கடவுள் எது?
நிகழ்ச்சிக்கு
ஆவலோடு கலந்து கொண்டிருக்கிற அனைவரும் மதிப்பிற்குரியவர்கள். ஒரு தொடர் உரையாடல் நிகழ்வில்,
இலக்கிய நிகழ்வில் ஒரு புத்தகம் குறித்து, செய்யுள் வடிவம் குறித்து இலக்கிய கூட்டமாக
நடத்துவதற்கு முயற்சி முன் எடுக்கிற போது அந்த முன் முயற்சிக்கு இடையூறாக சமூக சூழல்,
ஊடக மனநிலை, சிதறி ஓடுகிற மன ஓட்டம் பல்வேறு கவனச்சிதறல்களுக்கு மத்தியில் ஒருவர் இலக்கியச்
சொற்பொழிவு, இலக்கிய உரையாடல் நிகழ்ச்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார் என்பது மிகுந்த
மதிப்பிற்குரியது என்கிற வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிற யாவரும் மதிப்பிற்குரியவர்களாக
நான் பார்க்கிறேன்.
திருக்குறள் என்கிற நூலினை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும் என்பது பொதுவான பள்ளிக்கூடங்களில் பரிந்துரைக்கிற பரிந்துரை. அது ஒரு கல்வியியல் சார்ந்த, கல்வி முறை சார்ந்த வழக்கமாக தமிழகம் முழுவதும் கடந்த காலங்களில் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு
வகுப்பிலும் 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி சூழலில், வகுப்பறைகளில் தமிழகத்தில்
ஒவ்வொரு வகுப்பிலும் திருக்குறள் என்கிற செய்யுள் பகுதிக்கு சில இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அதன் வழியாக இந்த தமிழ்ச் சமூகம் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை அறிமுகம்
செய்து கொண்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.
குழந்தைகள்,
பள்ளி மாணவர்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் கற்கிற கல்வியாளர்கள் யாவரும் திருக்குறளை
பாட புத்தகங்களின் வழியாக, பள்ளி சாலைகளின் வழியாக பல்கலைக்கழகங்களின் வழியாக கற்றுக்
கொள்வதற்கான வாய்ப்பிருந்த காலமாக ஒரு காலம் இருந்திருக்கிறது. இப்போதும் இருக்கிறது.
ஒரு மனிதன் ஒரு குழந்தை பள்ளிக்கல்வி வழியாக, பல்கலைக்கழகம் வழியாக திருக்குறளை கற்றுக்கொள்ள
முடியும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதினால் ஒன்றாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம்
வரை கல்விச்சாலைக்குள் சென்று வருகிற 15, 16 ஆண்டு காலம் ஆண்டிற்கு பத்து திருக்குறள்
என்கிற வகையில் 150, 160 திருக்குறளை அறிமுகம் செய்து கொள்ள முடியும். ஆனால் திருக்குறள்
என்பது 1330 செய்யுள்
பாக்களை உள்ளடக்கியது. 150 திருக்குறளை மட்டும் கற்றுக் கொள்வதற்கு இருக்கிற
வாய்ப்பில், 150 குறட்பாக்களில் தேர்விற்காக மனப்பாடப் பகுதியாக இருக்கிற திருக்குறளை
மட்டும் படித்துக் கொள்வது ஒரு வழக்கமாக தமிழ் கல்வி சூழலில் இப்போதும் இருக்கிறது.
இந்த 150 ற்குள் ஆண்டிற்கு மூன்றாக, நான்காக 15, 16 ஆண்டுகளில் மொத்தத்தில் 60, 70
திருக்குறளை ஒரு மாணவன் மனப்பாடச் செய்யுளாக படித்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மனப்பாட
செய்யுள் கடந்து, ஒரு செய்யுள் பகுதியாக இருக்கிற திருக்குறள் தமக்கு வாழ்வியல் நூலாக
பதிவாவதற்கு 60 திருக்குறள் போதுமான ஆய்வு குறிப்பு அல்ல. ஆனால் தமிழ் சமூகம் திருக்குறள்
உருவாகி இருக்கிற, திருக்குறள் படைக்கப்பட்ட, திருக்குறளுக்கு மூல ஆதாரமாக இருக்கிற
சமூக வாழ்க்கை முறையில் 60 திருக்குறள் என்பதுதான் இந்த தமிழ் சமூகத்திற்கு, இளைய தலைமுறைக்கு
வாய்ப்பாக இருக்கிறது. இந்த திருக்குறள் 60 70 திருக்குறளோடு சமூகத்தின் ஊடாக தன் பயணத்தை
நிறுத்தி விடுகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
தொடர்ந்து பார்க்கிறோம். ஆர்வமாக கற்றுக் கொள்கிற, விதிவிலக்கான சிலரை தவிர
தமிழ் சமூகத்தில் மறைநூல் போன்று போற்றப்படுகிற மிக முக்கியமான நூலாக இருக்கிற திருக்குறளை
இந்த சமூகம் இளைய தலைமுறை எவ்வளவு கையில் எடுத்து
வைத்திருக்கிறார்கள். எவ்வளவு வாசித்து வைத்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தோம் என்றால்
இந்த ஆய்வு முடிவு நிச்சயமாக அதிர்ச்சிகரமானதாகவே இருக்கும். அவ்வளவு சுருக்கமான பகுதிகளில் உரையாடப்படுகிற செய்யுள் பகுதியாக திருக்குறள் மாறி
இருக்கிறது. ஆனால் இந்த திருக்குறள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சில 50 ஆண்டுகளுக்கு
முன்பு ஓலைகளில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட வரலாறு என்பது தனியாக ஒரு புறம்
இருக்கிறது. ஓலைகளில் எழுதப்பட்டு எழுதப்பட்ட எழுத்துக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள
வேண்டும் என்கிற அறிவும் தேடலும் இல்லாத ஒரு சமூகத்தின் கையில் நீண்ட காலமாக திருக்குறள்
பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.
நிறைய
அறிஞர்கள் திருக்குறளை படித்திருக்கிறார்கள். அயல் நாட்டு அறிஞர்கள் தம் நாட்டு மொழியில்
மொழிபெயர்த்து இருக்கிறார்கள் என்பது தனி வரலாறு. உலகம் முழுவதும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட
வேண்டும் என்பது தமிழகத்தைச் சார்ந்தவர்களின் முடிவு அல்ல. அயல் நாட்டு அறிஞர்களின்
முயற்சி. இன்று நாம் பெருமையாக பேசுகிற உலகப் பொதுமறை உலகில் இருக்கிற பல்வேறு நாடுகளின்
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று நாம் மார்தட்டிக் கொள்வதற்கு வித்திட்டவர்கள்
தமிழ் அறிஞர்களை விடவும் இன்னும் பிற தமிழ் அறியாத இந்நாட்டிற்குள் வந்து தமிழை கற்றுக்
கொண்டு தமிழில் இலக்கண, இலக்கியங்களை பேணி புதிதாக படைக்க முயன்று, வெற்றி பெற்ற அயல்நாட்டு
அறிஞர்களின் பெரும் முயற்சியாலேயே திருக்குறள் அந்நிய நாடுகளுக்கு மொழிபெயர்ப்பு நூலாக,
மறை நூலாக சென்றது என்பது வரலாற்று பூர்வமாக நாம் பார்க்கிற பேருண்மை.
ஒரே
ஒரு செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். திருக்குறளை
மொழி பெயர்த்ததில் ஓலைச்சுவடியாக இருந்து புத்தகமாக மாற்ற வேண்டும் என்று மொழிபெயர்த்ததில் பெரும் ஆர்வமும் முயற்சியும் மிக்க
ஒரு ஆங்கில அதிகாரி பெரும் பங்கு வைத்தவர். அந்த ஆங்கில அதிகாரி அப்போதிருந்த அயல்நாட்டு
அரசாங்கத்தினுடைய அதிகார வரம்பில் செயலாற்றுகிற அதிகாரியாக இருந்தவர். அவர் இந்தியா
முழுவதும் குறிப்பாக தமிழகம் முழுவதும் இருக்கிற ஓலைச்சுவடிகளில் பொதிந்திருக்கிற இலக்கியங்களை
தேடித் தேடி கற்கிற ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்று அவரைப் பற்றி குறிப்பு இருக்கிறது.
தன் பெயரை தமிழில் கையெழுத்து இடுகிற வழக்கம் இருந்ததாகவும் குறிப்பிருக்கிறது. அந்த
அதிகாரியினுடைய தேடல் எல்லா ஊர்களிலும் இருக்கிற இலக்கிய ஆவணங்களை, ஓலைச்சுவடிகளை தேடுவதும்
சேகரிப்பதும் அவற்றை மொழிபெயர்ப்பதும் புத்தகமாக்குவதும் அச்சு வடிவத்திற்கு கொண்டு
வருவதுமாக இருந்தது என்பதற்கான வரலாற்று ஆவணங்களும் இருக்கின்றன.
ஒரு
சமையல்காரரின் சமையலறைக்கு சமைப்பதற்காக தருவிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளின் ஊடாக இருந்த
கட்டினை சமையலுக்காக அந்த சமையல் கலைஞர் அடுப்பிற்கு கொண்டு செல்கிறார். அப்படி கொண்டு
செல்கிற போது அந்த கட்டில் கட்டப்பட்டிருந்த நேர்த்தியின் காரணமாக அந்தக் கட்டு, அந்த
ஓலைச்சுவடி, அந்த இலக்கண நூல் ஒருவிதமான அழகோடும் மெருகோடும் இருக்கிறது என்று கருதினாரோ
என்னவோ தெரியவில்லை. அந்த ஓலைச்சுவடியை பத்திரமாக வைத்துக்கொண்டு அப்போது அவருக்கு
மேல் அதிகாரியாக இருந்த ஒருவரிடம் ஒப்படைக்கிறார். அந்த மேலதிகாரி இது குறித்து மாநிலம்
முழுவதும் ஆய்வு செய்கிற தமக்கு மேலே இருக்கிற இன்னொரு சக அதிகாரிக்கு அந்த ஓலைச்சுவடியை
அனுப்புகிறார். அந்த மேலதிகாரி ஓலைச்சுவடி கிடைக்கப் பெற்றவுடன் அந்த ஓலைச்சுவடியை
முழுவதுமாக படித்துப் பார்க்கிறார். அந்த ஓலைச்சுவடியில் இருக்கிற சங்கதிகளை, நூல்
குறிப்புகளை, இலக்கண இலக்கிய பெருமை மிகுந்த பகுதிகளை முழுவதுமாக வாசிக்கிறார், பிரமிக்கிறார்,
ஆச்சரியம் கொள்கிறார். எல்லாவற்றையும் அச்சாக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
முயற்சி செய்கிறார். அப்படி கிடைக்கப்பெற்ற நூல் திருக்குறள்.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment