வர்ம மருத்துவம் - பகுதி - 1
வர்ம மருத்துவம்
குறித்து ஒரு விரிவான உரையாடலை செய்து பார்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த ஆய்வு
கலந்துரையாடலில் ஒரு சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.
பொதுவாக
சமகாலத்தில் நாம் பார்க்கிற மருத்துவம் குறித்து, மரபு மருத்துவம் குறித்து, மாற்று
மருத்துவம் குறித்து ஒரு ஈர்ப்பும் மரியாதையும் மருத்துவ வழி கடந்து பொதுமக்கள் வழியில்
உருவாகியிருப்பதை உணர்கிறோம். ஒரு மருத்துவமாக வர்ம மருத்துவம் இருந்திருக்கிறது, இருக்கிறது
என்றெல்லாம் கூட இன்று நாம் காணமுடிகிறது.
நவீன மருத்துவத்தினுடைய ஆய்வுப் போக்கில் ஒப்பிடுகிறபோது ஒரு மருத்துவத்தினுடைய அடிப்படை எவ்வாறு இருக்கிறது? ஒரு மருத்துவத்தினுடைய ஆதாரங்களும் நிறுவனங்களும் எவ்வாறு இருக்கின்றன? என்கிற வாதத்தில் இருந்து இந்த வர்ம மருத்துவம் என்பதை ஒப்பாய்வு செய்வதென்பது பொருத்தமானதாக இருக்காது என்று நினைக்கிறேன். அதற்குக் காரணம் வர்ம மருத்துவத்தை சமகாலத்தில் இருக்கிற நவீன மருத்துவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிற நோக்கம் நமக்கு இல்லை.
ஒரு மாற்று
மருத்துவத்தை மருத்துவம் என்கிற தளத்திலிருந்து ஒப்பிட்டு பார்க்கிற நோக்கம் கூட இல்லை.
ஒரு மருத்தினுடைய அடிப்படை எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது? ஒரு மருத்துவம் ஒரு
காலத்தில் இருந்து வளர்ந்து நீண்ட காலத்திற்கு பல்வேறு மக்கள் மத்தியில் பயன்பாட்டிலிருந்து
அவர்களுக்கு பெரிய உதவிகளை செய்து வெவ்வேறு கலை வடிவத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிற
தளத்திலிருந்து ஒரு மருத்துவத்தை பார்க்க வேண்டுமென்று இந்த உரையாடல் வழியாக நான் உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு மருத்துவத்திற்கு
போட்டியாகவோ மருத்துவத்தை முறியடிக்கும்வண்ணம் ஆதாரங்களை சேகரித்து வைத்துக் கொள்கிற
மனப்பான்மையிலேயோ எந்த மருத்துவத்தையும் பார்க்கக் கூடாது என்கிற தன்மையில் நான் வர்ம
மருத்துவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த நோக்கத்திலேயே
இந்த ஒப்பாய்வு உரையாடல் என்பது ஒரு மருத்துவத்தின் குறிப்பாக வர்ம மருத்துவத்தின்
பாரம்பரியமாக பின்பற்றப்படுகிற வர்ம மருத்துவத்தினுடைய அடிப்படை கட்டமைப்புகள் எவ்வாறு
இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே இந்த உரையாடலை நாம்
செய்கிறோம். நான் பார்க்கிறேன்,
சமூகம்
முழுவதும் எந்த காலத்திலும் வர்ம மருத்துவம் போல ஒரு மாற்று மருத்துவத்தை அல்லது நவீன
மருத்துவத்திற்கு இணையான ஒரு மருத்துவத்தை இந்த சமூகம் கையில் எடுக்கிற போது அந்த மருத்துவத்திற்குள்
மருத்துவ பயிற்சியாளர்கள் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள துவங்குகிற போது அவர்கள் சந்திக்கிற
முதன்மையான சவாலாக இருக்கிறது.
ஒரு ஹோமியோபதி
மருத்துவர், ஒரு சித்த மருத்துவர், ஒரு இயற்கை வாழ்வியலை பறைசாற்றுகிற மருத்துவர்,
ஒரு ஆயுர்வேத மருத்துவர் எவ்வகைப்பட்ட மரபுவழி சார்ந்த மருத்துவரும் தன் முதல் பயிற்சியை
துவங்குகிற போது அவர் சந்திக்கிற முதல் சவால் நவீனத்தில் இருக்கிற நாகரிகமடைந்த மனிதர்கள்
பின்பற்றுகிற நிலையில் இருக்கிற ஒரு மருத்துவத்தில் மருத்துவத்தோடு அவர்கள் பயன்படுத்துகிற
புதிதாக மரபு சார்ந்து பயிற்சிக்கு வருகிற பயிற்சியாளர்கள் முன்வைக்கிற மருத்துவம்
எவ்வாறு போட்டி போடுகிறது என்கிற தளத்திலிருந்தே மருத்துவத்தை எடைபோட்டு பார்க்கிற
மனோபாவம் இருக்கிறது. அந்த எடை போட்டு பார்க்கிற நிகழ்ச்சிநிரலுக்குள் நாம் இந்த உரையாடலைக்
கொண்டு செல்ல கூடாது என்கிற கவனத்தில் நான் வர்ம மருத்துவம் குறித்து உங்களுடன் உரையாட
வேண்டும் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு நியாயமான பரிந்துரையாகவும் இருக்கக்கூடும்.
ஒரு மருத்துவத்தை
பயன்பாட்டு அளவில் அனுபவமாக பார்க்க வேண்டுமென்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தும் விருப்பமும்
கூட. எந்த மருத்துவத்திற்கும் போட்டியாகவோ, ஒரு மருத்துவத்தை வென்றெடுக்க வேண்டும்
என்கிற முனைப்பிலேயோ ஒரு மருத்துவத்தை வளர்ப்பது என்பது மருத்துவ தார்பரியத்திற்கு
விரோதமானது என்று நான் பார்க்கிறேன்.
நான் படித்திருக்கிற
என் சிற்றறிவுக்கு எட்டியிருக்கிற மருத்துவ அறிவிலிருந்து பார்க்கிறபோது எந்த மருத்துவமும்
இன்னொரு மருத்துவத்தை முறியடிக்கிற தன்மையோடு தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை, கட்டமைக்கவில்லை
என்பதை பார்க்க முடியும்.
எந்த அகத்தியரும்
தன்வந்திரியை பின்னுக்கு இழுப்பதில்லை; விமர்சிப்பதில்லை. எந்த பதஞ்சலி முனிவரும் ஹானிமேன்களை
எதிர்த்துப் பேசுவதில்லை. ஹானிமேன்கள் தனியாக ஹோமியோபதிகளை கண்டுபிடிக்கிறார்கள்; பதஞ்சலிகள்
தனியாக யோக மருத்துவத்தை கண்டுபிடிக்கிறார்கள்; அகத்தியர்கள் தனியாக சித்த மருத்துவத்தில்
வேலை செய்கிறார்கள் இவை எல்லாமும் வெவ்வேறு காலத்தில் தனித்தனியாக ஒரு மனித சமூகத்திற்கு
அல்லது இயற்கையை அவர்கள் விளங்கிக் கொண்ட அளவில் பதிவு செய்கிற தன்மையோடு இருந்திருக்கின்றன.
அந்த வகையில்
இன்று உரையாடுகிற உரையாடல் என்பது வர்ம மருத்துவம் எவ்வாறு இருக்கிறது? என்பதும் வர்ம
மருத்துவத்திற்குள் இருக்கிற நுட்பங்கள் என்ன? என்பதும் வர்ம மருத்துவத்தை கொண்டு எவ்வாறெல்லாம்
நோய்கள் சரியாகின்றன என்பதும் மட்டுமே நமது உரையாடல் கருப்பொருளாக இருக்க வேண்டும்
என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இந்த உரையாடலுக்குள்
இந்த ஆய்வரங்கத்திற்குள் பேசப்படுகிற ஒவ்வொன்றும் இத்தகைய தன்மையோடு இருக்கும் என்றால்
நாம் கையில் எடுக்கிற மருத்துவ பணி என்பது பலரை உடல் துயரத்திலிருந்து, மனத் துயரத்திலிருந்து
விடுதலை செய்யும் என்கிற நிலை கடந்து ஒரு மருத்துவத்தினுடைய தத்துவார்த்த சாராம்சத்தை
விட்டு விலகாமல் அந்த மருத்துவத்திற்கே உரிய மிடுக்கையும் அழகையும் சிதைக்காமல் ஆவணப்படுத்துகிற
முயற்சியாக இருக்கும் என்று நான் பார்க்கிறேன்.
வர்ம மருத்துவமும்
அத்தகைய எல்லா அழகையும் வைத்திருக்கிறது என்று என்னால் கூற முடியும். நிறைய குருமார்கள்
ஆசான்மார்கள் இன்றும் வர்ம மருத்துவத்தை தன் வாழ்நாள் முழுவதும் செய்து பார்த்து, பிறருக்கு
கற்றுக் கொடுத்து, பிறரோடு பகிர்ந்து கொண்டு, அனேக துயரர்களுக்கு விடுதலை அளித்து வருகிற
சாட்சியங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தொடர்ந்து பேசுவோம்...
ALSO READ: எது மருத்துவம்? - இயற்கைகு திரும்புவது,நோய்களிலிருந்து விடுபட
No comments:
Post a Comment