
தெரியல இவருக்கு நான் யாருன்னு சொல்லுன்னு அவங்க அம்மா கைல போய் போன் கொடுக்கிறார்.
அவங்க அம்மா பேசல. அவங்க அப்பா வாங்கி பேசுறாரு. பேசின உடனே அந்த குழந்தை இப்ப போன
வாங்கி இப்ப தெரியுதான்னு சொல்லுங்க நான் தெரியுது இப்பதான் கண்டுபிடிக்க முடிஞ்சதுன்னு
நான் சொன்னேன். இல்ல நான் உங்க கிட்ட பேசணும்னு சொன்னேன்ல அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
அந்த குழந்தை மறுபடியும் கேட்டாரு. இப்ப பேசலாம்னு நான் சொன்னேன். இந்த உரையாடலில்
அந்த குழந்தை ஒரு வழியாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு தன் உரையாடலை பேசத் துவங்கியது.
அப்ப
நான் ஏன் உன்கிட்ட பேசறேனு தெரியுமா? அப்படின்னு கேட்டுச்சு. நான் தெரியலையே அப்படின்னு
சொல்லி நான் ஏன்னு கேட்டேன். ஏன்னா உங்கள எனக்கு
ரொம்ப பிடிக்கும். அப்படின்னு சொல்லுச்சு. பிடிக்கும்னா எப்படி அப்படின்னு நான் கேட்டேன்.
பிடிக்கும்னா ஒரு கார் வச்சிருக்கோம் அந்த காரை பிடிக்கும் இல்ல அப்படி பிடிக்கும்
அப்படின்னு சொல்லுச்சு. கார்னா ரோட்ல போகும்ல அந்த காரா அப்படின்னு நான் கேட்டேன்.
இல்ல வீட்ல விளையாடுவோம்ல அந்தக் கார் அப்படின்னு அந்த குழந்தை சொன்னாங்க. நான் மறுபடியும்
என்கிட்ட நான் அந்த மாதிரி கார் இல்ல. அதனால எனக்கு பிடிக்கும்னா என்னன்னு தெரியல அப்படின்னு
நான் சொன்னேன். உடனே அந்த குழந்தை நான் உங்ககிட்ட என்ன வேணாலும் ஃப்ரீயா பேசலாம் அப்படின்னு
சொல்லுச்சு.
இந்த
தன்மையோடு இந்த உரையாடலின் அர்த்தத்தை நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டேன். என்ன வேணாலும்
பேசலாம் என்பதற்குள்ள அந்த குழந்தை எதை எனக்கு உணர்த்துகிறது என்று புரிந்து கொள்ள
முடிந்தது. இந்த உரையாடல் இன்னும் முடியல.
அந்த குழந்தை தொடர்ந்து பேசுறாங்க. எனக்கு நிறைய தகவல் சொல்றாங்க. நான் பள்ளிக்கூடத்துக்கு
போகணும். பள்ளிக்கூடத்தில் எனக்கு பக்கத்துல இருக்குறவரு புது பேக் வாங்கி இருக்காரு.
புது பேக்ல புது பென்சில்லாம் இருந்தது. நானும் எங்க அப்பா கிட்ட சொல்லி நானும் அந்த
பேக் மாதிரி ஒரு புது பேக் வேணும்னு கேட்டுகிட்டேன். இப்படி நிறைய தகவல்.
என்னைப்
பொருத்தவரை அந்த குழந்தை என்னுடைய வாழ்வியல் வேகத்தோடு அந்த குழந்தையினுடைய பேச்சு
மதிப்புக்குரியதாகவோ பொருள் நிறைந்ததாகவோ பார்க்க முடியவில்லை. என்னுடைய வாழ்வியல்
வேகம் வேற மாதிரியான தளத்தில் இருந்தது. ஆனாலும் கூட அந்தக் குழந்தை தொடர்ந்து இந்த
செய்திகளை சொல்லியது.
