மிர்தாதின் புத்தகம்
மிர்தாதின் புத்தகம் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிற புத்தகங்களில் ஒன்று என்பது மிக ஆச்சரியமான ஒன்று. மறை நூலாக இல்லாமல், தத்துவ நூலாக இல்லாமல், கொள்கை கோட்பாடுகளை முன் வைக்காமல் ஒரு நூல் உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமானது தான்.
திருவிவிலியம் உலகம் முழுவதும் அறியப்பட்ட நூல். ஏனென்றால் உலக வரலாற்றை கிறிஸ்துவிற்கு முன்பு, கிறிஸ்துவிற்கு பின்பு என்று பிரித்து அறியும் அளவிற்கு, பிரித்துப் பேசும் அளவிற்கு உலக மக்களின் மத்தியில், ஆய்வாளர்கள் மத்தியில், வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையின் குறிப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கிற திருவிவிலியம் உலகம் முழுவதும் அறியப்பட்டிருப்பதற்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. திருவிவிலியம் உலகம் முழுவதும் அறியப்பட்ட நூல். குர்ஆன் அவ்வாறே உலகம் முழுவதும் அறியப்பட்ட நூல். இவை மறை நூல்கள். இந்திய சமூகத்தில் இருந்த மறை நூல்களும் உலகம் முழுவதும் அறியப்பட்டவைகளாக இருந்திருக்கின்றன. ஒரு மறை நூல் உலகம் முழுவதும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புள்ள நூலாக நாம் பார்க்க முடிகிறது. தத்துவ நூல்கள் உலகம் முழுவதும் அறிவதற்கு வாய்ப்பிருக்கிறது. அறியப்பட்டிருக்கின்றன.
சாக்கரட்டீஸினுடைய தத்துவ நூல்கள், கிரேக்கத்தில் உருவாகி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தத்துவ நூல்கள் உலகம் முழுவதும்அறிந்தவைகளாக மாறி இருக்கின்றன. அறிவியல் நூல்கள் பித்தாகரசின் உடைய தேற்றங்களும் ஆர்க்கமிட்டீஸினுடைய தேற்றங்களும் உலகம் முழுவதும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புள்ள விஞ்ஞான, கணிதவியல் நூல்களாக இன்றும் இருக்கின்றன.
சாமுவேல்
ஹானிமேனினுடைய மருத்துவ நூல் ஹோமியோபதி மருத்துவத்தின் உடைய பெரும் தாக்கத்தை உலகம் முழுவதும் விரியச் செய்த அவரது குறிப்புகள் உலகம் முழுவதும் தெரிந்து கொள்வதற்கான நூல் குறிப்பாக ஆவணக் குறிப்பாக இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. அது ஒரு மருத்துவ நூல். காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்கிற பெரும் நூல் பொருளாதாரத்தில் உலகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல். இப்படி உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் எல்லா அறிவாளிகளுக்கும் எல்லா அறம் பேசுபவர்களுக்கும் எல்லா பொருளாதார மாற்றத்தை, சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கும் ஒரு நூல் அறிந்து கொள்வதற்கு தேவை உள்ளதாக, வாய்ப்பு உள்ளதாக இருந்து கொண்டே இருக்கிறது அப்படித்தான் இதுவரை உலகம் முழுவதும் அறியப்பட்ட எல்லா நூல்களும் இருக்கின்றன.
ஆனால் இவற்றை கடந்து கோட்பாடாக இல்லாமல், அறிவியல் நூலாக இல்லாமல், இலக்கிய நூலாக இல்லாமல், இன்னும் பொருளாதார மேம்பாட்டிற்குரிய செய்திகளை உள்ளடக்கமாக கொள்ளாத, நடுநிலையோடு நடுநிலை என்று கூட ஏதும் இல்லாத தன்மையோடு ஒரு அக உரையாடலை மனிதனின் மையமான நீரோட்டத்தை அதிர்வுக்கு உள்ளாக்குகிற ஒரு குருவின், ஒரு தலைமை சீடரின் செய்திக் குறிப்பாக, உரையாடல் குறிப்பாக தொகுக்கப்பட்டிருக்கிற ஒரு நூல் உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிர்தாதின் புத்தகம்.
மிர்தாதின் புத்தகம் ஒரு இலக்கிய நூல் போல் நீங்கள் படிக்க விரும்பினால் இலக்கிய நூல் போல படிக்கலாம். ஆன்மீகத் தேடலோடு இந்த நூலை நீங்கள் படிக்க விரும்பினால் ஆன்மீகத் தேடலோடு நீங்கள் படிக்கலாம். பொழுதுபோக்கிற்காக படிக்க வேண்டும் என்றாலும் கூட உங்கள் பொழுதுபோக்கிற்காக இந்த நூலை படிக்கலாம். இந்த நூலினுடைய விரிவான கதைகளும் தத்துவ விசாரணைகளும் தத்துவ உரையாடல்களும் உள்ளடக்கமாக எப்போதும் இந்த நூலிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இது தவிர்க்க முடியாத நூலாக இருக்கிறது என்பது ஒரு புறம். இது பேசப்பட வேண்டிய நூலாக இருக்கிறது.
ஆன்மீகத்தில், மறை நூல்களில், தத்துவ தேடல்களில் சில நூட்களை தவிர்க்க முடியாமல் இந்த நூல் குறித்து பேசியே ஆக வேண்டும் எங்கிற கருத்தியலில் பேசுவதற்கு தேவை இருக்கும். பல தத்துவ உரையாடல்களை, மறை சார்ந்த உரையாடல்களை நீங்கள் பார்க்கிற போது, மேன்மையான உவமைகளை குறிப்பிடும் போது, உற்சாகமான தியான முறைகளை குறிப்பிடும்போது இன்னொருவரை தவிர்க்க முடியாமல் பிற பறைசாற்றும் நபரை தவிர்க்க முடியாமல் இணைத்துக் கொள்வது ஒரு மரபு.
கிருஷ்ண பரமாத்மா பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் அன்பைப் பற்றி குறிப்பிடும்போது தவிர்க்க முடியாமல் இயேசு கிறிஸ்துவை இணைத்து கூறுவார்கள். புத்தரைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பவர்கள் புத்தரின் பணிவை பற்றி விவரித்து சொல்கிறபோது தவிர்க்க முடியாமல் முகமது நபியை இணைத்துக் கொள்வார்கள். காரல் மார்க்ஸை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது மதத்தினுடைய சுரண்டலை பேசுகிறபோது உலகில் இருக்கக்கூடிய எல்லா மதமும் மனிதனை எவ்வாறு சுரண்டுகிறது என்று தவிர்க்க முடியாமல் மதச் சுரண்டலை இணைத்துக் கொள்வார்கள்.
நெறிப்படுத்தலில் ஏற்படுகிற சிக்கலை தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு கொள்கை பேசுகிற போதும் இணைத்துக் கொள்கிற வாதம் இரண்டு அம்சங்களிலும் இருக்கிறது. தத்துவ உரையாடல் என்று பேசுகிறோம் என்றால் ஒருவரை உவமையாக பேசுகிற பொழுது ,ஒரு கோட்பாட்டை உவமையாக பேசுகிறபோது தவிர்க்க முடியாமல் எதிர் அணியில் இருக்கிற ஒருவரை கூட இணைத்துக் கொள்வதற்குரிய வாய்ப்போடு தவிர்க்க முடியாத தன்மை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் மிர்தாதின் புத்தகம் தவிர்க்க முடியாமல் பேசப்படுகிற புத்தகம் அல்ல.
இந்திய சமூகத்தில் இருக்கிற சமயம் பற்றில் பேசுகிறவர்கள் இந்திய சமய கோட்பாடுகளுக்குள் பேசப்படுகிற ஆன்ம நீரோட்டத்தை மிர்தாத் உள்ளே வைத்திருக்கிறது. மிர்தாதின் புத்தகத்திற்குள் இந்திய சமூகத்தில் இருக்கிற ஆன்ம நீரோட்டம் இருக்கிறது. சைவ, வைணவ, பௌத்த, ஜைன் முறைப்படி பறைசாற்றப்படுகிற வேத கோட்பாடுகளின் உள்ளார்ந்த பகுதிகள் இந்த புத்தகத்திற்குள் இருக்கிறது. கிறிஸ்துவத்தின் உள்ளார்ந்த பகுதிகள் மிர்தாதிற்குள் இருக்கிறது. இஸ்லாத்தின் உள்ளார்ந்த பகுதிகள் மிர்தாதிற்குள் இருக்கிறது. இப்படி மறை சார்ந்த, நெறிப்படுத்தப்பட்ட, நெறிப்படுத்துவதற்கு எதிரான என்று எல்லா பாகுபாடுகளையும் உள்ளடக்கி, எல்லா பாகுபாடுகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு ஒரு தனி மனிதனுக்குள் இருக்கிற சமய நிலையை, அக உரையாடலை, ஆத்மார்த்த கருக்கொள்ளலை, தேடலை தவிர்க்க முடியாத என்கிற தளத்திலிருந்து கட்டாயம் பேசி பார்க்க வேண்டும் என்கிற தன்மையோடு ஒரு உள்ளடக்கத்தை மிர்தாத் வைத்திருக்கிறது.
தொடர்த்து பேசுவோம்...
No comments:
Post a Comment