உங்கள் அறிவை மிர்தாதிடம் பற்றவைத்துக் கொள்ளுங்கள்
வணக்கம். ஒரு நூல் குறித்து, புத்தகம் குறித்து விரிவான அறிமுகத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இந்த புத்தகம் அவசியமான புத்தகமாக இருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
உலக ஆன்மீகம் குறித்த, யோகா மற்றும் தியானம், சமாதி நிலை குறித்த ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் பயன்படக்கூடும். பயன்படக்கூடும் என்பதை விடவும் உலகம் முழுவதும் ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு, உலகம் முழுவதும் தன்னை அறியும் தேடல் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டிய புத்தகங்கள் என்று பரிந்துரைக்கப்பட வேண்டிய மறை நூல்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்தோம் என்றால் முதல் பத்து நூல்களுக்குள் அந்த பட்டியலில் இந்த புத்தகம் நிச்சயமாக இடம் பெறும்.
இந்திய சூழலில், இந்திய வாழ்க்கை முறையில் ஆன்மீகத்தை எவ்வாறெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அவ்வாறெல்லாம் பதிவு செய்வதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் இந்திய ஆன்மீகம் பயன்படுத்தி இருக்கிறது. மேலும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆன்மீக குருமார்களும் ஆன்மீகம் குறித்து பேசுபவர்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் இருக்கிறார்கள். இவ்வளவு கலவையான தேடல்மிக்க ஒரு இந்தியச் சூழல் உலகிற்கு பரிந்துரைக்கிற ஆன்மீக ஒளியை உலகம் முழுமைக்குமான மையப்பட்ட, உலகம் முழுமைக்கும் பொதுவாக பேசுவதற்குரிய அழகோடு, மையப்படுத்தப்பட்ட சிந்தனையோடு ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தைத் தான் நான் உங்களோடு, உங்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.
இந்தியச் சூழலில் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் பருவ நிலையிலும் மனிதன் அவற்றோடு ஒன்றிக் கரைய முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அத்தகைய நம்பிக்கைக்கு சான்றாக, பல்வேறு வகையான பரிந்துரைகளும் மறை வழிகாட்டுதல்களும் இருக்கிறது. அவை எல்லாமும் இந்திய சூழலில் இருக்கிற வாழ்கிற மனிதனுக்கு வாழ்வின் நோக்கத்திற்கு தேவையான ஒன்றை தந்து கொண்டே இருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
இந்திய மனிதன் தன் வாழ்வை பிறவிப் பெருங்கடல் கடந்து, வாழ்ந்து முடிப்பதற்குரிய திட்டத்தோடு இந்த பூமிக்கு வருகிறான் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. மேற்கத்திய அல்லது பகுத்தறிவுவாத சிந்தனைகளுக்கு பிறகு அது ஆத்திக, நாத்திக விவாதமாக மாறியதற்கு பிறகு மனிதனுக்குள் இருக்கிற சிந்தனாமுறை மீது, இந்திய சூழலில் இருக்கிற மனிதனுக்கு இருக்கிற சிந்தனா முறை மீது ஏற்பட்டு இருக்கிற மாற்றம் ஆன்மீகத்தையும் இந்திய மரபில் இருக்கிற தேக்கத்தையும் உடைத்துக் கொள்வதற்கான தன்மையோடு ஒரு விவாதம் தேவைப்படுகிறது. விவாதம் தேவைப்பட்டு இருக்கிறது. அந்த விவாதத்திற்குரிய அத்துணை சாராம்சங்களோடும் ஒரு புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது என்கிற அடிப்படையில் இந்த புத்தகத்தை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு. நீங்கள் ஆன்மீக, தத்துவ இதழ் கொண்ட வாசனையோடு இந்த புத்தகத்தை வாசிக்க முற்பட்டீர்கள் என்றால் அதற்குரிய