Wednesday, October 20, 2021

ACUPUNCTURE CLASSES / அக்குபங்சரினுடைய தனித்தன்மை

 

அக்குபங்சரினுடைய தனித்தன்மை

www.swasthammadurai.com


அக்குபங்சர் மருத்துவம் பற்றிய ஒரு விரிவான பார்வையை, அக்குபங்சர் மருத்துவம் குறித்த ஒரு தொடர் உரையாடலை நடத்தும் முகமாக இந்த வகுப்பு துவங்குகிறது.

இதுவரை நீங்கள் வெவ்வேறு வகைப்பட்ட, அக்குபஞ்சரை விரிவாகப் பேசுகிற, அக்குபங்சர் பள்ளிகளை பார்த்திருக்கக்கூடும். ஒரு முறையான கல்வியும் முறையான அணுகுமுறையும் கொண்ட ஏராளமான அக்குபங்சர் பள்ளிகள் சமகாலத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

எல்லா அக்குபங்சர் பள்ளிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான வேறுபாடு என்பது இருக்கவும் செய்கிறது. ஒரு தூரத்திலுள்ள ஒரு மலரை வேறு வேறு இடங்களில் இருந்து பார்க்கிற பார்வையாளர்களினுடைய பார்வை கோண வேறுபாட்டைப் போல, பெரு மதிப்புமிக்க ஒரு மருத்துவமுறையை ஒரு தூரத்திலிருந்து பார்க்கிற பார்வையாளன் போல, வேறொரு கோணத்தில் பேசிப் பார்க்கிற முயற்சியாக இந்தத் தொடர் உரையாடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 பெருமரியாதைக்குரிய முன்னோடிகள், அக்குபங்சரில் ஆண்டாண்டு காலமாக மருத்துவ பயிற்சியாளர்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் பெரும் முயற்சியில் நாமும் பங்கேற்பதாக கை கோர்ப்பதாக இந்த முயற்சி அமையக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்த வகுப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். தொடங்குகிறோம்.

அடிப்படையில் நாம் கற்கவிருக்கிற பாடம் அக்குபங்சரினுடைய தனித்தன்மை என்கிற இன்றைய பாடத்தை நாம் துவங்கலாம். பொதுவாக சமகாலத்தில் இருக்கிற மருத்துவங்களை ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு அணுகுமுறை காலங்காலமாக இருக்கிறது.

 மருத்துவம் என்பது ஒரு மனிதனுக்கு, ஒரு சமூக கூட்டத்திற்கு கிடைத்திருக்கிற போது அந்த மருத்துவத்தினுடைய நன்மைகளையும் பலன்களையும் அந்த மருத்துவம் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டிய செய்திகளையும் எதிர்பார்ப்புகளையும் கூட வைத்துக்கொண்டு அந்த மருத்துவத்தை மதிப்பீடு செய்கிற பார்வை மனித சமூகத்திற்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அந்தத் தளத்தில் இருந்து பார்க்கிறபோது அக்குபங்சர் மீதும் நமக்கு அத்தகைய பார்வையை இந்த சமூகம் வழங்கி இருக்கிறது. நாமும் கூட அத்தகைய பார்வையோடு அக்குபங்சரை பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

நான் இந்த வகுப்பிற்குள் உங்களை வரவேற்கிற அதே நேரத்தில் ஒரு மிக முக்கியமான பரிந்துரையை உங்களுக்கு விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். இந்த வகுப்பிற்குள் நீங்கள் வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நீங்கள் வருகிறபோது இதுவரை உங்களுக்கு இருக்கிற எல்லா விதமான மருத்துவம் சார்ந்த விளக்கங்களையும் அறிவுகளையும் அனுபவங்களையும் ஒருமுறை தள்ளிவைத்துவிட்டு ஒரு புதிய மனிதனாக மருத்துவம் குறித்தான முடிவுகள் இல்லாத ஒரு மனிதனாக இந்த வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். மிக முக்கியமான வேண்டுதல் இது. அந்தப் பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் பார்க்கிறேன்.