ஆனால்
அந்த குழந்தையினுடைய கருத்தின் அடிப்படையில அந்த கருத்து மிகுந்த மதிப்புக்குரியது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த முக்கியத்துவத்திற்கு அந்த குழந்தை எடுக்கிற
முயற்சியை நான் மிகுந்த மரியாதையோடு பார்க்கிறேன் என்கிற அடிப்படையில் அந்தக் குழந்தையினுடைய
பேச்சு முழுவதையும் ஒரு 20 நிமிடம் அந்த உரையாடல் நீண்டது. அந்த உரையாடல் முழுவதும்
அந்த குழந்தை என்னவாக இருக்கிறதோ அந்த நிலையிலேயே பயணிக்கிற ஒரு பயணத்தை நான் பார்க்க
முடிந்தது. இந்த நிலைக்கு தடையில்லாத நிர்பந்தம் இல்லாத கட்டுப்பாடு இல்லாத அழுத்தம்
இல்லாத நிலை என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்த நிலையை விளக்கி சொல்வதற்காக
அல்லது இந்த நிலையினுடைய தன்மையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் சில முறைகளை
கையில் எடுக்க வேண்டி இருக்கிறது. சில முறைகள் மீது பேசிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
அப்படி ஒரு உரையாடல் ஒரு மனிதன் மீது அழுத்தத்தை குறைக்கும் என்றால் அல்லது அழுத்தம்
இல்லாத வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உதவி செய்யும் என்றால் அந்த நிர்பந்தம்
அற்ற தன்மைக்கான அழுத்தமில்லாத தன்மைக்கான ஒரு புரிதலோடு எல்லாவற்றையும் பார்க்க வேண்டி
இருக்கிறது, அணுக வேண்டி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்த
குழந்தையின் உரையாடலை இந்த குழந்தை சொல்லிய கதைகளை அந்த குழந்தைக்கு இருக்கக்கூடிய
உணர்வுகளை அந்த குழந்தையின் தன் மொழி வழியாக பேசிக் கொண்டே இருந்தது. அந்த உரையாடல்
முழுவதும் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. சில வார்த்தைகள் முன்பின்னாக இருந்தாலும்
கூட அந்த உரையாடல் முழுவதும் எனக்கு இப்போதும்
ஞாபகம் இருக்கிறது.
என்
நினைவில் இருக்கிற உரையாடல் வழியாக அந்த குழந்தை எனக்கு உணர்த்திய பொருள் நிர்ப்பந்தம்
இல்லாத ஒரு நபர் அந்த குழந்தைக்கு பிடித்தவராக மாறி போகிறார் என்று பார்க்க முடிந்தது.
இந்த நிலை குறித்து குழந்தைகள் பற்றி பேசுபவர்களுடைய பகுதிகளில் இது மிகுந்த குறைவாக
காணப்படுகிறது. குழந்தைகள் பற்றி பேசுகிற எல்லா சித்திரங்களும் எல்லா இலக்கியங்களும்
எல்லா தத்துவ விசாரணைகளும் குழந்தைகள் அழுத்தப்படுகிறார்கள் என்கிற பார்வையில் பார்ப்பது
மிக மென்மையாக அல்லது இல்லாத வாசனையோடு அது இருக்கிறது. இந்த குழந்தை கதையை நான் உங்களோடு
பகிர்ந்து கொண்டு நான் இந்த முன்னுரையை துவங்குவதற்கான முக்கிய காரணம் அழுத்தமின்மையும்
நிர்ப்பந்தமின்மையும் கட்டாயப்படுத்துதலும் இல்லாத நிறை என்பது குழந்தைக்கு குழந்தைக்கு
பிடித்தமான நிலை என்று அனுபவமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதை நான் அனுபவமாக புரிந்து கொண்டது. இதை பெரியவர்கள் தளத்தில் பார்க்கிறபோது இத்தகைய
நிர்பந்தங்கள் பெரியவர்களுக்கு குழப்பமானதாகவும் சிக்கலானதாகவும் அழுத்தம் தருவதாகவும்
இருக்கிறது. இந்த பெரியவர்களையும் குழந்தைகளையும் அழுத்தம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை
தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஜான் ஹோல்ட். குழந்தைகளையும் பெரியவர்களையும் என்று
சேர்த்து குறிப்பிடுவதற்கு அவர் ஒரு புத்தகத்தை முன்வைத்து அந்த முன்னுரையை துவங்குகிறார்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment