ஜான் ஹோல்ட் எனும் மதிப்பிற்குரிய குழந்தை புத்தக முன்னுரை
அந்த
முன்னுரையில் சொல்லப்படுகிற முதல் துவக்கமே அந்த புத்தகத்தில் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வாறு கற்றலை, வாழ்வை,
வாழ்வின் புரிதலை புரிந்து கொள்வதற்கு தொடங்குகிறார்கள் என்ற தன்மையில் அந்த புத்தகத்திற்குள் விவாதிக்கப்படுவதாக ஜான் ஹோல்ட்
தன்னுடைய முன்னுரையை தொடங்குகிறார்.
ஒரு
குழந்தை அல்லது ஒரு குழந்தை நிலையை தாண்டிய பெரியவர்கள் கற்றுக் கொள்வதற்கு உரிய வயது
மூன்று முதல் ஐந்து வயது வரை என்று ஒரு பருவத்தை சுட்டிக் காட்டுகிறார். இதற்குள் ஒரு
கேள்வி எனக்கு எழுகிறது. அந்த புத்தகத்தினுடைய அறிமுகமும் அந்த அறிமுகத்தை ஒட்டி எதற்காக
தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன் என்கிற
காரணத்தையும் முன்னுரையில் சொல்ல துவங்குகிற ஜான் ஹோல்ட், தனது முன்னுரையில் பெரியவர்களும்
குழந்தைகளும் கற்றுக் கொள்வதற்கான பருவமாக மூன்று முதல் ஐந்து வயது வரை இருக்கிறது
என்று குறிப்பிட்டு மேலும் இந்த கற்றலுக்கான செயல்பாடுகளை விவரித்து பேசுகிற எல்லா
ஆய்வாளர்களும் கற்றுக் கொள்ளும் முறைகள் மீது விமர்சனங்களை வைக்கிறார்களே தவிர கற்றல்
இந்த காலகட்டத்தில் நிகழ்கிறது என்பதை மறுக்கவில்லை என்ற தலைப்பில் அந்த புத்தகத்தை
அறிமுகம் செய்து உரையாடலை முன்னுரையை தொடங்குகிறார்.
இந்த கற்றல் என்பது அல்லது நிர்பந்தம் என்பது இந்த முன்னுரையின் முற்பகுதியில் பேசப்படுகிற பொருண்மை. இந்த பொருளில் முன்னுரையின் முற்பகுதி அமைந்திருக்கிறது. முதல் செய்தியாக நான் பார்க்க விளைவது, நான் பார்க்க வேண்டுவது ஒரு மனிதன் கற்றுக் கொள்வதற்கான வயது மூன்று முதல் ஐந்து வரை என்பதாக இருக்கும் என்றால் கற்றுக் கொள்வது என்பது எதை, எதற்காக என்கிற தளத்தில் நாம் இதை உரையாடிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
குழந்தைகள்
இப்போது கற்றுக் கொள்கிறார்கள். எனவே இந்த வயதிலேயே நாம் அவர்களுக்கு கற்றலை கற்றுக்
கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று விவாதிப்பது ஜான் ஹோல்டுக்கு மிக இசைவான
விவாதமாக இருக்கும். ஆனால் கற்றுக் கொள்வது என்பது எதை, எதற்காக என்று நாம் பார்க்க
வேண்டி இருக்கிறது பார்க்க வேண்டும் என்று ஜான் ஹோல்ட் இந்த முன்னுரையை இவ்வாறு துவங்குகிறார். அந்த வகையில் எதை கற்றுக் கொள்வது
என்றால் பெரியவர்கள் சமூகத்தில் வெற்றியாளர்களாக மாறிய பெரியவர்கள் மிகுந்த கற்றலோடு
கற்றல் திறனோடு இருந்ததாக, இருப்பதாக நமக்கு ஒரு பார்வை இருக்கிறது.
மிகுந்த
திறமை மிக்க வெளிப்பாடுகள் அவர்களை சிறந்த கற்றலை கடந்தவர்களாக பார்க்கச் செய்கிறது.
இதுவும் சமூகப் பார்வை தான். ஒரு குறிப்பிட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட
வயதிற்குள் ஒருவர் அடைவார் என்றால் அவரும் சிறந்த முறையில் கற்றலை கடந்து இருக்கிறார்
என்று பொருள். இப்படியான சமூகப் பார்வையில் ஒரு குறிப்பிட்ட வயதில், குறிப்பிட்ட இலக்கை
அடைவதோ குறிப்பிட்ட சமூக செயல்பாடுகளோடு பொருந்திப் போவதோ தேர்வு முறைகளில் வெற்றி
பெறுவதோ சிறந்த கற்றலாக இருக்கும் என்றால் அந்தக் கற்றலை மூன்று வயதில் இருந்து ஐந்து
வயதிற்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எத்தகைய பார்வை என்று நாம் விவாதிக்க வேண்டி
இருக்கிறது. ஏனென்றால் ஜான் ஹோல்டினுடைய பார்வை
அடுத்தடுத்த பக்கங்களில் குழந்தைகள் தானாக மலர்கிறார்கள். தானாக தன்னை வெளிப்படுத்திக்
கொள்கிறார்கள். தனக்குள் இருக்கிற ஒரு ஆன்மாவோடு அவர்கள் பயணிக்கிறார்கள் என்றெல்லாம்
வேறு வேறு பக்கங்களில் பேசுகிறார்.
