Wednesday, October 20, 2021

YOGA - SPINAL CORD / முதுகுத்தண்டுவடமும் ஆசனமும்

                                                         யோகா வாழ்வியல்

                            முதுகுத்தண்டுவடமும் ஆசனமும்

 அமர்வு நிலை என்பதை நாம் ஆசனம் என்று குறிப்பிடுகிறோம்.

அமர்தல் என்றால் என்ன?

ஆசனம் என்கிற சொல்லினுடைய நேரடியான பொருள் அமரும் நிலை என்றுதான் வழங்கப்படுகிறது.

யோகாவின் எட்டு படிநிலைகளில் ஆசனமும் பிராணாயாமமும் கூடுதலாக உரையாடப்படுகிற படிநிலையாக நாம் பார்க்கிறோம். ஒட்டுமொத்த யோகா பற்றிய வேறுவேறு வகையான பள்ளிகளும் சிந்தனா முறைகளும் கூட நிறைய நாம் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எல்லா வகைப்பட்ட சிந்தனா முறைகளும் குறிப்பாக மூன்று படிநிலைகளை (பதஞ்சலி பெருமகனார் வழிகாட்டிய மூன்று படிநிலைகளை) மட்டும் தமது சிந்தனா முறையோடு இணைத்துக் கொள்வதை நாம் பார்க்க முடிகிறது.

படிநிலைகள் எட்டாக இருக்கிறது என்பதை நாம் வேறுவேறு தருணங்களில் பார்த்திருக்கிறோம் என்றாலும் கூட படிநிலைகளில் இருக்கிற ஆசனம், பிராணயாமம் கூடுதலாக தியானம் இந்த மூன்று பகுதிகளை மட்டும் எல்லா பாடசாலைகளும் யோகா பற்றி பேசுகிற யார் ஒருவரும் இந்த மூன்றையும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். அல்லது கற்றுத்தருகிறவர்களாக இருக்கின்றன. இதுகுறித்து உரையாடலை துவங்குபவர்களாக இருக்கின்றனர்.

இந்த மூன்றும் அத்தனை முக்கியமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நாம் பார்க்கிற போது அமர்தல், சீராக மூச்சுவிடுதல், மூன்றாவது தியானம் என்பதில் சில பகுதிகளை நாம் தொடர்ந்து பேசுகிறபோது பேசலாம். அமர்தல், சீராக மூச்சு விடுதல் என்பது ஒன்றை ஒன்று மிக நெருக்கமான தொடர்புடையது. அமர்தல் என்பதற்கு ஏற்கனவே நாம் பேசிய உரையாடலில் அமர்தல் என்றால் என்ன? என்று நாம் பார்த்திருக்கிறோம். அமர்தலுக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையே இருக்கிற தொடர்பை நாம் பார்த்திருக்கிறோம்.

அனேகமாக அந்த வகுப்பிற்கு பிறகு அனைவரும் அமர்வது குறித்து ஒரு புரிதலை பெற்றிருப்பீர்கள். பெற்றிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

ஒரு மனிதனின் அமர்வு என்பது அவரது முதுகுத்தண்டு நேராக நிமிர்ந்த நிலையில் இருப்பது என்பதை குறிப்பதாகவே நான் பார்க்கிறேன். நேராக என்றால் நமது மனம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வைத்திருப்பதை நேராக என்று புரிந்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு நேரத்திற்கும் நேராக என்பதன் பொருள் மாறும் வாய்ப்புள்ளது. “நேராக” என்பது “அமர்வு நிலைக்கு பொருத்தமாக” என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் அமருகிற அமர்வு நிலைக்கு பொருள் கொள்வதற்காக நாம் பார்க்கிற போது நேராக என்பது அந்த அமர்வு நிலைக்கு இசைவாக அங்கு அமர்வு நிலையின் பலனை பெற்றுக்கொள்வதற்கு இசைவாக இருப்பதற்கு நேராக என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் நேராக என்பது என்ன? என்றால் முதுகை நேராக வைத்துக்கொண்டு, 90 பாகை கோணத்தில் நிமிர்த்தி வைத்துக் கொள்வது என்றெல்லாம் பொருள் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு ஆசனத்தில் அமருகிற போது அந்த ஆசனம் வலியுறுத்துகிற அமர்வு நிலையில் இருப்பதற்கு எல்லாமும் நேராக என்றே பொருள்.