ஏனென்றால் மருத்துவத்தை ஒரு கடை சரக்கு போல எடை போட்டு பார்க்கிற அறிவு இந்த மனித சமூகத்திற்கு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. மருத்துவம் என்பது இறைவனிடத்திலிருந்து பெறப்பட்டதாக சித்த மருத்துவத்தில் நம்பிக்கைகள் உண்டு.

மருத்துவம் என்பது ஒரு பெரிய தாவோ தத்துவத்தினுடைய பெரிய மதிப்புமிக்க தத்துவ பின்னணியோடு ஒரு மனிதனை பார்ப்பதற்கு, மனிதனை அணுகுவதற்கு, மனிதனின் நோயை தீர்ப்பதற்கு உதவி செய்யக்கூடிய ஒரு பெரும் கலை என்று சீன மருத்துவங்கள் மருத்துவத்தை போற்றுகின்றன. திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவம் இறைவனுக்கு ஒப்பாக பார்க்கப்படுகின்றது.

கடவுளின் மீது இருக்கிற நம்பிக்கைக்கு ஒப்பாக மருத்துவர்கள் மீது நம்பிக்கைகள் வைக்கப்பட்டு வரலாறு முழுவதும் இருக்கிற காரணத்தினால் நீங்கள் மருத்துவத்தைக் கற்கிறபோது, மருத்துவத்தை பார்க்கிறபோது, மருத்துவம் பற்றி பேசுகிறபோது ஒரு திறந்த மனதோடு மிக எளிய முடிவுகளற்ற எளிய மனதோடு இருக்கவேண்டும் என்று உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் உங்கள் அமர்வு இருக்கும் என்றால் இந்த மருத்துவ வகுப்பில் உங்களுக்கு கிடைக்கிற, பங்கேற்கிறபோது நீங்கள் பெற்றுக் கொள்கிற ஒரு செய்தியும் உங்களுக்கு மிக நெருக்கடியான காலத்திலும் கூட பலமிக்க ஒன்றாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே நண்பர்களே நான் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் மருத்துவம் குறித்து நீங்கள் படிக்க இருக்கிறீர்கள். உங்கள் படிப்பு முழுமையாக நிறைவு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள் என்று சொன்னால் எந்த ஒரு புதிய மருத்துவத்தை நீங்கள் படிப்பதற்கு முன்னும் எந்த ஒரு புதிய மருத்துவத்தையும் நீங்கள் செய்து பார்ப்பதற்கு முன்பும் நீங்கள் இதுவரை வைத்திருந்த எல்லா விதமான மருத்துவ கருத்துக்களையும் விருப்பங்களையும் கற்பனைகளையும் முன் முடிவுகளையும் தள்ளிவைத்துவிட்டு புதிய மருத்துவத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எல்லா மருத்துவத்தை கற்பதற்கு முன்பும் நான் உங்களுக்கு பரிந்துரைக்கிற முக்கியமான கருத்தாக இருக்கும்.

அந்த வகையில் அக்குபங்சருக்குள் நீங்கள் வரவேற்கப்படுகிற அதேவேளையில் உங்களிடம் இருக்கிற மருத்துவம் குறித்தான பழைய கருத்துகளை அக்குபங்சர் குறித்த கருத்துகளாக இருந்தாலும்கூட அக்குபங்சர் குறித்த வெவ்வேறு மருத்துவங்கள் குறித்த மாற்று மருத்துவங்கள் குறித்த பிரம்மாண்டங்களும் புனிதங்களும் கூட உங்களுக்குள் இருக்கக் கூடும். ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு முழுமையான, விசாலமான தயாரிப்போடு நீங்கள் இந்த மருத்துவத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தொடர்ந்து மருத்துவ வகுப்பில் சந்திப்போம்…

ALSO READ:FOR WHOM I AM HAPPY? (யாருக்காக மகிழ்ச்சியாக இருக்கிறேன்?)

ALSO READ:Will practice give happiness?( பயிற்சியால் மகிழ்ச்சி வருமா? )



No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...