இந்த
செய்திகளில் இருந்து பார்க்கிறபோது புத்தகத்தினுடைய நிறைய ஆய்வுகளில் இருந்து பார்க்கிறபோது
குழந்தைகள் தனக்குள் வளர்ச்சி அடைகிறார்கள், அகமாற்றம் அடைகிறார்கள் என்ற பெரிய நிஜம்
குறித்து ஜான் ஹோல்டினுடைய உரையாடல் இருக்கிறது. ஆனாலும் ஜான் ஹோல்ட் மூன்று வயதில்
இருந்து ஐந்து வயதிற்குள் படிக்க முடிகிறது, கற்க முடிகிறது என்கிற ஒரு வாதத்தை முன்
வைப்பதற்கான காரணம் என்னவென்று கேள்வியாகவே இருக்கிறது. இந்த வயதில் கற்றுக் கொள்வது
என்பது எதை நோக்கிய கற்றல் என்று நான் பார்க்க வேண்டி இருக்கிறது. நவீன ஆய்வு முறைகள்
குழந்தைகளை இந்த வயதில் இருந்து இந்த வயதிற்குள் கற்பதற்கு புதிய புதிய ஆய்வுகளை செய்கிறார்கள்
என்று சொன்னால் அந்த ஆய்வு பள்ளிக்கூடத்திற்குள் அவர்களை பொருத்துவது அல்லது சமூகத்திற்குள்
அவர்களை பொருத்துவது குறுகிய காலத்தில் நிறைய
நினைவாற்றலை பெருக்கிக் கொள்வது என்றெல்லாம் கூட பார்க்க வேண்டிய நிலையில் நாம்
இருக்கிறோம்.
இத்தகைய
சமூக பொறுக்கத்திற்காக சமூகத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக கற்கும் முயற்சி மூன்று
வயதில் இருந்து ஐந்து வயதிற்குள் துவங்குகிறது என்று ஜான் ஹோல்டு சொல்கிறாரா. அத்தகைய
சமூக பொருத்தத்திற்குரிய முயற்சியில் அழுத்தம்
இருந்தாலும் அழுத்தம் இல்லாவிட்டாலும் என்ன நன்மை விளையப்போகிறது என்று ஒரு விமர்சன பூர்வமாக இந்த உரையாடலை முன்னுரையிலிருந்து
பேசிப் பார்க்க முடியும். இத்தகைய தன்மையோடு அந்த களம் இருக்கிறது. இந்த புத்தகத்தை
வாசிக்கிற ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தின் மீது மதிப்புமிக்க ஒவ்வொருவரும் இந்த சமூகத்தோடு
நாம் இணைவதற்காகத்தான் கற்க வேண்டுமா என்று நம்மை ஒருமுறை கேள்வி கேட்டு பார்க்க வேண்டி
இருக்கிறது.
சமூகத்தோடு
இணைவதற்காக அழுத்தம் இல்லாத கல்வி, நிர்பந்தம் இல்லாத கல்வியைத்தான் மாண்டிசோரி அம்மையார்
வரையறுத்து சொல்கிறார். இத்தகைய வரையறையின்
உள்ளே தான் ஜான் ஹோல்டும் இருக்கிறாரா என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இத்தகைய
வரையறைக்குள் மாண்டிசோரி அம்மையார் சொல்லி
வைத்த வரையறையை போல் ஜான் ஹோல்டின் வரையறையும் இருக்கும் என்றால் மாண்டிசோரி அம்மையாரை
போல் ஜான்கோல்டும் பள்ளிக்குள் இருக்கிற தேர்ச்சி விகிதத்தில் தன்னை சிக்க வைத்துக் கொள்வார் என்று எனக்கு தோன்றுகிறது.
