Wednesday, October 20, 2021

VARMA / வர்ம மருத்துவம் - பகுதி -2

                                          வர்ம மருத்துவம் - பகுதி -2 

www.swasthammadurai.com


வர்ம மருத்துவ வரலாற்றைப் பொறுத்த அளவில் தென்தமிழகத்தில் அது துவங்கியதாக பார்க்க முடிகிறது. அது குமரிக்கண்டத்தில் துவங்கி குமரி கண்டம் துவங்கிய காலத்திலிருந்து வர்ம மருத்துவம் துவங்கியது என்று சில வரலாற்று ஆய்வுக் குறிப்புகள் இருக்கின்றன.

 இன்றைய மனித சமூகம் பெரும் அவசரத்தில் இருப்பதாக நாம் பார்க்கிறோம். உடனடியாக எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற பொருளாதார வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மன விருப்பத்தையும் சுமந்து கொண்டிருக்கிற ஒரு மனித சமூகத்தில் நிதானமாக, காத்திருப்பாக, பொறுமையோடு கையாளுகிற, பெற்றுக் கொள்கிற ஒரு மனிதக் குழுவை நாம் காண்பது என்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. பொது மனநிலையில் எல்லாமும் கிடைக்கிற பொருளாதார வசதியும் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அவசர மனோநிலையும் விரவி இருக்கிற கவனத்தோடு, அந்த எதார்த்தத்தை கணக்கில் வைத்துக் கொள்கிற பார்வையோடு நாம் மருத்துவத்தை பார்க்க வேண்டும்.

அப்படி என்றால் மருத்துவம் உடனடியாக தீர்ப்பதற்குரிய தன்மையோடு, சாத்தியங்களை உள்ளடக்கி வைத்து இருக்கிறதா? அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று பொருள் அல்ல. இந்த மனித சமூகம் எந்த இயல்பிலிருந்து எந்த இயல்பிற்கு நகர்ந்து இருக்கிறது என்கிற யதார்த்தத்தை தத்துவ பின்னணியில் நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மனித சமூகம் அறிவின் பாற்பட்டு மிக நிதானமாக எந்த வேகமும் இல்லாத ஒரு இயந்திர தன்மையிலிருந்து, அறிவு வளர்ச்சியின் பாற்பட்டு எல்லாவற்றையும் உடனடியாக பெற்றுக்கொள்ளமுடியும், பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தளத்திற்கு நகர்ந்திருக்கிற எதார்த்தத்தை நாம் பார்க்கிறோம்.

இந்த மனித சமூகத்தினுடைய ஆரம்பத்தில் மிதமான, நிதானமான, பொறுமையான மருத்துவம் நுட்பங்களும் வாழ்வியல் நுட்பங்களும் அதே வேகத்திற்கு இன்று வளர்ச்சி அடையவில்லை என்கிற எதார்த்தத்தோடு நாம் பொருத்தி இந்த உரையாடலை, இந்த ஆய்வு அரங்கை நாம் பேசவேண்டும் என்று நான் உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.

இன்றும் கூட இயற்கை மருத்துவத்தில் அல்லது இயற்கை வழியாக இருக்கிற எல்லா நுட்பங்களிலும் ஒரு உரையாடலுக்காக நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஒரு ஆய்வு அறிக்கையை என் கல்லூரி காலத்தில் சமர்ப்பித்த போது எனக்கு ஆய்வு அறிக்கையை மேற்பார்வை செய்த அந்த பேராசிரியருக்கும் எனக்கும் நடந்த உரையாடலில் நடந்த செய்தி இது.

இன்று நீங்கள் எல்லாவிதமான மருத்துவங்களையும் வைத்து ஆய்வு செய்து ஆய்வு செய்திருக்கிறீர்கள். ஏனென்றால் ஆய்வினுடைய சாராம்சம் மருத்துவ ஒப்பீடு. அது என்னுடைய முதுகலை பட்டப் படிப்பிற்கான ஆய்வு. மருத்துவ ஒப்பீடு என்கிற தலைப்பில் தான் அந்த ஆய்வை சமர்ப்பித்தேன். அந்த ஆய்வின் மேற்பார்வைக்கு வந்த பேராசிரியருடைய கேள்வி இப்படியானதாக இருந்தது. இன்று நவீன மருத்துவம் கோலோச்சிக் கொண்டிருக்கிற வேளையில் இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவம் எந்த வேலையும் மெதுவாகவே செய்கிறது. விரைவாக செய்யவில்லை. இயற்கை மருத்துவத்தில் அப்படியான விரைவான சாத்தியங்கள் இல்லை என்று ஒரு கருத்து இருக்கிறதே அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று அவர் என்னோடு கேட்டார். எனக்கு இந்த கேள்வி புதிதல்ல.

இயற்கை மருத்துவமும் மாற்று மருத்துவமும் மரபுசார்ந்த மருத்துவங்களும் மெதுவாக வேலை செய்கிறது என்கிற ஒரு விமர்சனம் சமூகத்தில் இருக்கிறது என்கிற அனுபவம் ஏற்கனவே எனக்கு இருந்ததால் எனக்கு அவர் கேட்ட கேள்வி புதிதாக தோன்றவில்லை. நான் கூறிய பதில், இந்த ஆய்வு அரங்கத்திற்கு உதவும் என்பதால் இந்த பதிலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு எலுமிச்சம் பழத்தை நாக்கில் வைத்தால் எவ்வளவு நேரத்தில் கண் கூசும் என்று நான் அவரோடு கேட்டேன். உடனடியாக கூசும் என்றார். இந்த புளிப்பு சுவை ஒரு வினாடிக்கும் குறைந்த நேரத்தில் உங்கள் கண்ணினுடைய நரம்பு இயக்கத்தை தூண்டும் வல்லமை உடையது. எலுமிச்சம் பழத்தினுடைய புளிப்புச்சுவையின் தீவிரம் அப்படியானதாக தீவிரம் கொண்டது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று சொன்னால் இந்த வேகம் எந்த மருந்துக்கும் கிடையாது.

நவீன மருத்துவம் அல்லது வேறு மருத்துவம் மீது விமர்சனம் செய்கிற, மாற்று மருத்துவத்தை மெதுவாக வேலை செய்கிறது என்று கூறுகிற எந்த கருத்தும் முன் வைக்கிற மருத்துவத்திற்கு இந்த வேகம் கிடையாது என்று நான் அவருக்கு சொன்னேன். இத்தகைய சாத்தியங்கள் மாற்று மருத்துவத்தில் அல்லது விமர்சனத்திற்கு எதிரான நிலையிலிருந்து பார்க்கிறபோது இத்தகைய வாய்ப்புகள் உள்ளே இருக்கின்றன என்ற நிஜத்தோடு நாம் இந்த மருத்துவ விவாதத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.

தொடர்ந்து பேசுவோம்...

ALSO READ: VARMA / வர்ம மருத்துவம் / INTRODUCTION

ALSO READ: எவ்வாறு விரதம் இருப்பது? - FASTING


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...