கொண்டாட்டம்
இந்த உலகத்தில் எல்லா ஜீவராசிகளை விடவும் வாழ்க்கையை கொண்டாட முடியும், வாழ்க்கையை குதூகலமாக்க முடியும் என்கிற அறிவு மனிதனுக்கு இருக்கிறது. வேறு எந்த ஜீவராசியும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது இல்லை; தீபாவளி சொல்வதில்லை. மனிதனைத் தவிர்த்து இருக்கிற மற்ற ஜீவராசிகளுக்கு எல்லா நாட்கள் போலவும் ஒவ்வொரு நாளும் புதிய ஒரு நாளாக இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு அப்படியாக இல்லை. மனிதன் கூடுதலாக கொண்டாட்டம்(celebration) பற்றி, வாழ்க்கையினுடைய ஒரு குறிப்பிட்ட பிரத்தியேகமான சிறப்பான தன்மை பற்றி, ஒரு நாளினுடைய சிறப்பான விசேஷமான தன்மைகளைப் பற்றி தெரிந்து கொண்டவராக தன்னை கருதிக் கொள்கிறார்கள். இப்படித்தான் மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படித்தான் கொண்டாட்டங்கள் இருக்கிறதா? என்பது பற்றி பேசுவதற்காக இந்த பதிவு. நிஜமான கொண்டாட்டம்(celebration)என்பது வெறுமனே ஒருவரையொருவர் வாழ்த்து சொல்வதும், ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும் பொழுது கட்டிப்பிடித்து அவர்களுடன் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வதும் வீட்டில் ஏதாவது இனிப்பு பலகாரம் செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதுமாக இருப்பது கொண்டாட்டமாக இருக்குமா?
ALSO READ:நலம்(health)
இலக்கியமாக அல்லது பழைய பாரம்பரிய மரபுப்படி ஒரு வாழ்க்கை முறையில் நன்றி சொல்வதற்காக கொண்டாட்டங்கள் இருப்பதாக இருந்ததாக நாம் படிக்கிறோம். விளைச்சலுக்கு நன்றி சொல்லி நிலத்திற்கு, விளைச்சலுக்கு நன்றி சொல்லி சூரியனுக்கு, தீமைகளை அழிப்பதற்காக நன்றி சொல்லி கடவுளுக்கு இப்படி நன்றி சொல்வதாக கொண்டாட்டங்கள் இருந்தது. அதை ஒட்டி ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் கொண்டாட்டங்கள் இருந்ததாக நாம் படிக்கிறோம். ஆனால் இயல்பாகவே நிஜமாகவே கொண்டாட்டம்(celebration) என்பது ஒரு மனிதனுக்குள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் தெரிவதில்லை.
மிக நிஜமாக, மிக வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பரபரப்பான வாழ்க்கையிலிருந்து, நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து சதா ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து இரண்டு நாட்கள்,மூன்று நாட்கள் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு விடுமுறை தினமாக கொண்டாட்டங்கள்(celebration) இன்று இருக்கிறது. மூன்று நாட்கள், நான்கு நாட்கள், ஐந்து நாட்கள், ஒரு வார காலம் விடுமுறை எடுத்துக்கொண்டு மறுபடியும் வேலைக்கு செல்வது, மறுபடியும் அந்த இயந்திரத் தன்மைக்குள் சிக்கிக் கொள்வது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரையில் கொண்டாட்டங்கள் என்பது நிஜமான கொண்டாட்டங்களாக இருக்காது, இருக்கவும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் குறிப்பாக கொண்டாடுவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் என்று தொலைக்காட்சி வழியாகவும்,மக்கள் சந்திப்பின் வழியாகவும் நாம் பழகிக் கொண்டோம். நுகர்வு மனோபாவத்தில் இருக்கும்பொழுது கொண்டாடுவதற்கு ஒரு காரணம் வேண்டும் என்பதற்காக தொடர்கதைகள், தொடர் உரையாடல்கள் நமக்குள் வந்திருக்கும் சூழலில் கொண்டாட்டங்களும் வாழ்த்துக்களும் என்னவாக இருக்க வேண்டி உள்ளது என்பது நமக்கு தெரியாமலேயே போய்விட்டது.
ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது
நிஜமாகவே கொண்டாட்டம்(celebration) என்றால் என்ன?, வாழ்த்து சொல்வது என்றால் என்ன? என்பது குறித்து நமக்குள் பேசியே ஆக வேண்டும் எனும் ஓர் இடத்தில் இருப்பதாக நான் பார்க்கிறேன். இந்த மனித சமூகத்திற்கு கொண்டாட்டம் என்பது என்ன? என்பது தெரியாமலேயே இருக்கிறது. கொண்டாட்டதிற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் சொல்கின்றனர். நீங்கள் எந்த விளக்கத்தை பின்பற்றி, என்ன வகையான சம்பிரதாயத்தை பின்பற்றி, என்ன மாதிரியான நடப்பு முறையை பின்பற்றி வந்தாலும் கூட நீங்கள் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கிறீர்களா அல்லது இருந்து இருக்கிறீர்களா என்று கேட்டு பார்த்தீர்களேயானால் அப்படியாக இல்லை. மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாழும் தத்துவத்தை ஒருவர் கற்றுக் கொடுக்கிறார் என்றால், அவருடைய கற்பித்தலின் அடிப்படையில் ஒரு குருவைத் தேடிப்போய் வாழும் மகிழ்ச்சியான கலையை கற்றுக்கொண்டு செய்து பார்த்து ஒரு ஆறு மாதத்தில் நாம் மகிழ்ச்சியான ஒரு ஆளாக மாறி இருக்கிறோமா? என்றால் அப்படி இல்லை. ஒரு பயிற்சியை செய்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது போன்ற உரையைக் கேட்டு ஒரு ஆறு மாதம் இந்த பயிற்சியை செய்து பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறோமா? என்றால் அப்படி இல்லை. ஒரு மந்திரத்தைச் சொல்லி தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொன்னால் அதேபோல் ஒரு ஆறு மாதத்திற்கு அந்த மந்திரத்தை சொல்லி பார்த்து,சொல்கிற செயல் முறையை செய்து பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்றால் அப்படியாக இல்லை. கொண்டாட்டமாகவும் இல்லை. உண்மையிலேயே மந்திரம் சொல்வதலேயோ அல்லது ஒரு பயிற்சியை செய்வதாலேயோ, ஒரு வகையான உணவு பழக்கத்தை வாழ்க்கையில் பின்பற்றுவதாலேயோ அல்லது கூட்டமாக கூடி களைவதாலேயோ மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் வந்துவிடுமா என்றால் அப்படியான நம்பிக்கை நமக்கு வேண்டியதில்லை என்பதை உடைத்து பேசுவதற்காக,தெரிந்து கொள்வதற்காக நாம் பேசுகிறோம்.
ALSO READ:MEDITATION(தியானம்)
எனவே மகிழ்ச்சி என்பதும் கொண்டாட்டம்(celebration) என்பதும் இந்த மாதிரியான புற செயல்பாட்டில் இருக்கிறதா என்பது கேள்விக்கு உள்ளாக வேண்டியுள்ளது. உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியை தேடுபவராக இருந்தால் நீங்கள் புறவயமாக செய்கிற செயல்பாடுகள் வழியாக, நீங்கள் செய்கிற பயிற்சியின் வழியாக ,நீங்கள் செய்கிற உணவு பழக்கம் வழியாக உங்களுக்கு மகிழ்ச்சி வந்து விடும் என்றால் நீங்கள் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அல்லது வேண்டிய காலம் எடுத்துக் கொண்டு அதன் வழியாக மகிழ்ச்சியை கண்டுபிடித்து உள்ளீர்களா? என்றால் நிச்சயமாக இல்லை. புத்தர் சொல்வது மாதிரியான செயல்பாட்டு வடிவத்தை செய்து பார்த்தேன், நான் புத்தர் ஆகிவிட்டேன் என்று யாரும் சொல்லவில்லை. யாரும் சொல்லவும் முடியாது. இயேசு கிறிஸ்து சொன்ன எல்லா செயல்பாட்டு முறைகளையும் நான் செய்து பார்த்துவிட்டேன், நான் இயேசு கிறிஸ்து ஆகிவிட்டேன் என்று யாரும் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. ஏனென்றால் செயல்பாட்டு வழியாக அல்லது படித்த படிப்பு வழியாக படிப்பு பரிந்துரைக்கிற ஏதோ ஒரு சம்பிரதாயம் வழியாக, சடங்கு வழியாக உங்களுடைய கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ALSO READ:MONEY(பணம்)