அம்சங்களை இந்த புத்தகம் அதற்குள் வைத்திருக்கிறது. ஆன்மீக நாட்டம் இல்லாமல் சுறுசுறுப்பான, துடுக்கான இளைஞனின் கதையை நீங்கள் படிப்பதற்கான ஆர்வத்தோடு இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினாலும் இந்த புத்தகத்திற்குள் அத்தகைய வழிப்போக்கும் இருக்கிறது. ஒரு கதையில் இருக்கிற சாகசங்களோடு ஒரு இலக்கியம் போல இந்த புத்தகத்தை நீங்கள் வாசிப்பதற்கு விரும்பினாலும் இந்த புத்தகம் உங்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்த புத்தகம் இலக்கியமாக, ஆன்மீகமாக, மறை நூலாக ஒரு வாசிப்பிற்குரிய எல்லா தாகத்தையும் நிவர்த்தி செய்கிற அம்சங்களோடு உங்களுக்கு எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் என்று நான் திடமாக நம்புகிறேன். இந்த புத்தகம் நீங்கள் எந்த வகையில் படித்தாலும் குறிப்பாக ஆன்மீகத்தை தேர்வு செய்து, தத்துவத்தை தேர்வு செய்து நீங்கள் படிப்பீர்கள் என்று சொன்னால் இதுதான் நீங்கள் படிக்கிற புத்தகமாக இருக்கும் என்று அந்த புத்தகத்தை துவங்குகிற எழுத்தாளர்கள் எல்லோரும் அந்த புத்தகம் பற்றி பேசுகிற பேச்சாளர்கள் எல்லோரும் பதிவு செய்கிறார்கள்.
ஒரு நீளமான நாவல் போல, பெருங்கதையாடல் போல, நடக்கிற, செயல்படுகிற உரையாடல்கள் இந்த புத்தகத்திற்குள் நிரம்பி வழிகின்றன என்பதை நீங்கள் புத்தகத்தை வாசிக்கிறபோது உங்களால் கண்டுகொள்ள முடியும். ஆனால் இந்த புத்தகம் எழுதப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்திய மொழி பெயர்ப்பிற்கு
மிக சமீபத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. என்றாலும் கூட இந்த புத்தகத்திற்குள் இருக்கிற வேறொரு பேரழகு நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த புத்தகத்திற்குள் ஒரு பெரிய கதையாடல் இருக்கிறது. அதற்கு இணையான சிறிய கதையாடல்களும் இருக்கின்றன. பெரிய கதையாடல் என்பது புத்தகத்தை நீங்கள் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரைக்கும் படித்து முடிக்கிற போது இந்த கதையாடலில் நீங்கள் பங்கேற்க முடியும். ஒரு நீளமான நேர அவகாசம் இல்லாத போது கூட இந்த புத்தகத்தின் ஏதாவது ஒரு பகுதியை நீங்கள் திறந்து ஒரு சுருக்கமான சிறுகதை போல் ஒன்றை படித்து முடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இரண்டு வகையாகவும் இந்த புத்தகத்தை நீங்கள் திறந்து வாசித்து, மகிழ்ந்து கொள்வதற்கு வாய்ப்பை இந்த புத்தகம் வைத்திருக்கிறது. எல்லா பெருங்கதையாடல்களுக்கும் அப்படி அமைந்து விடுவதில்லை. பின்னாளில் வந்திருக்கிற, இலக்கியங்களில் இருக்கிற பெருங்கதை கொண்ட புத்தகங்களுக்குள் நீங்கள் வாசித்துப் பழகுகிற போது ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து நீங்கள் புத்தகத்தை திறந்து வாசித்தால் முன்னால் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று உங்களால் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. தொடர்ந்து என்ன சொல்லுவார்கள். அந்த புத்தகம் எதை நோக்கி நகர்கிறது என்று கண்டுபிடிப்பதற்கும் சாத்தியமில்லை. சில புத்தகங்களில், இலக்கிய புத்தகங்களில் கதையாடல் குறித்த புத்தகங்களில், பெரும் கதைகளில் அப்படியான விதிவிலக்காக சில புத்தகங்கள் உங்களுக்கு வாசிப்பதற்கு வாய்க்கக் கூடும். இந்த புத்தகம் நிச்சயமான அப்படிப்பட்ட தன்மையோடு உங்கள் கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பளிக்கிறது.
நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் இந்த முழுப் புத்தகத்தையும் வாசிக்க வாய்ப்பு இருந்தால் வாசிக்கலாம். ஒரு நீண்ட நேரம் எடுத்து, ஒரு காலச் சூழல் வாய்ப்பிருக்கும் என்றால் முதல் பக்கத்தில் இருந்து, முதல் அத்தியாயத்தில் இருந்து, முன்னுரையில் இருந்து புத்தகத்தினுடைய கடைசி வாக்கியம் வரை உங்களால் வாசிப்பதற்கு அவகாசம் கொண்டு வாசிக்க முடிந்தால் மதிப்பிற்குரியது. அது உங்களுக்கு ஒரு பெரும் கதையைப் படித்த கணத்தையும் தத்துவத்தை தேடி முடித்த தீர்வையும் உங்கள் முன் வைத்திருக்கும். இல்லை என்றாலும் நீண்ட நேரம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அந்த புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து உங்களுக்கு இருக்கிற நேரம் வரை அந்த புத்தகத்திற்குள் இருக்கிற காட்சிகளை, உரையாடல்களை வாசிப்பீர்கள் என்று சொன்னால் உங்கள் ஆன்மீக, தத்துவ மறைதேடலுக்குரிய ஒரு சங்கதியை நீங்கள் படிக்கிற 10,15 நிமிடங்களுக்குள் அந்த புத்தகம் உங்களுக்கு பரிசளித்து தன்னை நிறுத்திக் கொள்ளும். அவ்வளவு அழகான கோர்வையாக, சிறுகதைகளை தொகுத்த பெரும் கதையாக, சிறு துளிகளை சேர்த்த பெருமழையாக, சிறு சேமிப்புகளாக குவிந்த பெரும் பொக்கிஷமாக அந்த புத்தகம் இருக்கிறது என்பதை நான் உங்களுக்கு இந்த புத்தகத்தை அறிமுகம் செய்யும்போது குறிப்பிட விரும்புகிறேன். ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் எழுத்து வடிவில் இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்பது வரவேற்புக்குரியது. ஏனென்றால் மேற்கத்திய எழுத்தாளர்கள் பெரும்பாலும் தர்க்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். பின்பற்றுதலை நம்புகிறவர்கள். விவாதம் செய்து, முடிவு செய்ய முடியும் என்று விவாதத்தை தூண்டுகிற வேலையோடு அவர்கள் பதிவு காலங்காலமாக செய்யப்பட்டிருக்கிறது. கரம்சாவ் சகோதரர்கள் என்கிற நூல்கள் போன்ற பெரும் கதையாடல்களில் உள்ளுணர்வு குறித்த உரையாடல்கள் இருக்கின்றன.சகாவ், தத்தாவெஸ்கி உள்ளிட்ட நாவலாசிரியர்களும் மாக்சிம்,கார்க்கி போன்ற ருசிய எழுத்தாளர்களும் தர்க்கம் கடந்த வேறொரு உள்ளுணர்வை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது மேற்கத்திய இலக்கிய பதிவுகள் வழியாக நாம் பார்க்க முடியும்.
உளவியல் சிந்தனை இந்த உலகில் மேல் எழுவதற்கு காரணமாக மேற்கத்திய எழுத்தாளர்களின் தர்க்கம் கடந்த ஆய்வுகளும் இலக்கிய பதிவுகளும் காரணமாக இருந்திருக்க கூடும் என்று சிக்மன் ஃபிராய்டை பற்றி பேசுகிறவர்கள், உளவியலின் காரண காரியங்களை பற்றி விவாதிப்பவர்கள் குறிப்பிடுவதுண்டு.
