முன்முடிவில்லாமல் கற்பது
முடிவுகள்
இல்லாமல் அக்குபங்சர் உள்ளிட்ட எல்லா மருத்துவங்களையும் நீங்கள் கற்க வேண்டுமென்று
நான் சென்ற வகுப்பில் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். நீங்கள் அத்தகைய மனநிலையோடு, தயாரிப்போடு
வந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒரு மருத்துவத்தை குறிப்பாக அக்குபங்சர் போன்ற ஒரு மரபான மருத்துவத்தை நீங்கள் கற்கிற போது இந்த மருத்துவங்கள் எவ்வாறு வேலை செய்யும்? என்று கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி கேள்விகள் எழுவது தான் சரியானதும் கூட என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு அப்படியான கேள்விகள் எழுவதற்கு காரணமாக இருக்கிற எல்லா வாய்ப்புகளையும் நீங்கள் எந்த யோசனையும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். கேள்விகளை உங்களுக்குள் நிறைய உருவாக்க வேண்டும், கேள்விகளை கேட்க வேண்டும் என்று நான் உங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறேன்.
பொதுவாக
ஒரு மருத்துவத்தை நாம் பார்க்கிற போது நாம் ஒப்பிட்டு பார்க்கிற நிலை என்பது சமகாலத்தில்
இருக்கிற வேறுவேறு மருத்துவங்கள் எவ்வகையான வேலையை செய்கின்றன? அவற்றிலிருந்து நாம்
பின்பற்றுகிற, படிக்கிற மருத்துவம் எத்தகைய முனைப்போடு வேலை செய்கிறது என்று ஒரு பார்வை
நமக்குள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் சமகாலத்தில் இருக்கிற
வேறுவேறு மாற்று மருத்துவங்களும் நவீன மருத்துவமும் ஒரு மனிதனுக்கு எந்தவகையில் எதிராக
வேலை செய்கிறது?
நாம் படிக்கிற
அக்குபங்க்சர் மருத்துவம் எந்த வகையில் மனிதனுக்கு சாதகமாக வேலை செய்கிறது
என்கிற பார்வையோடு நாம் மருத்துவத்தை அணுகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில்
நீங்கள் அணுகுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
வகுப்புகள்
துவங்குகிற போது நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது, ஏற்கனவே சொல்லியபடி அத்தகைய முடிவுகளும்
கூட நமக்கு வேண்டியதில்லை. ஒரு நவீன மருத்துவம் உங்கள் சமகாலத்தில் உங்களுக்கு பல்வேறு
நன்மைகளையோ தீமைகளையோ செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. வெற்றி பெற்ற மருத்துவமாகவும்
தோல்விக்குரிய விமர்சனத்திற்குரிய மருத்துவமாகவும் கூட சமகாலத்தில் இருக்கிற மருத்துவங்கள்
இருக்க வாய்ப்பிருக்கிறது.
நாம் மருத்துவங்களை
விமர்சிப்பதற்காக, மருத்துவங்களை கோடிட்டு காட்டுவதற்காக, மருத்துவங்கள் குறித்து விவாதிப்பதற்காக
ஒரு புதிய மருத்துவத்தை கற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் மருத்துவத்தை ஆதரவாகவோ மருத்துவத்தை
எதிராகவோ பார்க்கவேண்டிய நபராக உங்களை மாற்றிக் கொள்ளவும் வேண்டியதில்லை.
உங்களை
அலங்கரிப்பதற்கு ஒரு பூ பூத்திருக்கிறது. அந்த பூவை நீங்கள் சூடிக் கொள்கிறீர்கள் அவ்வளவுதான்.
மற்ற பூக்களை நீங்கள் ஏன் சூடவில்லை? மற்ற பூக்களுக்கும் இந்த பூவை சூடிக்கொள்வதற்கும்
என்ன வேறுபாடு? என்றெல்லாம் கூட நீங்கள் யோசிப்பதற்கு இந்த வகுப்பில் அவசியம் இல்லை
என்று நான் கருதுகிறேன். ஒரு புதிய பூவை சூடுவதற்காக காத்திருக்கிற உங்களுக்கு அது
வாசனையையும் அதுகுறித்து இருக்கிற அலங்கார ஜோரணைகளையும் அது உங்களோடு இணைகிற போது அது
உங்களை எவ்வளவு மனம் மிக்கவராக மாற்றும் என்கிற பக்குவத்தையும் உங்களோடு பகிர்ந்து
கொள்ள வேண்டும் என்கிற முகமாக அக்குபங்சர் மருத்துவம் நீங்கள் கற்றுக்கொள்கிற போது
இந்த அக்குபங்சர் பூவிற்கு இருக்கிற எல்லா சிறப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்று நினைக்கிறேன்.
இந்த அக்குபங்சர்
மருத்துவத்தை புனிதமாக பார்ப்பதற்கு, மேன்மையாக பார்ப்பதற்கு வேறு எந்த மருத்துவத்தையும்
வேறு எந்த வாழ்க்கை முறையையும் நீங்கள் விமர்சித்து ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம்
அக்குபங்சருக்கு இல்லை. அந்த அவசியத்தின் பாற்பட்டு நீங்கள் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்
என்று சொன்னால் அதற்கும் அக்குபங்சருக்கும் சம்பந்தம் இல்லை.
ஆகவே நண்பர்களே
நான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது, நீங்கள் அக்குபங்க்சரை கற்கிற போது
சமகாலத்தில் உங்களுக்கு உதவிய, உங்களுக்கு உதவி மறுத்த, உங்களை வளப்படுத்திய, உங்கள்
வளமையை குறித்த ஏராளமான மருத்துவங்களை நீங்கள் கடந்து வந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அது உங்கள் அனுபவம். உங்களுக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்பு.
இந்த அனுபவங்களும்
வாய்ப்புகளும் வைத்துக்கொண்டு நீங்கள் கற்க போகிற புதிய அக்குபங்சர் மருத்துவம் குறித்தான
எந்த முடிவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் அனுபவத்தில் இருந்து இந்த மருத்துவத்தை
பார்க்கவும் வேண்டாம்.
அக்குபங்க்சர்
மருத்துவம் அதற்கே உரிய அழகோடு உங்கள் முன் நிற்கிறது. நீங்கள் தொடர்ந்து கற்றுக் கொள்வதன்
வழியாக உங்கள் அனுபவத்தினுடைய மையத்தை, உங்கள் அனுபவம் ஏற்படுத்தி இருக்கிற வாய்ப்பை,
இந்த பிரபஞ்சத்தினுடைய ஆசீர்வாதத்தை புதிய கோணத்தில், புதிய அடர்த்தியில், புதிய தன்மையில்
பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்…
ALSO READ:MONEY(பணம்)
ALSO READ:SUICIDE(தற்கொலை)
No comments:
Post a Comment