உண்மையிலேயே கொண்டாட்டம்(celebration) என்பதும் மகிழ்ச்சி என்பதும் புறவயமாக இருக்கிற செயல்பாட்டுடன் சம்மந்தப்பட்டது இல்லை என்பதை உறுதியாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உள்ளுக்குள் உங்களைப் பற்றி தெரிந்து இருக்கிற, உங்களுக்குள் இருக்கிற சிறப்புத் தன்மைகளை அறிந்து கொள்ளும் நபராக இருந்தீர்களேயானால் நீங்கள் கொண்டாட்டத்திற்குரிய தகுதியான ஆளாக இருப்பீர்கள். என்னை பற்றி என் உடலை பற்றி எனக்குத் தெரியும் என்று கூறினால் உங்களுக்கு கொண்டாட தகுதி உள்ளது. என் மன ஓட்டத்தை பற்றி எனக்குத் தெரியும் என்று கூறினீர்களேயானால் உங்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய தகுதி உள்ளது. என்னுடைய செயல்பாடுகளில் நான் என்ன முடிவு எடுப்பேன் என்பதுபற்றி எனக்கு தெரியும் என்று கூறினீர்களேயானால் உங்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய தகுதியும் வாய்ப்பும் உள்ளது. யார் ஒருவருக்கு தன்னைப்பற்றி தன்னுடைய செயல்பாடுகள் பற்றி தன்னுடைய மன ஓட்டம் பற்றி விழிப்புணர்வும் கவனமும் இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே கொண்டாட்டம்(celebration) என்பது கைகூடிவரும். இல்லையென்றால் விழிப்புணர்வும் உங்களைப் பற்றிய உங்களுடைய அறிவும் உங்களைப் பற்றிய உங்களுடைய கவனமும் இல்லை என்றால் உங்களால் கொண்டாட முடியாது.
எல்லா நாட்கள் போலவும்
எல்லா 8:00 மணி போலவும் எல்லாம்
இரவு 12 மணி போலவும் கொண்டாட்டத்திற்குரிய
நாளும் 8:00 ஆகவும் இரவு 12 மணியாகும்
மாறி மாறி கடந்து போகும்
ஒரு நாளாக இருக்குமே தவிர
ஒரு கொண்டாட்டத்திற்குரிய நாளாக திருப்திப்பட்டுக் கொள்ள
முடியாது. அதிக சோர்வுடன் நீங்கள்
காணப்படுவீர்கள். நான்கு நாட்கள் விடுமுறை
எடுத்துக் கொண்டு மீண்டும் அலுவலகம்
செல்லும் பொழுது அதிக களைப்புடன்
அலுவலகம் செல்வீர்கள். நான்கு நாட்கள் ஐந்து
நாட்கள் கொண்டாடி
முடித்து விட்டு ஆறாவது நாள் வேலைக்கு செல்லும் பொழுது அதிக களைப்புடன்
மலைப்புடனும் வேலைக்கு செல்வீர்கள். ஆக, வெளியிலிருந்து செய்யும்
சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேலைப்பாடுகளும் உங்களை முழுமையாக கொண்டாட்டத்திற்குரிய
ஆளாக மாற்றி இருக்கிறதா? மாற்றுமா?
என்றால் அப்படி மாற்றாது. அப்படி
மாற்றும்படியான கற்பனை இருந்ததென்றால் அதையெல்லாம்
தூக்கி உடைத்துவிட்டு, உங்களைப் பற்றி இந்த கொண்டாட்டத்திற்குரிய
நபராக நான் இருக்கிறேனா? அதற்கு
என்ன செய்வது? எது எனக்கு கொண்டாட்டத்தை
கொண்டு வரும்? அதற்கு என்ன
செய்வது? என்பது மாதிரியான கேள்விகளை
உங்களுக்குள் கேட்டுப் பார்க்க துவங்கி விட்டீர்களேயானால்
நீங்கள் கொண்டாட்டத்தை நோக்கி நகரும் ஒரு
நபராக மாற முடியும். ஒட்டு
மொத்த வாழ்க்கையும் அப்படியான கொண்டாட்டத்தை உங்கள் மேல் பொழிந்து
கொண்டே இருக்கிறது. உங்கள் மேல் ஆசீர்வதித்துக்
கொண்டே இருக்கிறது. எப்பொழுதும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் உங்களுடன் காத்துக்கொண்டு இருக்கிறது. அதை கவனிப்பதற்குரிய புத்திசாலித்தனத்தை
நாம் எங்கேயோ தவறவிட்டு இருக்கிறோம்.