அத்தகைய வாழ்வியல் மறை செயல்பாட்டில் இருந்து பார்க்கிறபோது, தர்க்க ரீதியான வழிமுறைகளில் இருந்து பார்க்கிறபோது, மேற்கத்திய இலக்கிய பதிவுகளில் மேற்கத்திய இலக்கிய ஆவணங்களின் வழியாக ஒரு பெரும் பயணம் மேற்கொள்கிற போது தர்க்கமும் விவாதமும் நிறைந்து வழிகிற ஒரு இலக்கிய பதிவுகளுக்கு மத்தியில் சில சிறுகதைகளும் பெரும் நாவல்களும் வந்து சேர்ந்திருக்கின்றன. அவை உளவியல் உருவாவதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தும் இருக்கின்றன. அவை எல்லாமும் புரட்சிகரமான, சிந்தனை ரீதியில் உலகை மாற்றுவதற்குரிய, அமைப்பு விதிகளை மேம்படுத்துவதற்குரிய ஆலோசனை விதிகளை மையப்படுத்தியவைகளாக முடிந்தவைகளும் உண்டு.
படிப்பவர்களின் மானசீக எல்லைக்கு தகுந்தார்போல், மேற்கத்திய இலக்கியங்களை வாசிப்பவர்களின் எல்லைக்கு தகுந்தார்போல், மனவிசாலத்திற்கு தகுந்தார்போல் அந்த இலக்கிய பதிவுகள் விரிவான தளத்தை தொட்டதும் உண்டு. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ஒரு வாழ்வியல் நூலாக, வாழ்வியல் செயல்பாட்டு ஆவணமாக, வாழ்க்கை முறைக்குரிய சங்கதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான குறிப்பு நிறைந்த, தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட, பின்பற்றுவதற்கு அப்பாற்பட்ட, செய்து பார்ப்பதற்கும் தேடுவதற்கும் தயாராக இருக்கிற தயாரிப்பு மனநிலை கொண்ட எல்லோருக்குமான வழிகாட்டி போல ஒரு நூல், ஒரு புத்தகம் இருக்கிறது என்றால் நான் குறிப்பிடுகிற இந்த புத்தகத்தை உறுதியாக சொல்ல முடியும்.
ஆன்மீகம், மறைநூல் பேசுகிற, தத்துவங்கள் பேசுகிற எல்லா ஆசிரியர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இந்த நூலை முதன்மை வரிசையில் வைத்திருக்கிறார்கள் என்பது இந்த நூலுக்கு கிடைத்த மிக முக்கியமான பெருமை. மிக்கேல் நெய்மி வரைந்த பெரும் ஓவியம் இந்த நூல். “இந்த ராஸ்கல் இந்த புத்தகத்தை எழுதி இருக்காவிட்டால் நான் இந்த புத்தகத்தை எழுதி இருப்பேன்” என்று இந்திய தத்துவ மாமேதை ஓஷோ இந்த புத்தகம் குறித்து பதிவு செய்கிறார்.
சமகாலத்தில் இருக்கிற, ஆன்மீகம் பேசுகிற ஆன்மீகவாதிகளும் மறைநூல் பேசுகிற மறைநூல்வாதிகளும் கூட இந்த புத்தகத்தை பதிவு செய்கிறார்கள். விவரித்து பேசுகிறார்கள். இந்தப் புத்தகத்தின் தலைப்பை பின்பற்றி தம்மை மிர்தாதிகள் என்று சொல்லிக் கொள்கிற குழுக்கள் கூட உருவாகி இருக்கின்றன என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த புத்தகத்தினுடைய வாழ்வியலை பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இந்த புத்தகத்தின் உள்ளே இருக்கிற மறை செய்திகளை போற்ற வேண்டும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த புத்தகத்திற்கு உள்ளே நாமும் பயணித்து பார்ப்பதற்கு தைரியம் உள்ளவர்கள் தம்மை மிர்தாதியல் என்று கூறிக்கொண்டு இந்த புத்தகத்தை கையில் தூக்கிக்கொண்டு ஒரு வாழ்வியல் முன் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதும் கூட இந்திய சமூகத்தில் இப்போது நாம் பார்க்க முடிகிறது. கேள்விப்பட முடிகிறது. அத்தகைய தாக்கம் ஏற்படுத்தி இருக்கிற மிக முக்கியமான புத்தகம் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த புத்தகத்தின் பெயர் "மிர்தாத்தின் புத்தகம்".
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment