அக்குபங்சர் - காத்திருப்பு
இன்றைய வகுப்பில் நாம் பார்க்கவிருப்பது அக்குபங்சர்
மருத்துவம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.
அக்குபங்சர்
மருத்துவம் ஒரு கலை. அக்குபங்சர் மருத்துவம் ஒரு மருத்துவம் என்கிற நிலைக்கு தன்னை
வெளிப்படுத்திக் கொள்கிற ஒரு கலை.
இது முழுக்க ஆற்றல் சார்ந்தது. ஆற்றலை புரிந்து கொள்வதற்கும் ஆற்றலை கற்றுக் கொள்வதற்கும் ஒரு புதிய மாணவனின் அக்கறையும் துடிப்பும் இந்த அக்குபங்சரை பார்ப்பதற்குரிய மருத்துவமாக மாற்றுவதற்கு வழிசெய்கிறது. நீங்கள் ஆற்றல் குறித்து ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் உங்களால் எளிமையாக அக்குபங்சரை. கற்றுக்கொள்ள முடியும்.
இந்திய
சமூகத்தில் ஆற்றல் குறித்து நிறைய விவரங்களை நாம் பார்க்க முடியும். நான் ஏன் இந்திய
சமூகம் என்று குறிப்பாக விளக்கிக் கூறுகிறேன் என்றால் ஆற்றல் குறித்து பேசுவதற்கு சீனாவிலிருந்து
வந்த அக்குபங்சர் ஒரு வகையாகவும் இந்திய சமூகத்தில் வேறு ஒரு வகையாகவும் நடைமுறையில்
இருக்கிறது.
அந்த
வகையில் இந்திய சமூகத்தில் இருக்கிற ஆற்றல் குறித்தான விவரங்களை புரிந்து கொண்ட ஒருவரால்
சீன மருத்துவத்தின் பின்னணியில், அடிப்படையில் இருக்கிற அக்குபங்சரினுடைய ஆற்றல் குறித்த
பரிமாணங்களையும் பரிணாமங்களையும் வேறுவேறாக பார்த்து புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு
இருக்கிறது. மொத்தத்தில் அக்குபங்சர் அடிப்படையில் ஆற்றலை மையமாக வைத்து இயங்குகிற
மருத்துவமுறை. இது புதிய செய்திகளை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிற தன்மையோடு இருக்காது.
அக்குபங்சர் பற்றி நாம் பேசுகிறோம். அக்குபங்சருக்குள் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு
ஏதாவது இருக்கிறதா என்று நாம் பேசுகிறோம்.
ஒரு
மருத்துவத்தை கற்றுக் கொள்ளத் துவங்குகிற போது நமக்குள் இருக்கிற எல்லாவிதமான ஐயப்பாடுகளையும்
ஒரு சுற்று பேசிக்கொண்டு நகர்வது நலமாக இருக்கும் என்கிற அடிப்படையில் அக்குபங்சரைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தில் ஒருசில
தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இது
முழுக்க தர்க்கம் இல்லாத காத்திருப்போடு இணைந்திருக்கிற ஒரு கலை. ஒரு தர்க்கவியல் ஆய்வாளரால்
அக்குபங்சரினுடைய இயக்கங்களை புரிந்து கொள்வது சற்று கடினமானது. ஒரு காத்திருப்பு அவசியமாகிறது.
காத்திருப்பு என்றால் எவ்வளவு காலம் காத்திருப்பது? என்று வரையறுக்க முடியாத அளவிற்கு
அந்த காத்திருப்பில் ஒரு நுட்பம் இருக்கிறது. ஒரு சமன்பாடு போல நாம் அணுக முடியாது
என்று மீண்டும் மீண்டும் அக்குபங்க்சரினுடைய பிதாமகன்கள் அக்குபங்சர் குறித்து விளக்குகிறார்கள்.
ஒரு
நோயாளிக்கு குணமாவதை, ஒரு நோய் விடுபடுவதை, ஒரு நோய்க்கும் அந்த நோயாளிக்கும் இடையே
இருக்கிற தொடர்பு அறுபடுவதை, ஒருவருக்கு நோய் ஏற்பட்டு அந்த நோயை கண்டு கொள்வதற்கு
இருக்கிற காலத்தை இப்படி ஒவ்வொன்றிற்குள்ளும் ஒரு காத்திருப்பு அவசியம் இருக்கிறது.
அக்குபங்சரை
அணுகுகிற, அக்குபங்சரை கற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் இந்த காத்திருப்பை புரிந்து கொள்பவராக
இருக்க வேண்டும் என்று நான் பார்க்கிறேன். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான்
உங்களுக்கு வலியுறுத்தவும் செய்கிறேன்.
நீங்கள்
காத்திருக்க அவசரப்படுகிற நபராக இருப்பீர்கள் என்று சொன்னால் அக்குபங்சரை நீங்கள் பிடித்துக்
கொள்வதற்கு கொஞ்சகாலம் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. காத்திருக்கிற பொறுமை உள்ள
நபராக இருப்பீர்கள் என்று சொன்னால் மிக வேகமாக அகுபங்சரை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
காத்திருப்பு,
பொறுமை இவற்றிற்கும் நோய் – நோயாளி - குணமாதல் இவற்றிற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது
என்று உங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தால் அக்குபங்சரின் மையப்புள்ளியை நீங்கள் ஏற்றுக்கொண்டவர்களாக
இருப்பீர்கள்.
ஏனென்றால்
ஒரு நோயாளியை, ஒரு நோயை, ஒரு நோயாளிக்கும் நோய்க்கும் இடையே இருக்கிற தொடர்பை அக்குபங்சர்
தொட்டுப் பார்ப்பதற்கு முன்பு எந்த முடிவும் இல்லாமல் காத்திருக்க வேண்டும் என்று அந்த
சிகிச்சையாளருக்குப் பரிந்துரைக்கிறது. கிழக்கு நாடுகளில் இருக்கிற தர்க்கம் இல்லாத,
கலை சார்ந்து இருக்கிற எல்லா மருத்துவ முறைகளும் காத்திருப்பை முதன்மையாக வைத்திருக்கின்றன.
அக்குபங்சரும் அப்படியே காத்திருப்பை முதன்மையாக வைத்திருக்கின்றது.
ஒரு
மனிதன் நோயுற்று இருக்கிறான். ஒரு மனிதன் கவலையோடு இருக்கிறான். ஒரு மனிதன் நலமில்லாமல்
இருக்கிறான். ஒரு மனிதனுக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் இல்லாமல் இருக்கிறது என்று
எந்த வகைப்பட்ட மனிதனாக இருந்தாலும் சரி முதலில் அந்த மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிற எந்த
வகையான சிக்கலும் அந்த மனிதனுக்குள் நடந்து கொண்டிருக்கிற எந்த வகையான மாற்றமும் மீண்டும்
மாறுவதற்கும் நலமாவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும் என்று
அக்குபங்க்சர் கூறுகிறது.
நிச்சயமாக நலம் அடைவதை நோக்கி அந்த உடலும் அந்த மனிதனும்
அந்த மனிதனின் மனமும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்களாக அக்குபங்சர்
சிகிச்சையாளர்கள் இருக்க வேண்டுமென்று அக்குபங்க்சர் மருத்துவம் வேண்டிக்கொள்கிறது.
எப்போது
அவருக்கு சரியாகும்? எப்போது அவருக்கு நலம் கிடைக்கும்? எப்போது அவர் மனநிலை நிதானத்திற்கு
வந்து சேரும்? என்று ஏராளமான கேள்விகளை வைத்துக்கொண்டு நாம் அக்குபங்சரை அணுகினாலும்கூட
எல்லா கேள்விகளுக்கும் அக்குபங்சர் வழங்குகிற ஒரே பதில் ஆற்றல் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றல் மாற்றம் நிலை கொள்ளும் போது, ஆற்றல் மாற்றம் நிதானத்திற்கு வரும்போது நோய்வாய்ப்பட்டிருக்கிற
துயரர் நோயில் இருந்து விடுபடுவார். நலம் இல்லாத ஒருவர் நலம் பெற வாய்ப்பிருக்கிறது.
அசௌகரியமாக இருக்கிற ஒருவர் சௌகரியமாக வாய்ப்பிருக்கிறது என்று அக்குபங்சர் வெளிப்படையாக
சொல்கிறது.
ஆக,
அக்குபங்சரை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிற நம்மில் யார் ஒருவரும் அக்குபங்சர்
பரிந்துரைக்கிற, அக்குபங்சர் தனக்குள் வைத்திருக்கிற ஆற்றல் சார்ந்த செயல்பாடை பொறுமையோடு,
நம்பிக்கையோடு தேடுகிற தேடலோடு காத்திருக்கிற நபராக இருப்போம் என்று சொன்னால் அக்குபங்சர்
நமக்கு மிக அழகாக வழி காட்டுகிறது என்று நான் அனுபவமாக பார்த்திருக்கிறேன்.
தொடர்ந்து
பேசுவோம்….
ALSO READ: MEDITATION(தியானம்)
No comments:
Post a Comment