இத்தகைய அமர்வு நிலைக்கு இசைவாக, அமர்வு நிலைக்கு ஏற்றாற்போல, உங்கள் முதுகுத் தண்டுவடம் இருக்கும் என்றால் நீங்கள் நேராக அமர்வதற்கு வல்லமை உள்ளவர் என்று பொருள். இரண்டு மூன்று ஆசனங்களை நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும். பத்மாசனம் என்பது பொதுவாக அனைவரும் எளிமையாக பார்த்திருக்கிற ஆசன முறை. அமர்வு முறை.

இரண்டு கால்களையும் தரையில் அமர்வது போல சம்மணமிட்டு அமர்வதற்கு எதிராக அமர்ந்து கொள்வது. இரண்டு கால்களையும் தரையில் அமர்ந்துகொண்டு சம்மணமிடுவதற்கு எதிராக அமர்ந்துகொண்டு முதுகு தண்டுவடம் நேராக இருப்பதுபோல் அமர்வதற்கு பத்மாசனம் ஒரு வடிவத்தை வைத்திருக்கிறது. அந்த வடிவத்தில் அமர்வது பத்மாசனத்தினுடைய அமர்வு முறையாக நமக்கு சொல்லித் தரப்படுகிறது, வழிகாட்டப்படுகிறது.

பாதஹஸ்தாசனம் என்றொரு ஆசனம் இருக்கிறது. பாதஹஸ்தாசனம் செய்முறையில் ஒருவர் நிற்பார். ஆசனத்தைப் பயிற்சி செய்கிற பயிற்சியாளர் நின்று கொண்டு இருப்பார். இரண்டு கைகளையும் காதை ஒட்டினாற்போல் மேலே உயர்த்தி கால்கள் தரையில் ஊன்றி இருக்க அவரது கைகள் முன்புறமாக வளைந்து அவரது நெற்றி முட்டியின் முன் பக்கத்தையும் அவரது கை விரல்கள் காலின் பெருவிரலையும் பிடிக்கும் வண்ணம் வளைத்துக்கொள்வது பாதஹஸ்தாசனத்தின் செய்முறை. இந்த பாதஹஸ்தாசனத்தினுடைய செய்முறையில் அநேகமாக முதுகுத்தண்டுவடம் முழுவதுமாக முன்னோக்கி வளைந்து இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

இது முதுகுத்தண்டுவடம் நேராக அமர்வதா? என்று நமக்கு ஒரு கேள்வி நம் மனம் எழுப்புவதை நான் பார்க்கிறேன்.  மனம் அப்படித்தான் கேள்வி எழுப்பும். நேராக என்பதை ஆசனத்திற்கு இசைவாக உங்களது முதுகுத்தண்டு இயங்க வேண்டும் இருக்க வேண்டும் என்கிற பொருளில் இந்த இரண்டு ஆசனங்களை உங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

இன்னும் வேறு சில ஆசனங்களில், குக்குட்டாசனம் என்னும் ஆசனத்தில் கைகளை ஊன்றி உடலை முழுவதுமாக தரையிலிருந்து உயர்த்திக் கொள்கிற பயிற்சி முறையோடு அந்த ஆசனம் தொடர்புடையது. உத்தித பத்மாசனம் அத்தகைய தன்மையுடையது. சிரசாசனம் தலையை ஊன்றிக்கொண்டு முதுகுத்தண்டு தண்டுவடத்தை நேரெதிராக புவியீர்ப்பு விசைக்கு எதிரான திசையில் நிறுத்தி வைத்திருக்கிற பயிற்சி முறையை கொண்டது.

இப்படி வேறுவேறு ஆசனங்கள், வேறுவேறு அமர்வு முறைகள் வேறுவேறான தன்மையோடு முதுகு தண்டுவடத்தை நேராக வைப்பதற்கு பொருளை வைத்திருக்கின்றன. அமர்வு முறையை வைத்திருக்கின்றன. இத்தகைய புரிதலோடு ஆசனம் என்பது முதுகு தண்டுவடத்தை அந்த அமர்வு நிலைக்கு இசைவாக அந்த அமர்வு நிலை வழிகாட்டுகிற வழிகாட்டுதலுக்கு இசைவாக பொருத்திக் கொள்வது அல்லது இணைந்து கொள்வது என்கிற பொருளிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் நேராக என்பதை நாம் தவறுதலாக புரிந்து வைத்திருக்கிறோம். நேராக என்றவுடன் இந்த சமூகம் ஒரு நேர்கோடை போட்டுக்கொண்டு அந்த கோட்டின் மீது நடப்பதே நேராக என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம்...

ALSO READ: VARMA / வர்ம மருத்துவம் / INTRODUCTION

ALSO READ: VARMA / வர்ம மருத்துவம் - பகுதி -2


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...