அதை எங்கு தவற விட்டோம்
என்பது இப்பொழுது பிரச்சனை அல்ல. நாம் தவற
விட்டு விட்டோம் என்பதை கண்டுபிடித்து அதை
மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
பெற்றுக்கொள்வதற்கான புத்திசாலித்தனத்தையும் அந்த கவனத்தையும் உங்களை
நீங்களே நேசிக்கிற நேசிப்பையும்
கைகொள்வதற்கு மேற்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்
என்பதனை உங்களுக்குள் நீங்களே யோசிப்பது மட்டும்
தான் உங்களை கொண்டாட்டத்திற்குரிய ஆளாக தகுதிப்படுத்துவதும்,
கொண்டாட்டத்திற்குரிய ஆளாக மாற்றிக் கொள்வதும்
மகிழ்ச்சிக்குரிய ஆளாக மகிழ்ச்சியை சிலாகித்து
கடந்து போகிற ஆளாகவும் நீங்கள்
உருவாவதற்கு இருக்கிற ஒரே வாய்ப்பு இது
ஒன்று மட்டுமே.
ALSO READ:SUICIDE(தற்கொலை)
உங்களைப் பற்றிய கவனம், உங்களுடைய மன ஓட்டம் பற்றி, உங்கள் உடல்நிலையைப் பற்றி, உங்களுக்கும் பிறருக்கும் இருக்கிற உறவுகள் பற்றி, உங்கள் வேலையில் உங்களுக்கு இருக்கிற களைப்பு பற்றி, உங்கள் வேலையை களைப்பில்லாமல் செய்வதற்கு உங்களுக்கு தெரிந்த சுருக்கமான விதிமுறைகள் பற்றி, பூரணமான முழுமையான கவனம் உங்களுக்கு ஏற்படுமேயானால் நீங்கள் செய்கிற ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு கொண்டாட்டமாகவும்(celebration) உங்களைச் சுற்றி இருக்கிற நபர்களுக்கு கொண்டாட்டமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை விட அது கொண்டாட்டமாக மட்டுமே இருக்கும். கொண்டாட்டம் என்பது வெறுமனே விடுமுறை நாட்களிலும் சடங்குகளிலும் நீங்கள் வீட்டில் செய்து சாப்பிடுகிற பலகாரங்களிலும் இல்லை. நீங்கள் சொல்லிக்கொள்கிற வாழ்த்துச்செய்திகளில் இல்லை. நீங்கள் அனுப்புகிற குறுஞ்செய்திகளில் கொண்டாட்டங்கள்(celebration) இருக்காது. மகிழ்ச்சி இருக்காது. இவையெல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிற உங்களை நீங்களே தவறாக புரிந்து கொள்கிற ஒரு செயல்பாட்டு வடிவம். உங்களுடைய செய்திகள் வழியாக உங்களுடைய வாழ்த்து செய்திகள் வழியாக இன்னொரு நபருக்கு மகிழ்ச்சி போகிறதா என்பது ,மகிழ்ச்சியை அவ்வறு கடத்த முடியுமா? என்பது நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டி உள்ளது. அந்த வகையில் கொண்டாட்டம் என்பது உங்களைப் பற்றிய உங்களின் கவனமும் உங்களைப் பற்றிய உங்களுக்கு தெரிந்த செய்திகளும் உங்களை குறித்து நீங்கள் செய்ய வேண்டியது செய்யக் கூடாதது என்ன? என்பது பற்றிய போதுமான அறிவும் நுட்பமும் புத்திசாலித்தனமும் மட்டும் தான் உங்களை மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் வைத்திருக்கும். அந்த மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் புத்திசாலித்தனத்தோடு பெற்றுக்கொள்வதற்கு, பெற்றுக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்வதற்கு உங்களை தயார் படுத்துங்கள். கொண்டாட்டம்(celebration) உங்கள் கூடவே எப்பொழுதும் இருக்கும். மகிழ்ச்சி எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கும்.
No comments:
Post a Comment