ஆனால்
இப்படியான தன்மையில் மட்டும் ஜான் ஹோல்ட் இருப்பதாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜான் ஹோல்டினுடைய பூலோக பின்னணி, அவர் வாழ்ந்த நாட்டினுடைய சமூக அறிவுசார் பின்னணி
என்று ஒன்று இருக்கிறது. அமெரிக்க போன்றதொரு
வளர்ந்த நாட்டில் வளர்கிற இருக்கிற குழந்தைகளை பார்ப்பதற்கு பணியாற்றுகிற ஆசிரியரினுடைய
மனநிலை என்ன என்கிற தளத்திலிருந்து பார்க்கிறபோது ஜான் ஹோல்டை நாம் இன்னும் கொஞ்சம்
ஆழமாக புரிந்து கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.
அமெரிக்காவில்
இருக்கிற ஆசிரியர்களுடைய மனநிலை என்னவாக இருக்கிறது என்று ஒரு பெரிய வாதம் இருக்கிறது.
அது முழுக்க வேறு பண்பாடு கலாச்சாரம் கொண்ட நாடு. இந்திய சமூகத்தில் இருந்து அமெரிக்க
சமூகத்தை ஒப்பிட்டு பார்த்தோம் என்று சொன்னால் 15 வயதில் இந்திய சமூகத்தில் இருக்கிற
ஒரு பெண் குழந்தை, பூப்பெய்திருக்கிற நேரத்தில் பூப்பெய்து ஓரிரு ஆண்டுகள் ஆகியிருக்கிற
காலகட்டத்தில் திருமணத்தை நோக்கி தயார் செய்கிற சமூக அமைப்பில் இருக்கிறது. ஆனால் அமெரிக்கா போன்றதொரு நாட்டில் 15 வயதில் குழந்தை
தனக்கான பள்ளி படிப்பு கல்லூரி படிப்பிற்கான செலவினங்களை வேலை செய்து பெற்றுக் கொள்ளக்கூடிய
நிலைக்கு அந்தக் குழந்தை தன்னை தயார் படுத்திக் கொள்ளக்கூடிய சூழல் அமெரிக்காவில் இருக்கிறது.
அதற்கான அந்த குழந்தையினுடைய பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகள், கல்வி குறித்த ஏற்பாடுகள்
இத்தகைய சமூக துணிச்சல் இவை எல்லாமும் அமெரிக்கா சூழலில் இருக்கிறபோது ஒரு குழந்தை
என்னவும் செய்து கொள்ள முடியும் என்கிற தன்மையிலேயே அமெரிக்க குழந்தைகள் இருக்கிறார்கள்.
இப்படி
தனக்கான தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சமூகம் நிர்பந்திக்கின்ற
நிர்பந்தத்தில் தனக்கான தேவையை தானே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் இன்று சமூகம் கொடுக்கிற
அழுத்தத்தில் உருவாகிற குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி முறையும் செயல்பாட்டு முறையும்
தேவைப்படுகிறது என்ற ஆய்விலிருந்து ஒரு மாற்றுப் பாதையை ஜான் ஹோல்ட் முன் வைக்கிறார்
என்ற தளத்திலிருந்து ஜான் ஹோல்டை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இது ஒரு ஆழமான பகுதி.
இந்த, அமெரிக்காவில் இருக்கிற ஒரு 14 வயது,
15 வயது இளம் பெண் ஒரு இளைஞர் பள்ளிப்படிப்பை பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்பை தொடர்வதற்கு
தனியாக நின்று வேலை பார்த்து பணம் சம்பாதித்து அதன் மூலமாக கற்க வேண்டும் என்று சுய
சார்பாக பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்கிற முடிவின் அடிப்படையில் ஒரு சமூகம் இருக்கிறது அமெரிக்க சமூகம்.அந்த சமூக நிலையில் இருந்து சமூக
எதார்த்தத்தில் இருந்து நாம் ஜான் ஹோல்டை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு 15 வயதிலேயே சமூகத்தோடு
உறவாட வேண்டும் என்று கருதுகிற ஒரு குழந்தை அதற்குரிய அறிவை எந்த வயதில் பெற்றுக் கொள்கிறார்
என்று அமெரிக்க கல்வி முறை ஆய்வு செய்ய துவங்குகிறது. அதில் ஒருவர் 7 வயதில் பெற்றுக்
கொள்கிறார் என்று கூறுகிறார். எட்டு வயதில் பெற்றுக் கொள்கிறார் என்று கூறுகிறார்.
ஆறு வயதில் பெற்றுக் கொள்ளப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி அமெரிக்க குழந்தைகளினுடைய சமூக இணக்கத்தை
மையமாகக் கொண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகிற போது அந்த அமெரிக்க சமூகத்தில் சுயமாக
தன்னை இணைத்துக் கொள்ளக்கூடிய இணைப்பு வேலையை அந்த குழந்தை எந்த நேரத்தில் பெற்று கொள்கிறது என்ற எதார்த்த
தன்மையோடு ஒரு ஆய்வை குழந்தைகள் பற்றி ஜான் ஹோல்ட் துவங்குகிறார்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment